தனிப்பட்டமுறையில் ஒருவரை ஒரு விசயத்தை விமர்சிப்பதால், ஆதரிப்பதால் ‘பணம், பொருள், ஊடக வெளிச்சம்’ என லாப, நஷ்டம் கணக்குப் பாரத்து எழுதுகிற ‘கணக்காளன்’ அல்ல நான்.
வெறும் தேர்தல் அரசியலும், அற்ப இலக்கியப் பின்னணியையும் கொண்டு எழுதுவபன் அல்ல நான்.
எதை ஆதரிப்பதாக,எதிர்ப்பதாக இருந்தாலும் பெரியார், டாக்டர் அம்பேத்கர், மார்க்ஸ் இவர்களின் சிந்தனையின் பின்னணியில் தான் செய்கிறேன். அதற்காக நான் நிறைய மெனக் கெடுகிறேன்.
டாக்டர் அம்பேத்கர், பெரியார் மீது அவதூறு செய்தால் அதற்கு எதிராக தொடர்ந்து இயங்குகிறேன். அதனால் தோழமையானவர்களிடமும் நிறைய விரோதமும் தேடிக் கொள்கிறேன்.
ஜாதி, இந்து மதம் குறித்த என்னுடைய எழுத்துக்கள் ஆய்வு கண்ணோட்டம் கொண்டவை.
கலை, இலக்கியம் குறிப்பாக திரைப்படம், இசை குறித்த என்னுடைய ரசனையும், விமர்சனமும் அத்தகையதே.
உறுதியாக சொல்வேன் அவை தனித் தன்மை கொண்டவை. அதுவரை யாரும் பார்க்காத கண்ணோட்டமும் கூட.
அப்படி எழுத வேண்டிய தேவையிருந்தால்தான் எழுதுவேன்.
இப்படி எழுதுகிற, இயங்குகிற என்னை கொண்டுபோய், சுஜாதா ரசிகர் மன்றத் தலைவரும் பிரபல எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் கூட சேர்த்துப் பட்டியல் போட்டா வருத்தமா இருக்காதா?
*
June 6 அன்று facebook ல் எழுதியது.
உங்களின் உலகத் தரம் வாய்ந்த பட்டியலில் தயவு செய்து சேர்த்து விடாதீர்கள்
சுஜாதாவும் சுஜாதா வைப் போன்றவர்களும்..
சாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்? திமுகவால் நேர்ந்த..
‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

