Site icon வே. மதிமாறன்

இப்போது அம்பேத்கர் இருந்தால் அசிங்க அசிங்கமா கேட்டிருப்பார்

இயல்பாகவே தலித் மக்களின் வாழ்க்கை முற்போக்கானது. இந்து – ஜாதி – பார்ப்பன பண்பாட்டு எதிர்ப்பு தலித் மக்களின் வாழ்வியல்.
எந்த நிகழ்ச்சிக்கும் பார்ப்பனர்களை அழைக்க மாட்டார்கள்.

ஆனால், பார்ப்பனப் பண்பாட்டுக்கும் பார்ப்பன அடிமையாகவும் இருப்பதோடு, தனக்கென்று தனிப் பண்பாடற்றவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்காரர்களும். இவர்கள் பார்ப்பன புரோகிதம் பார்ப்பன ஆலோசனை இல்லாமல் பல்லுகூட விளக்க மாட்டார்கள். (நல்ல நேரம் குறிப்பது)

இவர்கள் நடத்துகிற தலித் மக்கள் மீதான வன்முறையே பார்ப்பனியத்தைப் பாதுகாப்பதற்காகத்தான்.
‘ஜாதியை கீழிருந்து தகர்க்க முயற்சிக்கும்போதெல்லாம் அதைப் பாதுக்காக்கிற காவல்துறையாகத் தீண்டப்படாத மக்கள் மீது வன்முறை நிகழ்த்துகிறவர்களாக இருக்கிறார்கள் சூத்திரர்கள்’ என்பார் டாக்டர் அம்பேத்கர்.

அதனால்தான் பெரியார் பார்ப்பன எதிர்ப்பை தலித் மக்களிடம் பேசாமல் பிற்படுத்தப்பட்டவர்களிடமே பேசினார்.

ஆனால், இன்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பல அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், வசதியானவர்கள், தலித் அரசியல் பேசுகிற அறிவாளிகள், பணக்காரர்கள்;

பிற்படுத்தப்பட்டவர்களைப்போல் பார்ப்பன அடிமையாக வாழ ஆசைப்பட்டு இந்து பார்ப்பன சடங்குகள் வைத்துத் திருமணம், கிரகப் பிரவேசத்தில் ‘கணபதி ஹோமம்’ நடத்துகிறார்கள்.

இந்நேரம் அம்பேத்கர் உயிரோடு இருந்தால் அசிங்க அசிங்கமா கேட்டிருப்பார்.

Exit mobile version