Site icon வே. மதிமாறன்

உதயகுமார் கைது முயற்சி; தமிழக அரசின் தந்திரம்

‘அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது திட்டமிட்டத் தாக்குதல், போராட்டக்காரர்கள் மீது வழக்கு, உதயகுமார் உள்ளிட்ட அமைப்பாளர்களை கைது செய்தே தீருவது’  இதுபோன்ற நெருக்கடிகளின் மூலமாக, போரட்டக்கார்களை திசை திருப்புகிற முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஜெயலலிதா அரசு.

அதற்கு துணையாக பத்திரிகைகள், உதயகுமாரை ஒரு மர்மமான நபராக சித்திரித்து, ‘உதயகுமார் சதி அம்பலம், உதயகுமாரை பிடிக்க போலிஸ் திணறுகிறது. கடலுக்குள் தப்பி ஓட்டம்’ என்று மட்டமான மர்ம நாவலைப்போல் செய்திகள் வெளியிடுகிறது.

தங்கள் போராட்டத்தை அணுஉலை எதிர்ப்பிலிருந்து மாற்றி, `உதயகுமாரை பாதுகாப்பது, தங்கள் மீது போடப்படும் பொய்வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்’ என்று கோருவது  என இவைகளை முதன்மைபடுத்தி போராடுவதின் மூலமாக அணுஉலை எதிர்ப்பை திசை திருப்பி அதை இரண்டாம் கட்ட பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கிறது தமிழக அரசு.

தொடர்புடையவை:

மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு: அன்று புரட்சித் தலைவர் இன்று புரட்சித் தலைவி

மீனவர்களுக்கான தமிழகரசின் சலுகையும், கூடங்குளம் அணு மின் எதிர்ப்பு உரிமையும்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பும் 8 மணிநேர மின்வெட்டு எதிர்ப்பும்

அணு உலை பாதுகாப்பானது; அந்த அய்யப்பனே நம்ப மாட்டான்!

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

Exit mobile version