குமுதத்தின் கயமை

dangers1

-விஜய்கோபால்சாமி

எழுத்தாளர் விஜய்கோபால்சாமி( http://vijaygopalswami.wordpress.com/ ) குமுதத்தின் ஜாதி வெறியை கண்டித்து அல்லது அதன் ஜாதிவெறியை தூண்டும் செயலைக் கண்டித்து நமக்கு இந்தக் கட்டுரையை அனுப்பியிருக்கிறார். ஏற்கனவே ‘நான் தமிழன்’ என்ற தலைப்பில் குமுதம் செய்யும் மோசடியைக் கண்டித்து வழக்கிறிஞர்கள் அனுப்பியிருந்த வக்கீல் நோட்டிசையும் அதை ஒட்டி நம் கருத்தையும் பிரசுரித்து இருந்தோம். இந்தக் கட்டுரையும் அதன் தொடர்பாக இருப்பதாலும், குமுத்தின் ஜாதித் தொடரை மிக ஆழமான கேள்விகளோடு மிக நேர்மையாக, எளிமையாக அம்பலப்படுத்தி எழுதப்பட்டிருப்பதாலும் இங்கே பிரசுரிக்கிறோம்:

குடிப்பதற்குக் காரணம் தேடிக்கொண்டிருக்கும் ஒருவன் சொன்னானாம், “அரிசியிலேயே மெத்தனால் இருக்கிறதே, அதைப் பொங்கித் தின்றால் என்ன நேரடியாக மெத்தனாலைக் குடித்தால்தான் என்ன என்று. அதே போல, குடலிலேயே மலம் இருக்கிறதே, அதற்காக சாக்கடையில் போகின்ற மலத்தை மீண்டும் வாய்வழியாகக் குடலுக்கு அணுப்ப முடியுமா? முடியும் என்கிறது குமுதம். அதுதான்நான் தமிழன் என்ற தமிழர்களை சாதியத்தின் பெயரால் பிளக்கும் தொடர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வழக்கறிஞர்களின் போராட்டத்தைத் திசைதிருப்பிய, தமிழக அரசின் கயமைக்குச் சற்றும் குறைவில்லாதது குமுதத்தின் கயமை. தாயகத் தமிழர்கள் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களை ஆதரிக்க வேண்டிய கட்டத்தில், குமுதம் ஏடுஅந்த ஒற்றுமையின் மீது கோடாலியை வீசுவது போலநான் தமிழன் தொடரை வெளியிட்டு வருகிறது. அழிந்து ஒழிக்க வேண்டிய சுயஜாதி அபிமானத்துக்கு உயிர் கொடுக்கும் மலிவான முயற்சியைக் கையிலெடுத்திருக்கிறது குமுதம்.

குமுத்தின் இந்த மோசமான செயலைக் கண்டித்து சிலமூக அக்கறை உள்ள வழக்கறிஞர்கள் இத்தொடரை நிறுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நோட்டீசுக்கு எதிராகத்தான் குமுதம் மிகக் கேவலமான வழிமுறையைக் கையிலெடுத்திருக்கிறது. நோட்டீஸ் வந்திருக்கும் நேரத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளும் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுகிற அருந்ததியரைக் குறித்து இரண்டு வாரமாக எழுதிக் கொண்டிருக்கிறது. அருந்ததியரின் மேன்மையைச் சொன்னால் வழக்குப் போட்டுத் தடுக்கிறார்கள் என்று சொல்லப் பார்க்கிற, ஜமுக்காளத்தை நாலாக மடித்து வடிகட்டிய கயமையல்லவா இது.

இந்தத் தொடருக்கான கரு மிக எளிமையானது. ஒரு ஜாதி, அதில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், ..எஸ்., .பி.எஸ். அதிகாரிகள், சட்டமன்றப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த ஜாதி சங்கப் பிரமுகர்களிடம் மிகச் சுருக்கமான பேட்டி, அவர்களின் திருமணச் சடங்குகள், இவற்றைக் கொண்டே வாரம் மூன்று பக்கங்களை நிரப்பிவிடுவது என்பதுதான் குமுதத்தின் செயல் திட்டம். வாராந்திரப் பரபரப்புக்காகக் குமுதம் பத்திரிகையில் வருகிற இந்தத் தொடர் நீண்டகால வருவாயை ஈட்டித் தரப் புத்தகமாகவும் அவதாரம் எடுக்கும். குமுதம் இதை எந்த வடிவத்தில் கொண்டுவர இருந்தாலும் அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அதி அவசியமான ஒன்று.

