‘சாக்கடையள்ளுபவர்கள் இழிவானவர்கள்,’ எவ்வளவு திமீர்?
சென்னையையே சாக்கடையாக்கி ‘உயர்’வானவர்களையும் குப்புறத் தள்ளியது மழை.
சாக்கடையைப் பார்த்தாலே மூக்கை பொத்தி முகம் சுளிக்கிற நான்; மழைநீரை மடைமாற்றி வீடுகளுக்குள் அனுப்பிய சாக்கடை அடைப்பை இறங்கி சுத்தம் செய்தேன்.
பகுதி பொறுப்பாளர்களோடு இணைந்து தேங்கிய நீரை வெளியேற்ற நகராட்சியோடு சண்டையிட்டேன். வேண்டிக் கேட்டுக் கொண்டேன். ஒருவழியாக ரோட்டையே சின்னாபின்னப்படுத்தி, கால்வாய் வெட்டியாகிவிட்டது.
6-12-2015 இரவு 12.30 மணிவரை சாக்கடை சகதிகளிலேயே சுற்றித் திரிந்தேன். இப்போது சாக்கடை நாறுவதில்லை எனக்கு. காரணம் அதனுள் என் உழைப்பிருக்கிறது.
7 December at 19:51
நான்கு நாட்களாக சென்னை வானொலி நிலையம் ‘வீட்டருகே மழை நீரை தேங்க விடாதீர்கள். மழை நீரில் கால் வைக்காதீர்கள்’ என்று தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டே இருந்தது.
எவ்வளவு நக்கல்?
9 December at 19:51
‘அரசு சரியான முறையில் செயல்படவில்லை’ என்கிற எந்த அரசியல் கட்சிகளும் அரசை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடவில்லை. பாதிக்கப்பட்ட மக்களே அமைச்சர்கள் அதிகாரிகளை எதிர்த்து போராடிய போதும் அதில் கலந்து கொள்ளவும் இல்லை.
மக்களை கையேந்த வைத்து, பாதிக்கபட்ட இடத்திலேயே விட்டுச் செல்வதில்தான் அரசும் அரசை குறைசொல்லுகிற திமுக – 3 வது அணி உட்பட எல்லாக் கட்சிகளும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
‘அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை’ என்று எல்லா எதிர்க்கட்சிகளும் அறிக்கை விட்ட பிறகும் அதிமுக சேர்மன்கள், கவுன்சிலர்களுக்கு எதிராக போராடாமல்,
அவர்களுடன் இணைந்து எல்லாக் கட்சி கவுன்சிலர்களும் ஒற்றுமையாக பாதுகாக்கிறார்கள்.
யாரை பாதுகாக்கிறார்கள்? என்ன நடக்குது? என்னமோ நடக்குது.
9 December
தங்கள் பகுதிகளில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற மக்களே அரசுக்கு எதிராகப் போராடிதான் பெற்றிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களில் எதிர்க்கட்சிகள் பார்வையாளர்களாகக்கூட கலந்துகொள்ளவில்லை.
9 December
