‘எவனாவது ஒருத்தன் அரசியல விட்டு போகாதீங்ன்னு.. சொல்லுவான்னு பாத்தா… பயபுள்ளைங்க போகும்போதுகூட அசிங்கமா திட்டி வழியனுப்புதுங்க.. ரொம்ப திட்டாதீங்க.. அப்புறம் திரும்பி வந்துடுவேன்’
*
உங்களையெல்லாம் அறிவாளி ன்னு சிறப்புக் கட்டுரை எழுத வைச்ச பத்திரிகையாளர்கள் மாதிரி வெவரமில்லாதவர்கள் அல்ல மக்கள்;
தெளிவானவர்கள்.
ஆமாம், இப்படி ஒருத்தர் இருப்பதே மக்களுக்குத் தெரியாதே. அப்புறம் எதற்கு ‘அரசியலில் இருந்து வெளியேறுவதாக’ அறிக்கை.
உங்கள ஆதரிக்கிற அந்த வெவரமான 4 பத்திரிகையாளர்கள் கவனத்திற்கா? இத வெச்சும் விளம்பரமா?
*
ஜுனியர் விகடனில் ‘திராவிடர் இயக்க எதிர்ப்பு’ தொடர் எழுதியதாலேயே உங்களை ‘தலைவர்’ என்று ஜுனியர் விகடனும் நீங்களும் இன்னும் 3 பேரும் கருதலாம்.
ஆனால் அதனாலேயே மக்களும் உங்களுக்கு ஓட்டுப் போடுவாங்கன்னு நினைக்கிறதும்.. அப்புறம் கோச்சிக்கிட்டு ‘அரசியலை விட்டு போறேன்..’ என்று மக்களை வசைப்பாடுவதும்..
இதைக் கோமாளித்தனம் என்று கூட சொல்ல முடியாது. மக்களை மூடர்களாக கருதுகிற திமிர். மனநோய்.
தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு …
ஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..