இந்த இடத்தில் நம்முள் ஒரு கேள்வி வரலாம். ஜாதியை மையப்புள்ளியாகக் கொள்ளாமல் இதே கூறுகளை, தமிழக மாவட்டங்கள் அல்லது இந்திய மாநிலங்கள் என்று எடுத்துக் கொண்டு அதில் பிறந்தவர்களைப் பற்றி ஏன் அலசக் கூடாது? அலசலாம்தான், ஆனால் பழைய சோற்றை விட சுடுசோற்றுக்குத்தானே கிராக்கி. ஜாதி என்ன சாதாரன விஷயமா, தெர்மாமீட்டரே தெறிக்கிற அளவுக்கு சூடான விஷயமாயிற்றே. எதிர்ப்பை அனுமானித்தேதான் குமுதம் இப்படி ஒரு தொடரை எழுதத் தொடங்கியிருக்கும். ஏனெனில் எதிர்ப்புகள் என்பவை எதிர்மறை விளம்பரங்கள் என்ற தத்துவத்தைச் சரியாகப் புரிந்து வைத்திருப்பவர்கள் குமுதம் நிர்வாகிகள்.

ஒவ்வொரு சாதியின் சிறப்பையும் சொல்லுகிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு சாதியையும் அம்பலப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது குமுதம். ஆதாரமாகக் 15.04.2009 தேதியிட்ட குமுதத்தையே எடுத்துக்கொள்வோம்.

அருந்ததியர்இயக்கங்கள்ஆரம்பகாலங்களில்கல்விப்பணியையும்சமுதாயப்பணிகளையும்மட்டுமேகவனத்தில்எடுத்துக்கொண்டன. பின்னர்சாதிமறுப்பு, பகுத்தறிவுஆகியகோட்பாடுகளையும்கையில்எடுத்துக்கொள்ளவேண்டியகட்டாயம்எழுந்தது.’ (கட்டுரையிலிருந்து)

சாதி மறுப்பையும் பகுத்தறிவையும் அருந்ததிய சமூகத்தவர்கள் கையிலெடுத்தது ஏன் என்று குமுதத்தால் விளக்க முடியவில்லை. விளக்கவும் முடியாது. விளக்கினால் முந்தைய வாரங்களில் எந்தெந்த உயர் சாதியாரைக் குறித்து (உயர்வாக மட்டும்) எழுதியதோ அதே சாதியாரின் முகமூடியையும் கிழிக்க வேண்டியிருக்கும்.

ஆதிக்கசாதித்தலைவர்களில்யாருடையமுயற்சிக்கும்உணர்வுக்கும்தியாகத்திற்கும்குறைவானதல்லஇராவ்சாகிப்எல்.சி. குருசாமி, எச்.எம். ஜெகநாதன்முதலியோரின்செயற்பாடுகள்.’ (கட்டுரையிலிருந்து)

ஆதிக்க சாதித் தலைவர்கள் என்று சொல்லியதிலிருந்தே அவர்களின் செயற்பாடுகள் எத்தன்மையதாக இருந்திருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதல்லவா. அதற்கு சற்றும் குறையாதது அருந்ததிய மக்களின் செயற்பாடுகள் என்று சொல்லுகிறது குமுதம். அருந்ததிய மக்களை இதைவிட மோசமாக யாராவது சிறுமைப்படுத்த முடியுமா?

