
‘அபசகுனம்’ என்று பதிப்பகத்திற்குப் பெயர் வைத்தோம். பார்ப்பன ‘தினமணி’ பார்ப்பனரல்லாத ‘தினத்தந்தி’ பகுத்தறிவு டச் சஸ் – பார்ப்பன‘ஜுனியர் விகடன்’ இவற்றிற்குப் புத்தகங்களை அனுப்பி வைத்தோம்.
‘ச்சீ இதெல்லாம் ஒரு புக்கா?’ என்றோ ‘வரப்பெற்றோம்’ ‘அறிமுகம்’ என்றும் கூட அவர்கள் வெளியிடவில்லை. ‘சகுனம் சரியில்ல’ என்று கருதி இருப்பாங்களோ?
குமுதம்; செட்டியார் – அய்யங்கார் கூட்டணியா இருக்கும்போதே.. என்னைய ஒரு பொருட்டாவே மதிக்காது. இப்ப சொல்லவே.. வேணாம். அதனால புத்தகம் அனுப்பல.
‘ஆனந்த விகடன்’இப்ப இல்ல.. எப்பவுமே என்னை அபசகுனமாகவே பார்க்கும்.
என் நூல் அறிமுகம் கூட அல்ல.. என்னுடைய இணையப்பக்கம் அறிமுகம் கூட அது வெளியிட்டது இல்ல.. ‘மதிமாறனா அது யாரு?’ என்று கேட்பதற்குக் கூடத் தயார் இல்ல..
இத்தனைக்கும் ‘இவை’ எல்லாவற்றிலும் எனக்கு ‘நல்லா’ தெரிஞ்சவங்க தான் பொறுப்பல இருக்காங்க.
இருந்தாலும், இவ்வளவு புறக்கணிப்புகளையும் தாண்டி,
என் புத்தகங்கள் ஒரே ஆண்டிற்குள் விற்று விடுகிறது, மூன்றாம், நான்காம் பதிப்பாக இருந்தாலும். அன்பிற்கினிய தோழர்களின் ஆதரவுடன்.
தோழமை எல்லாவற்றையும் விட வலிமையானது.
3 May at 22:14
தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை
‘ஜாதித் தொடரை விலக்கு’ குமுதம் மீது வழக்கு
இதுதான் ஆனந்த விகடன்-குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை
