Site icon வே. மதிமாறன்

தலைவரும்.. ரமணனும்.. அபசகுனமும்

தலைவர் ஊர்ல இருந்தா.. இந்நேரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ‘உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு’ எவ்வளவு உதவியா இருந்திருப்பார்.

வரட்டும்.. வந்த உடனேயே கண்டிப்பா செய்வார்; ஏற்கனவே உள்ள பழைய பாக்கியான தன் மகளின் திருமணத்திற்கான அரைப் பிளேட் பிரியாணியும்.. நதிநீர் இணைப்பு ஒரு கோடியும் பின்னே வெள்ள நிவாரணமும்.

எப்பவுமே ஏழைகள் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தலைவர் இப்பகூட மலேசியாவில்.. பணக்காரர்களுக்கு எதிராகவும் ஏழைக்களுக்கு ஆதரவாகவும் ‘பன்ஞ்’ டயலாக் பேசிக்கிட்டுதான் இருப்பார்.
21 November at 23:08

‘பெய்யன பெய்யும் மழை’ – பெண்பாலுக்குச் சொல்லியிருந்தாலும் வள்ளுவர் சொன்னது, நம்ம வானிலை அறிக்கை ரமணனுக்குத்தான் பொருந்துகிறது.
சூழலை புரிந்து.. முன்கூட்டி நடக்கப்போறத எச்சரிக்கையா நாம சொன்னா, ‘வாய வைச்சிக்கிட்டு சும்மா இரு..அபசகுனமா பேசாதே’ என்பர்களே..
ஒருவேளை ரமணன் ‘இன்னும் இரண்டு நாட்களுக்குக் கனமழை பொழியும்’ என்று முன்னாலேயே அபசகுனமா..சொல்றதினால் தான் மழை பெய்யுதோ..?
24 November at 18:39

Exit mobile version