மன்னர்களைத்தொட்டுப்பேசும்உரிமைஅருந்ததியர்களுக்குஇருந்திருக்கிறது. தோலாடை, பாதரட்சை, வாள்உறைஆகியவற்றைத்தயாரிக்கமன்னர்களின்உடல்அளவு, கால்அளவுதேவை. அதைஅவர்கள்நேரடியாகவேமன்னர்களைத்தொட்டுஅளவுஎடுத்திருக்கிறார்கள்.’ (08.04.2009 இதழில் வந்த கட்டுரையிலிருந்து)

மன்னர்களைத் தொட்டு அளவெடுத்ததெல்லாம் சரிதான். ஆனால், அளவெடுத்த பிறகு மன்னர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று சொல்ல வேண்டாமா? அவர்கள் தொட்ட பாகங்களை நிச்சயம் கழுவிக் கொண்டிருப்பார்கள். சாதாரணமாக, பெருநகரங்களைத் தவிர்த்த ஊர்புறங்களில் இன்றும் இந்த வார்த்தைகளைக் கேட்க முடியும். ஒரு சிறுவன் முடிதிருத்திக் கொண்டு வீட்டுக்குள் வரும்போதுபரியாரியைத்* (அம்பட்டனை) தொட்டுட்டு குளிக்காம உள்ள வறியே. போய்க் குளிச்சுட்டு வாடா என்று பெரியவர்கள் கத்துவதுண்டு. “உடம்பெல்லாம் முடியிருக்கும் போய் குளித்துவிட்டு வா என்று சொல்லாமல்தாழ்த்தப்பட்டவனைத் தொட்டுவிட்டு வந்திருக்கிறாய் போய்க் குளி என்று சொல்லுகிற ஜாதி வெறி இந்தக் காலத்திலும் உயிரோடு இருக்கும் போது மன்னர்கள் காலத்தில் இருந்திருக்காதா? இதை அருந்ததியர்களுக்கான சிறப்பு என்று சொல்லுகிறது குமுதம். “தலித் மக்களைச் செருப்பாலடித்தாலும், அவர்களுக்குக் கறியும் சோறும் போட்டவர்கள் ஆதிக்க சாதியார் என்று சொல்வது போலிருக்கிறது. *பரியாரிஅனைத்து தாழ்த்தப்பட்ட சாதியாரையும் குறிக்கத் தஞ்சை மாவட்டச் சுற்றுப்புறங்களில் பயன்படுத்தப்படும் சொல்.

..சிதம்பரனார் என்றால் தமிழினம் தோன்றிய நாள்தொட்டு கடலில் கப்பல்விட்ட முதல் தமிழன் என்பதான் தோற்றமே தற்போதும் நிலவி வருகிறது. முண்டாசைக் கட்டியனுப்பி பாரதி என்றும், முகத்திலே பஞ்சை ஒட்டியனுப்பித் திருவள்ளுவர் என்றும் பிள்ளைகளை மாறுவேடப் போட்டிக்கு அனுப்புகிற பெற்றோர்கள் கூட இவரைக் கண்டுகொள்ளாததுதான் பேரவலம். விடுதலைப் போராளியாக மட்டுமல்லாது தொழிற்சங்கவாதியாகவும் விளங்கியவர் சிதம்பரனார். ”பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் ஆக்கித் தந்தால்தான் உண்பேன் என்று சிறையதிகாரியிடம் போராடிய சிதம்பரனார் பெரியாரின் தாக்கத்தால் பெரிதும் மாற்றம் கண்டார். (மேலும் தகவல்களுக்கு தொடர்புடைய பதிவுகளில் சென்று படிக்கவும்.)

அந்த சிதம்பரனார் குமுதத்தின் கண்களுக்குத் தேசத் தலைவராகத் தெரியாமல் பிள்ளைமார் தலைவராகத் தெரிகிறார். இவருக்குச் சமமாக இன்னொருவரையும் கௌரவிக்கிறது குமுதம். “இன்னொரு பிறப்பெடுத்தாலும் பிள்ளைமார் சமூகத்திலேயே பிறக்க விரும்புகிறேன் என்று கூறிய சுயஜாதி அபிமானியும், “தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது. சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது என்று கூறிய தமிழ் விரோதியுமான ஜெயகாந்தனையும், சிதம்பரனாரையும் ஒன்றாகக் கருதி கௌரவித்திருக்கிறது குமுதம். ஜெயகாந்தனைக் கௌரவிக்கட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. சமஸ்கிருத தாசனாக இருப்பவரை ஏன் நான் தமிழன் என்று தலைப்பிட்டுக் கௌரவிக்க வேண்டும் என்பது தான் குமுதத்தின் முன் அறிவுடையோர் வைக்கக்கூடிய கேள்வி?

