Site icon வே. மதிமாறன்

கள்ளப் பணமல்ல..

கூலித் தொழிலாளியின் வார சம்பளத்தைப் பிளேடு போட்டு அறுத்தெடுத்தவன், கண்ணீர் மல்க பெருமையோடு சொல்றான்: ‘நான் கள்ளப் பணத்தைக் கைப் பற்றி விட்டேன்’ என்று.
13 November at 23:05

1979 ல் மொராஜி தேசாய் ‘1000 ரூபாய் நோட்டு செல்லாது’ என்று அறிவித்தார். அது வெற்றி பெற வில்லை. ஆனால் அதனால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்படவில்லை.

ஏனென்றால் அன்று 1000 ரூபாய் நடுத்தர வர்க்கம், தொழிலாளர்களின் சம்பளம் கிடையாது. மாதம் 500 ரூபாயே அதிகச் சம்பளம். பலர் 1000 ரூபாய் நோட்டை பார்த்ததே கிடையாது. 1000 அதிகார வர்க்கத்தின் சம்பளம்.

இன்று நிர்வாகத் திறமையற்ற அரசால் 500 மட்டுமல்ல 1000 ரூபாயும் மதிப்பற்றுக் கிடந்தது. ஆயிரம் ரூபாயை தவிர்த்து புழங்குவது தெருவில் மீன் விற்பவராலேயே முடியாது. அப்படியானால் அய்நூறு எவ்வளவு சிரமத்தை ஏற்படுத்தும்?

இந்த எளிய உண்மை ‘மோடி அரசுக்குத் தெரியாமல் இருக்கும்’ என்பதை நடிகர் சோ வே நம்ப மாட்டார். 500 ரூபாயையும் தடை செய்யதது, மக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டது.
13 November at 23:05

தமிழக மக்கள் செல்லாத ரூபாய்களை வைத்துக் கொண்டு படுகிற வேதனை குறித்து ஒன்றுமே சொல்லாமல், இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டுப் போட சொல்லி அறிக்கை வருகிறது என்றால்;

சந்தேகமே வேண்டாம் அது நம்ம முதல்வர் அம்மா, அவரே கொடுத்த அறிக்கைதான்.
13 November at 23:05

கொடுமை செய்றது ‘இந்து’ மோடி, திட்டுறது ‘துக்ளக்’ முஸ்லிமையா?
*
மிக மோசமான இந்து – ஜாதி வெறி அரசைக்கூட ‘துக்ளக் அரசு’ என்று இஸ்லாமிய அரசோடு தொடர்புபடுத்தி விமர்சிப்பதும் கூட ஜாதி இந்து மனோபாவம் தான்.

துக்ளக், இஸ்லாமியரல்லாதவர்கள் மீது தன் மதக் கருத்தை திணிக்கவில்லை, மற்ற மதங்களின் வழிபாட்டுத் தளங்களை இடிக்கவில்லை. அடுத்த மதக்காரன் என்ன சாப்பிட வேண்டும் என்று ரெசிபி போட்டு மாட்டுக்கறியை தடை செய்த இவர்களைப் போல் அவர்;
பன்றி இறைச்சியைத் தடை செய்தவர் அல்ல.

‘துக்ளக் அரசுதான் இந்தியாவிலேயே மிக மோசமானது’ என்று விமர்சிப்பதும் பார்ப்பனிய மனோபாவம். அதற்குச் சாட்சி வேண்டுமா? ‘துக்ளக்’ சோ.
15 November

இந்த சூழலிலும் மல்லையாவின் 1201 கோடியை தள்ளுபடி செய்து எளிய மக்களை அவமானப்படுத்திய எஸ். பி. ஐ வங்கிக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த வங்கியில் உள்ள என் கணக்கை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

என் அக்கவுண்டில் இருக்கிற 650 ரூபாயை திருப்பிக் கொடுப்பாங்களா? இல்லை மல்லையா மாமியாருக்குச் சீதனமா கொடுத்துடுவாங்களா?

18 November

Exit mobile version