என்ன செய்து கிழித்தார் பெரியார்?

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்

*

“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

*

“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிராமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

-வே. மதிமாறன்
***
பேராசரியர் சுபவீ  நடத்திய ‘இனி’ மாத இதழுக்காக
1993 அக்டோபரில் எழுதியது.
தந்தை பெரியாரின்  பிறந்தநாளை முன்னிட்டு இந்தக் கவிதை மறுபிரசுரம் செய்யப்படுகிறது

தொடர்புடையவை:

பெரியாரின் ஊழல்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

 யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம் =பெரியார் எதிர்ப்பு
*
 
தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

32 thoughts on “என்ன செய்து கிழித்தார் பெரியார்?

  1. உங்களின் அனுமதியோடு இக்கவிதையை என் வலைப்பூவில் பதியலாமா?

  2. தந்தை பெரியாரைப் பற்றி தரமற்றவர்கள் மூலம் கேள்விப் பட்ட தறுதலைகள், நம் மொழியில் படித்த பாமரன்கள், தாம் புரிந்துகொண்ட தரமற்றவைகளை தரமானதெனக் கருதி தாம் ஒரு அரைகுறை என்று தமுக்கு அடிக்கும் சிலதுகளின் செவுளில் ஓங்கி அறைவது போன்று உள்ளது நண்பர் மதிமாறன் அவர்களின் இந்தக் கவிதை. மறுபதிப்பு தானென்றாலும் மறுபடியும் பதிக்க வேண்டிய காலமிதுவாகையால் உற்ற நேரத்துக்கு வெளியிட்ட மதிமாறன் அவர்களூக்குப் பாராட்டுக்கள்!
    மூன்றாம், நான்காம் தலைமுறையினருக்கு தந்தை பெரியாரை அறிமுகப் படுத்தவோ, இன்றைய மோசமான, மூடத்தனமான சூழ்நிலையில், பெரியாரின் தேவை குறித்து விளக்க யாரும் முன்வருவதாகத் தெரியவில்லை. நான்காம் தலைமுறையினருக்கு தந்தை பெரியாரை சுத்தமாகத் தெரியாது போகக் கூடிய ஆபத்து இருக்கிறது. இதை பெரியார் திராவிடர் கழகம் கருத்தில் கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். காசிமேடு மன்னாரு 789 வேர்டு ப்ரஸ்.காம். kasimedumannaru789wordpress.com.

  3. தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர், தமிழினத்துக்கென இறுதி வரை ஓய்வற்று உழைத்த தமிழினப் போராளி அய்யா தந்தை பெரியார் அவர்கள் பிறந்த தின நல் வாழ்த்துக்களை எம் தமிழர்களோடு பகிர்ந்து கொள்வதில் உவகை அடைகிறோம்! காசிமேடு மன்னாரு. kasimedumannaru789wordpress.com

  4. தங்களுடைய இந்தக் கவிதை என் சிறு வயது முதலே, எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது, இப்போதும் ஏற்படுத்திவருகிறது, இக்கவிதையை துவக்கமாகக் கொண்டே ‘என் பார்வையில் பெரியார்’ எனும் கட்டுரையை எழுதினேன். இதே தலைப்பிலேயே பலரையும் கட்டுரையை எழுதச் செய்து தொகுக்க எண்ணியிருந்தேன், தங்களுக்கும் மின்னஞ்சல் செய்திருந்தேன். குறுகிய காலத்தில் தோன்றிய யோசனை என்பதால், பல கட்டுரைகளையும் இன்று பதிவிட முடியாமல் போய்விட்டது, இப்போதைக்கு 6 கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறேன், 20 தேதிக்குள் குறைந்தது 10 கட்டுரைகளாவது தொகுக்கப்பட்டுவிடும்.

  5. நான்தமிழன்.திராவிடன்அல்ல.
    தமிழா,
    பள்ளனாய், பறையனாய்,
    நாடானாய், தேவனாய்,
    வன்னியனாய், பரவனாய்,
    பிள்ளையாய், கவுண்டனாய்,
    மள்ளனாய், குயவனாய்……
    வாழ்ந்தது போதும்.
    வா – தமிழா
    தமிழனாய் வாழ்வோம்.
    வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
    “பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
    தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி ”
    ”தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!

  6. ஆரியர்களின் ஆதிக்கமும் அண்டை மாநிலத்தவர்களின் ஆதிக்கமும் தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் தமிழகத்தில் பியைக்க வந்தவர்கள். அவர்களின் ஆத்திகத்திற்கு காரணம் தமியர்களின் ஒற்றுமை இன்மை தான். நீ தமியனாக இருந்தால் உன் முன் தமியனுக்கு ஏற்படும் சுய்சிகளை எதிர்கொள் தமியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா………////

  7. ஐயா இந்த கவிதையில் சில வார்த்தைகளை சேர்த்து கொண்டால் இன்னும்
    நன்றாக இருக்கும்
    தந்தை தொழிலில்
    இருந்து தப்பித்து
    வெள்ளைகார பெண்மணியை
    காதலித்து கொண்டிருக்கும்