சிதம்பரனாரை பிள்ளைமார் என்று சொன்னவர்கள் பெரியாரை நாயக்கர் என்று சொல்லாமல் விடுவார்களா? அப்படி சொல்வதாயினும் சொல்லித் தொலையட்டும், அவர் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தைக் குறித்து அந்தக் கட்டுரையில் ஒரு வார்த்தையாவது இடம்பெறுமா? அறுபது ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலில்பள்ளன், பறையன், சாணான் சக்கிலி நுழையத் தடை என்று எழுதி வைத்திருந்தனர். இந்த நான்கு சாதியாரும் கூட தமிழகத்தில் பிறந்தவர்கள்தான். இந்த சாதிகளைக் குறித்த கட்டுரையில் இப்படி ஒரு பலகை ஏன் எழுதிவைக்கப்பட்டது, அப்படி எழுதியவர்கள் யார் என்ற விபரமெல்லாம் இடம்பெறுமா?

அத்தனை சாதிகளின் பெருமைகளையும் அலசினால் கூடவே சிறுமைகளையும் அலசவேண்டுமல்லவா? அந்த வரலாறு தில்லை நடராசன் கோவிலில் தாழ்த்தப்பட்டவரான நந்தன் எரிந்த சம்பவத்திலிருந்தும், எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டதிலிருந்தும் அல்லவா ஆரம்பிக்கவேண்டும்? இவர்கள் எழுதும் வரலாறு ஏன் விடுதலைப் போராட்டத்திலிருந்து தொடங்குகிறது? குமுதம் இதையெல்லாம் நேர்மையோடு எழுதும் என்று நம்புவதே கூட ஒரு மூட நம்பிக்கைதான்.

ஞாநி போன்ற முற்போக்காளர்களின் (?!) எழுத்தைத் தாங்கி வருகிற குமுதம் ஏன் இதையெல்லாம் செய்யவில்லை என்று ஆதங்கப்பட்டால், என் மூட நம்பிக்கையை எண்ணி என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும். குமுதத்திடம் இதைத் தவிற வேறெதை எதிர்பார்க்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய பதிவுகள்:

1. ஜாதித் தொடரை விலக்கு குமுதம் மீது வழக்குவே. மதிமாறன்

2. ஜாதி வெறிக்குநான் தமிழன் என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்வே. மதிமாறன் (இக்கட்டுரையில் வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளது.)

3. நான் தமிழன் சாதியத்தின் முகவரிதமிழன்பன்

4. ..சி.யிடம் பெரியாரின் தாக்கம்ராஜாஜியின் பச்சைத் துரோகம்வே. மதிமாறன்

5. பகுதி 2: சுதேசிப் போர்க்கப்பல் தளபதி வே. மதிமாறன்

6. பகுதி 1: சுதேசிப் போர்க்கப்பல் தளபதிவே. மதிமாறன்

[மேலேஉள்ளபதிவுகளின்உள்ளடக்கம்அந்தந்தப்பதிவர்களுக்கேஉரிமையுடையவை. இப்பதிவில்அவைமேற்கோளாகமட்டுமேபயன்படுத்தப்படுகிறது. தோழர்மதிமாறன்மற்றும்தமிழன்பன், இருவருக்கும்இத்தறுவாயில்நன்றிதெரிவித்துக்கொள்கிறேன்.]-விஜய்கோபால்சாமி

18 thoughts on “குமுதத்தின் கயமை

  1. ///ஞாநி போன்ற முற்போக்காளர்களின் (?!) எழுத்தைத் தாங்கி வருகிற குமுதம் ஏன் இதையெல்லாம் செய்யவில்லை என்று ஆதங்கப்பட்டால், என் மூட நம்பிக்கையை எண்ணி என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்.///

    விஜய்கோபால்சாமி ஞாநியை மட்டும் கூறியிருக்கிறீர்கள். குமுதத்த்தில் மட்டுமே எழதி புகழ் அடைந்த பாமரனை ஏன் கண்டிக்கவில்லை. பாமரன் போன்ற சந்தர்ப்பவாதிகளுககு நீங்கள் உங்கள் தளத்தல் இணைப்பும் கொடுத்திருக்கிறீர்கள். அவர் குமுதத்தை கண்டித்து இருக்கிறாரா? அவரை குறித்து எழுதுவீர்களா?

