வர்க்க ரசம் சொட்டும் காதல் உணர்வு;மருதகாசி
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே – மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
ஆண் : கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே – அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே – மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
பெண் : முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே – மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
–கவிஞர் மருதகாசி.
மழையில் தன் வீடு ஒழுகும்போது, காதலனும் காதலியும் இரவு தூக்கத்தைத் தொலைத்துப் பாடுகிற பாடல். இவனல்லவா கவிஞன்.
ஆண் : பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே – முகம் சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ?’ – மருதகாசி.
கோபத்தில் சிவக்கிற தன் காதலியின் முகத்தை தன் தொழில் சார்ந்து ஒப்பிடுகிற காதலன். என்ன ஒரு வர்க்கப் பார்வை? மருதகாசி – எளிய மக்களின் பிரபல வார்த்தைகள்.
கண்ணதாசனுக்காக தமிழர்கள் செய்த ‘தியாகம்’
ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்
கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..