    முதலியார் பெண்ணை திருமணம்
    செய்து கொண்ட முடி
    வெட்டும் தோழரின் மகனான

    பிராமண பெண்ணை திருமணம்
    செய்து கொண்ட
    இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
    தன் விதவை மகளின்
    இரண்டாம் திருமணத்தை நடத்திய கையோடு
    மொட்டையடித்த தன சஹோதரியிடம்
    ஆயிரம் பெரியார் வந்தாலும் நம் சாஸ்திர சம்பிரதாயங்களை
    ஒன்னும் பண்ண முடியாது என்று
    பெருமை பேசி கொண்டிருந்தார் ஐயங்கார்

  8. brothers, 400 years before more telugans are came to tamilnadu. You all know PERIYAR is also born as a telugan, but he is remains as a tamilan in our history. Most of the telugu people who are came here before 400years, now they are studying feeling breathing tamil like a tamilan, why dont you understand their feelings. Till now you are telling these peoples are from andra or some other place, you have accepting PERIYAR as a tamil leader, then why you are neglecting the rest, for example i was born as nayakkan, but i know only tamil to write and read, i know telugu after i go to Hyderabad, Also i have another example Mr.Vai.KO also born as kammavar, but he is fighting for the rights of tamilnadu in mullai periyar, kudakkulam & sterlite . If you have feeling like this why you are supporting Mr.VAIKO when he came in the picture, please dont tell like this anty more its my humble request., if i told anything wrong forgive me., becz all the time when i saw the comments like this., i cant control my feelings becz i was born in tamilnadu and breathing & living like a tamilan…

  9. pe riyar is a kannadian. karunanithi telungan. but iam tamilan.
    பெரியார் கன்னடர் என்றால் நாங்கள் கன்னடர் தமிழ்ன் என் பெசும் வெங்காயங்களுக்கு….

  10. periyar nayakkar endra avar vandheriya?

    all tamil desiya vijaathikalayum oru murai D.N.A test pannungo appathan yarr tamilan ena theriyum

  11. தமிழர்கள் அரசியலில் சம பங்கும், மலையாளி/தெலுங்கர்/கன்னடர் என இனத்தகுதி அடையும், இரட்டை கலையை கொஞ்சம் கற்று கொடுங்களேன்.???

    தமிழகப் பிரச்னைகளுக்காக மீண்டும் போராட்டம்: விஜயகாந்த்

    தமிழர்கள் நலன் காக்கும் இந்த விஷயத்தில் -உங்களுக்கு என்ன வேலை???

    ஹி… ஹி….ஹி… என்னங்க அண்டைமாநிலங்களில் நூற்றாண்டுகளாக வாழும் தமிழர்கள் தனது ஏழு அறிவை பயன்படுத்தி அரசியலில் சம பங்கும், மலையாளி/தெலுங்கர்/கன்னடர் என இனத்தகுதி அடையும், இரட்டை கலையை தமிழர்களுக்கு கொஞ்சம் கற்று கொடுங்களேன். வாழ்க தேசியம்.

  12. தமிழர்களுக்கென்று தனி அப்பா, அம்மா வேண்டுமென்று தானே நாங்கள் கேட்கிறோம்?

    முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை? தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர் இனி இருக்கக்கூடாது.- பாரதிராஜா

    திராவிட அரசியல் வாதி வைகோ அவர்களை யார் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள்? எங்களுக்கென்று தனி அப்பா, அம்மா வேண்டுமென்று தானே நாங்கள் கேட்கிறோம்? இதில் என்ன தவறு கண்டீர்கள்? தர்மம் ஒரு நாள் வெல்லும். வாழ்க பத்திரிகை தர்மம். வாழ்க வையகம்.

  13. சில தமிழர்கள் வெளியில் தமிழ் தாய்மொழியாகவும், அவருடைய வீட்டில் அண்டைமாநில மொழி உள்ள அக் மார்க் தமிழர்களாக இருப்பது, அவர்கள் தரப்பிலும்,தமிழ் கலா ரசிகர்கள், தரப்பிலும் சரியென்றே அவர்களுக்கு படுகிறது.

    தமிழர்கள் தன்னைத்தானே ஏமாற்றி கொள்ளாமலிருக்க கடைபிடிக்கவேண்டிய :

    1)நாம் முதலில் தமிழன், பிறகு இந்தியன் என்று நினைத்தல் வேண்டும்.

    2) திராவிடம்/ திராவிடர் என்று சொல்வதை நீக்கி விட்டு எல்லோரும் தமிழர்கள் என்று நினைக்க வேண்டும்.

    3)ஆதிக்கம்/நாத்திகம் அவரவர் மனதளவில் இருக்க வேண்டும், அது நமது தமிழ் ஒற்றுமையைக் கெடுத்து விடக்கூடாது.

    4)வரிசெலுத்தும் நாம்,வரிச்சலுகை பெற்று நடத்தும் எல்லா நிறுவனங்களில்- தமிழ் மக்களின் பங்கு எவ்வளவு என்று தெரிந்து, அந்நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும்.

