‘தமிழுக்கு நீச மொழி என்று பெயர்..’ வாழ்க தமிழ்த் தேசியம்.. நல்லா வருவீங்க பாஸ்..

‘தமிழ் நீச மொழி, கோயில் கருவரையில் அர்ச்சனை மொழியாக இருக்க தமிழுக்கு தகுதியில்லை’ என்று தகறாறு செய்தது, செய்வது;

தெலுங்கனா, கன்னடனா, மலையாளியா, இந்திக்காரனா, வெள்ளைக்காரனா, ஆப்பிரிக்க கருப்பின மக்களா, சோமாலியாவில் பட்டினியால் சாகுகிறார்களே அவர்களா?

இல்லை,

தமிழ்த்தேசியம் கொண்டாடுகிறதே, ‘பார்ப்பனர் என்றால் அறிவாளி; அந்தணர் என்றால் உயர்ந்தவர்’ என்று, அந்த அறிவாளியான, உயர்ந்த பச்சைத் தமிழர்களா?

யார் தமிழை இழிவாக நடத்துவது?

தொடர்புடையவை:

தமிழ்த்தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

3 thoughts on “‘தமிழுக்கு நீச மொழி என்று பெயர்..’ வாழ்க தமிழ்த் தேசியம்.. நல்லா வருவீங்க பாஸ்..

  1. பேஷ்..பேஷ்..ரொம்ப நன்னா எழுதியிருக்கேள்.
    அவா..,இவா..,அம்பி, அத்திம்பேர்..,அம்மாமி…ஆச்சார்யாள்,ஜகத்குரு,பரமாச்ச்சார்யாள்,ஜலம்,தூத்தம்,ஆச்சாரம்,அனுஷ்டானம் இப்படி ஏராளமான சுத்தத் தமிழெல்லாம் நமக்குதான் ஓய் வரும்.அதான் இவா…அதான்ன்னா… தமிழ்தேசியம் பேசுறவா,ஒட்டிண்டு ஒறவாடிண்டு இருக்கா.ஆனாலும் பாருங்கோ…இந்த ராமசாமி நாயக்கர் போட்டபோடு எம்மவாளப் படுத்திண்டிருக்கு.இந்த சூத்ராளும் அவா சொன்னத ஞாபகம் வச்சுண்டு கொஞ்சம் சூடு சுரணையோட,அதான் நாயக்கர் சொன்ன சுயமரியாதயோட இருக்கிறதனால இந்த தமிழ்தேசியம் பேசுறவாளோட பேச்செல்லாம் எடுபடல.ஆனாலும்,நம்மளவாவும் புத்துப்புது விபீஷணாழ்வாரப் பிடிச்சுண்டு சூத்ராளுக்குள்ளேயே மோதவிட்டுடுவா.அதான் ஓய்..இப்ப நடக்கறதுண்ணே…என்ன நாஞ்சொல்றது?புரியுதோ நோக்கு?

  2. அது சரி தமிழை காட்டு மிராண்டி பாசை என்று பெரியார் கூறியுள்ளரே, அது பற்றி தங்களின் கருத்து

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading