பெண்கள், தங்கள் உருவத்தை மற்றவர்கள் புகழ்வதை விரும்புவார்கள். ரசிப்பார்கள். ‘நீங்க சும்மா சொல்றீங்க..’ என்று ‘சும்மா’ மறுப்பதின் மூலம் தங்களை இன்னும் கூடுதலாகப் புகழத் தூண்டுவார்கள்.
ஆனாலும்
எந்தப் பெண்ணும் தன் உருவத்தைத் தானே புகழ்ந்து அடுத்தவர்களிடம் பிரச்சாரம் செய்வது கிடையாது.
சினிமாவில் மட்டும் பெண்கள் பாட்டுப் பாடும்போது, தங்கள் உருவத்தை ‘கொடியிடை, இளநீர், கோவை இதழ், மாங்கனி, திராட்சை, இதழ் அமுதம் – தேன், மயில், வீணை’ என்று தன்னைத் தானே புகழ்ந்து பாடுகிற கோமாளிகளைப்போல் சித்தரிக்கிறார்கள் இந்தக் கவிஞர்கள்.
இதுபோன்று அற்பத்தனமாக ஒரு பெண் தன்னைப் புகழ்ந்து பாடிக் கொள்வதைப் போல் எழுதுவதில் கண்ணதாசனே முதன்மையானவர். கவிதைக் கோமாளிகளில் அவரே முதன்மை.
23 June
பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!