  2. ஐயா, தற்சமயம் பாமரன் குமுதத்தில் எழுதுவதில்லை. தமிழக அரசியல் என்ற வார இதழில் மட்டுமே எழுதிவருகிறார். அவருடைய தளத்திற்குச் சென்று [சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்?] பதிவைப் படித்துப் பாருங்கள்.

    ஆமாம், அவர் குமுதத்தில் மட்டுமே எழுதி புகழடைந்தவர் என்று எப்படிச் சொல்லுகிறீர்கள். குமுதத்துக்கு வெளியே அவர் எதையுமே எழுதவில்லையா? அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது உங்கள் அறியாமை.

    சரி ஞாநி விஷயத்துக்கு வருவோம். ஞாநி ஏன் இதைக் கண்டிக்கவில்லை என்று மேலே உள்ள பதிவில் ஒரு இடத்திலாவது இருக்கிறதா பாருங்கள்.

  3. விஜய்கோபால்சாமி ஏன் குமுதத்தின கயமையை பாமரன் ஞானி போன்ற எழுத்தாளர்கள் கண்டிப்பதில்லை? இது குறித்து எழுதுங்கள். பாமரன் ஏன் குமுதத்தில் எழுதுகிறார் என்று கேட்கவில்லை. ஏன் குமுதத்தை கண்டிபதில்லை என்றுதான் கேட்டிருக்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு எதிராக எழதியபோதுகூட பாமரன் கண்டிக்கவில்லை.

    ///ஐயா, தற்சமயம் பாமரன் குமுதத்தில் எழுதுவதில்லை. தமிழக அரசியல் என்ற வார இதழில் மட்டுமே எழுதிவருகிறார். அவருடைய தளத்திற்குச் சென்று [சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்?] பதிவைப் படித்துப் பாருங்கள்.///

    என்றுசொல்லியிருக்கிறீர்கள். இனிமேல் அவர் குமுதத்தில் எழுதமாட்டாரா,?

    ///சரி ஞாநி விஷயத்துக்கு வருவோம். ஞாநி ஏன் இதைக் கண்டிக்கவில்லை என்று மேலே உள்ள பதிவில் ஒரு இடத்திலாவது இருக்கிறதா பாருங்கள்.///

    என்று கேடகிறீர்கள். ஏன் நீங்கள் அப்படி கேட்க வில்லை. இதில் ஞாநி பாமரன் எல்லோரும் பிரபலமாவதற்கு மட்டும்தான் எழுதுகிறார்கள். அதனால்தான் பிரபலமான மீடியாக்களை கண்டிப்பதில்லை. எல்லோரையும் விமர்சிக்கிறவர்கள் இன்று வரை குமுதத்தின் இந்த மோசடிகளை எந்த எழுத்தாளரும் கண்டிக்கவில்லை .

    விஜய்கோபால்சாமி உங்கள் கட்டுரையில்இருக்கிற நேர்மை உங்கள் பதிலில் இல்லை

  4. தோழர் ஏகன்,

    இது மதிமாறன் அவர்களின் தளம். நான் அந்த நினைவுடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். இங்கே இப்படி ஒரு பதிலை எழுதியிருக்கக் கூடாதுதான். மன்னித்துக் கொள்ளுங்கள். இங்கே கட்டுரையின் சாரத்தைக் குறித்து மட்டுமே விவாதிப்போம். ஞாநியையும் பாமரனையும் குறித்து என்னுடைய தளத்தில் விரைவில் ஒரு கட்டுரையை எழுதுகிறேன். அங்கே இதைக் குறித்து விவாதிப்போம்.