    5) தமிழ் வளர்க்க பயன்படாத மீடியாக்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்.

    6)காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதன் பொருளுணர்ந்து நடக்க வேண்டும்.

    மேல் குறிப்பிட்ட இவைகளை கடைபிடிக்க முடியாவிட்டால், நாம் இம்மண்ணில் ROYAL கொத்தடிமைகளாக வாழும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  14. தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா?

    அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்களை சீண்டிவிட்டது யார்? /சிந்திக்க வைத்தது
    எது??? வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    வாழ்க அறம் வளர்த்த தமிழகம்!
    வாழ்க இன உணர்வு!

    ஹி… ஹி…ஹி…
    என் அருமை திராவிடத் தமிழா!!!
    நாங்க உங்க வீட்டிற்கு வரும் போது எனக்கு என்ன கொடுப்பாய் என கேட்பதும் ;
    நீ எங்கள் வீட்டிற்கு வரும்போது என்ன கொண்டு வந்தாய் என்பதும் எப்போதும் திராவிடர்களாகிய நாங்கள் கடை பிடிப்பது தானே??? இப்பொழுது
    ஏன் நீ சிந்திக்க ஆரம்பித்து விட்டாய்???

  15. பெரியார் தமிழ்த்தேசியம் பேசினால் அது சரி. தமிழன் பேசினால் அது தவரறா?- Dr. V. Pandian….

    நன்றாகச் சொன்னீர்கள். எத்தனை பேருக்கு புரியபோகிறது???

    தமிழன் நெல்லுக்காக இரைத்த நீர் எத்தனை சதவிகிதம் தமிழனை சேர்க்கிறது என்று கேட்ட ஒரே தலைவன் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே?? என்ன செய்வது – எல்லாருக்கும் பேராசை- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிய மறுக்கிறார்களே???

    கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்??? DK/ DMK – கட்சிகளை TK/TMK என்று மாற்ற அடம் பிடித்தால்- இருக்கும் மற்றவர்களும் சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு. தமிழா இன உணர்வு கொள்.

  16. தில்லி தழிழ்ச் சங்கம் நடத்தும் இசைப் போட்டிகள்

    புது தில்லி, டிச.24: தில்லித் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் விழா போட்டிகளை நடத்தவுள்ளது. நாளை டிச.25 காலை 10 மணிக்கு 6,7,8ம் வகுப்புகளுக்கும், காலை 11 மணிக்கு 9,10 ஆம் வகுப்புகளும், பகல் 12 மணிக்கு 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் என்று இசைப்போட்டிகளை நடத்தவுள்ளதாக சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலுக்கு… பி.ராகவன் நாயுடு : 9891816605, எம்.ஆறுமுகம்:9868530644, பி.ராமமூர்த்தி: 9968328116, ஏ.வெங்கடேசன்: 9313006908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
    கருத்துகள்
    தமிழ்ச் சங்கமா? நாயுடுகள் சங்கமமா?? தமிழ் இசை எப்படி வளரும்??? ஹி….ஹி….ஹி…. அதனால் தாங்கோ செயற்கை முறையில் அண்டை மாநில மக்களின் உதவியுடன் தமிழ் இசையை உருவாக்கி கேட்டு/ரசித்து இன்புறுகிறோம்! – செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!.
    Pl c link:
    http://www.dinamani.com/edition/story.aspx?

  17. தமிழர்கள் கிணற்று தவளைகளாக்கபட்டவர்கள். பெரியார் ஒரு இரட்டை வேடம் பூண்டவர். பிராமணர்களை பற்றி தப்பாக பேசி கடைசியில் ஒரு பிராமண பெண்ணையே இரண்டாம்தாரமாக்கிகொண்டவர் . ஊருகொரு பேச்சு , தனக்கொரு பேச்சு என வாழ்ந்த ஒரு ரெட்டை வேடக்காரன். தமிழக பாமரனுக்கு ஹிந்தி மொழி கிடைக்காமல் செய்து அவனை ஒரு நிரந்தர கிணற்று தவளையாக மாற்றிய தரித்திரன். ஹிந்தி வேண்டாமென்று கூக்குரலிட்ட தலைவர்களின் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் பிரெஞ்சும் ஜெர்மனியும் படிக்க , அவர்களோடு சேர்ந்து குதித்த முட்டாள் தமிழன்.

  18. we all accept that periyar is great leader and warrior. now its time to think about thamzhil thesiyam. thamzhil should be ruled by thamzilian.

  19. […] என்ன செய்து கிழித்தார் பெரியார்? […]

    72 vayasula 26 vayasu pennai thirumanam செய்து கிழித்தார் பெரியார்.

  20. தந்தை பெரியாரை பற்றி தவறாக பேச எவனுக்கும் தகுதி இல்லை. ஜாதி ஜாதி னு வெறி பிடிச்சு அலையிர எவனும் அவரை தப்பா பேசு தகுதி இல்லாதவன். நீங்கலாம் மூட நம்பிக்கையிலே சாக போறிங்கடா…

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading