தினத்தந்தியின் ராஜபக்சே புகழ்;வைகோ – மதிமுக சீற்றம்
தமிழகத்தில் 2008 வாக்கில் இலங்கை அரசைச் சேர்ந்த ‘அம்சா’ என்பவர் விரித்த வலையில், விரும்பிச் சிக்கி ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராகப் பல பத்திரிகைள் செய்தி வெளியிட்டன.
‘அம்சா’ கொடுத்த விருந்தில் பல பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு இலங்கை அரசைக் கவுரப்படுத்தி, தமிழர்களைக் கேவலப்படுத்தினர்.
இலங்கைக்கு இன்பச் சுற்றுலாவும் சென்று வந்தனர்.
அம்சா வலையில் சிக்காத தமிழ் பத்திரிகைகள் ‘நக்கீரன்’ ‘தினத்தந்தி’ இரண்டு மட்டும் தான்.
இக்காட்டனா சூழலில், தமிழர்களுக்கு எதிராக நேரடியானச் செய்தி வெளியிடாத ‘தினத்தந்தி’ இப்போது ராஜபக்சே பேட்டியையே வெளியிடுகிறது.
தினத்தந்தியின் இந்த மோசடியை கண்டித்து, வைகோ தலைமையில் மதிமுக வினர் தினத்தந்தி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். பல பகுதிகளில் தினத்தந்தி இதழை எரித்தும் இருக்கிறார்கள்.
தேர்தல் அரசியல் கட்சியாக இருந்து கொண்டு, தினத்தந்தி போன்ற செல்வாக்குப் பெற்ற ஊடகத்தை எதிர்த்து முற்றுகை நடத்துவதும் நாளிதழை எரிப்பதும் உண்மையில் பாராட்டக் கூடியது.
மதிமுகவினருக்கும் அதன் தலைவர் வைகோவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
*
வழக்கமாகத் தினமலருக்கு எதிராகக் கொதிக்கிற உணர்வாளர்கள், மதிமுகவைப் போல் தினத்தந்தியை எதிர்த்து முற்றுகை, நாளிதழை எரிப்பது என்று போராட்டம் நடத்துவார்களா? இல்லை… தந்தி டி. வி. யிலிருந்து அடுத்தப் பேட்டிக்ககான அழைப்புக்காகக் காத்திருப்பார்களா?
இன்று (29-12-2014) இரவு 8 மணிக்கு facebook ல் எழுதியது.
தாது மணல்: தினத்தந்தியின் ‘துணிவு’ம் தமிழர்களின் துயரமும்; ‘ஆண்டவரே.. கடவுளே..!
irrational arguments.