    இல்லையெனில் தோழர் கொளத்தூர் மணி கைதின் போது மதிமாறன் எழுதிய பதிவில் நிகழ்ந்த விவாதம் எவ்வாறு தொடர்பில்லாத திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டதோ அதே போன்றதொரு நிலைமை இங்கேயும் ஏற்பட்டு விடும். ஆகவே நம் இருவருடைய பின்னூட்டங்களையும் நீக்குமாறு மதிமாறன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

  5. விஜய் சொல்வது முற்றிலும் உண்மை

    ஏதாவது கோழிக்கரையான் வந்து குழப்புவதற்கு மதிமாறன் கண்டிப்பாய் இடம் தரக்கூடாது

  6. நடிகைகளின் இடையையும், அதரங்களையும் ஒப்பீடு செய்தும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கிசுகிசு எழுதியும் வியாபாரம் செய்து வரும் குமுதம் இந்த கேடுகெட்ட தொடர் எழுதுவதில் நிச்சயம் ஒரு உள்நோக்கம் இல்லாமலில்லை.

    //இவர்கள் எழுதும் வரலாறு ஏன் விடுதலைப் போராட்டத்திலிருந்து தொடங்குகிறது?//

    மிகவும் சரியான கேள்வி. நிச்சயமாக குமுத த்திடம் இதற்கான பதில் இருக்கப்போவதில்லை. இக் கட்டுரை எழுதிய விஜய்கோபால்சாமிக்கு பாராட்டு தெரிவிக்கும் அதேசமயம் குமுத த்திற்கு எனது கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.

  7. விஜயகோபால் சாமி அவர்களின் கட்டுரை அருமை. உங்களுக்கு இருக்கும் நேர்மை பாமரன், ஞாநி போன்றொர்க்கு கிடையாது. இதில் ஞாநியின் பிற்போக்கு தனம் எல்லோரும் அறிந்ததே. அதனால் நீங்கள்

    //ஞாநி போன்ற முற்போக்காளர்களின் (?!) எழுத்தைத் தாங்கி வருகிற குமுதம் ஏன் இதையெல்லாம் செய்யவில்லை என்று ஆதங்கப்பட்டால், என் மூட நம்பிக்கையை எண்ணி என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்//

    என்று எழுதியத்தற்கு பதில் பாமரன் போன்ற முற்போக்காளர்களின் (?!) எழுத்தைத் தாங்கி வருகிற குமுதம் ஏன் இதையெல்லாம் செய்யவில்லை என்று ஆதங்கப்பட்டால், என் மூட நம்பிக்கையை எண்ணி என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும். என்று எழுதியிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

    சதிஸ்
    சுவிஸ்

  8. வாழ்த்துகள் விஜய்கோபால்சாமி அருமையான கட்டுரை. குமுதம் இதழை நாம் புறக்கணிப்பதுதான் அதற்கு தரும் சரியான பதிலடி. எழுத்தாளர்கள் பற்றி என்ன சொல்ல? கேவலம். இதில் பார்ப்பன எழுத்தாளர்களில் இருந்து நீங்கள் விரும்பும் எழுத்தாளர் வரை எல்லோரும் ஒரே ரகம்தான். அவர்களை விமர்சிப்பதை விட்டு நாம் காரியத்தைப் பார்ப்போம்.

  9. ராசீவ் கொலையாளிகளை தூக்கில்போடுகிற அந்த கீரிச் சத்தம் காதில் விழுவேண்டும் என்று குமுதம் எழுதியது.
    ஈழு ஆதரவாளர்க்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்கிற எழுத்தாளர்க்ள பிரமுகர்கள் யாரும் இன்றுவரை குமுதத்தை கண்டிக்கவில்லை. இதுதான் அவரிகளின் யோக்கியதை.

    மிகச் சிறப்பான கட்டுரை எழுதிய விஜய்கோபால்சாமி வாழ்த்துக்கள்.

  10. நான்() இன்னமும் முழுமையாக சாதி என்ற வலயத்தை விட்டு வெளிவரவில்லை ஏதேனும் ஒரு வகையில் அதை பயன் படுத்திதான் ஆகவேண்டிய கட்டாயமான சூல்நிலையில்ல்தான் இருக்கிறேன் எனவே நான் இதைப்பற்றி விமர்சனம் செய்யலாகாது குமுதம் எழுதும் தொடர் எதிர்மறையான விளைவைத்தான் உண்டுபண்ண முடியும் என்று சொலுவதர்க்கில்லை. அதற்க்கு எதிர்ப்பு என்று ஒன்று வரும் போதுதான்.அந்த தகவல் விவாதத்திற்கு உட்பட்டு விளைவுகளை ஏற்படுத்துகிறது.போகிறபோக்கில் நாம் கண்டுகொள்ளாமல் செல்லும் போது அது காணமல் போய்விடும் அந்த சக்தி காலத்திற்கு உண்டு

  11. //குமுதத்த்தில் மட்டுமே எழதி புகழ் அடைந்த பாமரனை ஏன் கண்டிக்கவில்லை//

    குமுதத்தில் மட்டுமே எழுது பாமரன் புகழடைந்தார் என்று ஏகன் கூறுவது நகைப்புக்குரியது. ஏகனுக்கு வேண்டுமானால் பாமரனை தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் அரசியல் ஆர்வமுடையவர்கள் மத்தியில் பாமரன் கட்டுரைகள் மிக பிரபலம். விரிவான வாசிப்பு இல்லாத ஏகன் போன்றோர் குமுதத்தை தூக்கி பிடிப்பது ஆச்சரியமில்லை

  12. குமுதத்திற்கு என் கடும் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன். இந்தத் தொடர் வெளியான இரண்டாவது (அ) மூன்றாவது வாரத்தில் நண்ப்ர்கள் வட்டத்தில் இதுகுறித்து அதிருப்தியாய்ப் பேசி.. குமுதம் வாங்குவதை நிறுத்திவிட்டேன்.

  13. கட்டுரைக்கு மிக்க நன்றி. நான் குமுதம் பட்ப்ப்பதில்லை.

    “நீங்கள் சேறுபோல் மாசடைந்த குட்டைகளாக இருந்தாலும், தீண்டத்தகாதவர்களாக இருந்தாலும், ஆதிக்க சாதியினர் உங்களை அடிமைத்தனமாக நடத்தினாலும் உங்களிலும் சில செந்தாமரைகள் முளைக்காமல் இல்லை, அதை நினைத்து பெருமைப‌ட்டு்க் கொள்ளுங்கள். இந்துமத சாதி அமைப்புகளில் நம்பிக்கை இழக்காமல் இப்படியே இருந்துவிட்டுப் போங்கள், எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்காதிர்கள், (உங்களின்) இந்துமத அடிமைத்தன‌ விதிகளை எப்போதும்போல் தொடர்ந்து ஏற்றுக்கொண்டு பிரச்சினை எதும் செய்யாமல் வாழ்ந்து மடியுங்கள், பகுத்தறிவாளர்கள் சொல்வதெதையும் நம்பாதீர்கள். அக்மார்க் உரிமைபெற்ற இந்துமத அமைப்பின் ஆதிக்க சாதிமக்களாகிய நாங்களும் இப்போது உங்களின் திறமைகளை மற்றும் தேவைகளை இனம்கண்டு மதிக்க கற்றுக்கொண்டுள்ளோம். எனவே பகுத்தறிவாளர்கள், சீர்திருத்த சிந்தனைவாதிகள் என்கிற பெயரில் மற்றவர்கள் ஏதேனும் உங்களை எங்கள் இந்து மத அமைப்பிலிருந்து விலக்க சூட்சமம் சதிகள் செய்து உங்கள் மனதை மாற்ற நினைத்தால் அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள். சாதிய இந்துக்களாகிய நாங்கள்தான் உங்களின் உண்மையான நம்பிக்கைக்குரிய பாத்திரங்கள்” போன்ற பின்னனிகளே இதுபோன்ற அசிங்மான கட்டுரைகளின் கரு.

  14. விவாதம் ஆரோக்கியமாக இருக்கட்டும் வாழ்த்துகள்.

    சாதியை நாம் முறியடிக்க இவை போன்ற நேர்மையான விவாதங்கள் நமக்கு கைகொடுக்கும்

Leave a Reply

%d bloggers like this: