நிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு; தடையைத் தகர்க்கும் பா.ஜ.க

தென் மாவட்டங்களில் மிகப் பெரிய எண்ணிக்கைக் கொண்ட ஜாதிகள் நாடார், முக்குலத்தோர்.
தமிழகப் பா.ஜ.க. வில் இந்தியளவில் செல்வாக்குப் பெற்ற இல. கணேசன், எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் இருந்தும் தமிழகத் தலைமைப் பதவியை நாடார் சமூகத்தைச் சேர்ந்த தமிழசை சவுந்தர ராஜனுக்கும், மந்திரி பதவியைப் பொன்.ராதகிருஷ்ணனுக்கும் வழங்கியது பா.ஜ.க.

காரணம், நாடார்கள் மீது கொண்ட பாசமல்ல; எண்ணிக்கையிலும் வணிகத்திலும் அதிகம் கொண்ட நாடார்களைத் தங்கள் கட்சியின் பக்கம் திருப்பும் முயற்சியே.

அதிமுக அலைவரிசையில் இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுக்களைத் தன் பக்கம் இழுக்கும் பெரும் முயற்சியைவிட, எந்தத் தனிக் கட்சியிலும் தங்கிவிடாத, ஜாதிக்கட்சியின் கீழும் சுருங்கி விடாத நாடார் ஜாதி ஓட்டுக்களைச் சில ஆண்டுகளில் தன் பக்கம் சாய்த்துக் கொள்ளலாம் என்கிற திட்டம்.

எந்த ஜாதி தலைமையாக இருந்தால் என்ன? இல. கணேசன் என்ன செய்வாரோ அதைதான் தமிழிசை செய்கிறார். பா.ஜ.க விற்கு ஆளா முக்கியம்? அய்டியாலஜி தானே. மோடி என்ன பார்ப்பனரா? பார்ப்பனர்கள் கொண்டாடி மகிழ்கிற இதிகாச, புராணா காலக் கிருஷ்ணபரமாத்மா அல்லது கண்ணன் என்ன பார்ப்பனரா?

சரி, ‘நாடார்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி’ என்று முக்குலத்தோர் மத்தியில் அடையாளம் ஆகிவிட்டால் கட்சியின் வளர்ச்சிக்குப் பாதிப்பு. அந்தப் பாதிப்பை நீக்குவதற்கு, இது ஒரு நல்வாய்ப்பு.

ஜல்லிக்கட்டில் அதிகம் பங்கெடுப்பவர்கள் முக்குலத்தோர். அதிலும் கள்ளர் சமூக மக்களே. ஜல்லிக்கட்டின் மீது நீதி மன்றம் விதித்திருக்கிற தடையை நீக்குவதன் மூலம்;
முக்குலத்தோர், ஜல்லிக்கட்டை ஆதரிக்ககிற பிற ஜாதியினர் மத்தியில் பா.ஜ.க. விற்குச் செல்வாக்கு அல்லது அறிமுகம் கிடைக்கும்.

இக்கட்டில் மாட்டியிருக்கிற நாயகியை கடைசி நேரத்தில் காப்பாற்றுகிற நாயகனை போல், ஜல்லிக்கட்டு நெருக்கடி தீவிரமடையும்போது தடையைத் தகர்க்கும் அவதாரம் எடுக்கும் பா.ஜ.க.
வரும் தேர்தலில் இதை மய்யமாக்கி பிரச்சாரம் செய்வதற்கும், தென்மாவட்டத்தில் இன்னும் ஆழமாகக் கால்பதிப்பதற்கும் பா.ஜ.க விற்குப் பெரிய வாய்ப்பு.

அதனால் ஜல்லிக்கட்டிற்கான தடையைப் பா.ஜ.க நீக்கும் என்றே நினைக்கிறேன். பார்ப்போம் 10 நாட்களில்.

(05-01-2015 இரவு 10 மணியளவில் facebook ல் எழுதியது. இதே கருத்தை 8 மாதத்திற்கு முன் கலைஞர் செய்திகளில் தோழர் சுகிதா வின் கேள்விக்குப் பதிலாக பதிவு செய்தேன்.) https://www.facebook.com/sugitha.sugi?fref=ts

மாட்டுக் கொம்பில் மல்லுக்கட்டும் மனிதம்

‘ஜல்லிக்கட்டு தடை’ வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்!

சீமானின் ‘மக்கள் முன்னால்’ ;ஜல்லிக் கட்டு

6 thoughts on “நிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு; தடையைத் தகர்க்கும் பா.ஜ.க

  1. Ashok Kumar · Friends with Neelson Jenn and 6 others
    கட்சி வளர்க்க கிடைக்கும் நல்ல வாய்ப்பு !!!
    Unlike · Reply · 1 · 13 hrs
    Manohar P
    Manohar P · Friends with Bilal Koya and 14 others
    எந்தக்கட்சியும் வேண்டாம்.சுனாமியோ.நிலநடுக்கமோ வந்து ஒட்டுமொத்த இந்தியாவில்ஒருவனும் தப்பாமல் அழியட்டும்.
    Like · Reply · 5 · 13 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi இக்கட்டில் மாட்டியிருக்கிற நாயகியை கடைசி நேரத்தில் காப்பாற்றுகிற நாயகனை போல், ஜல்லிக்கட்டு நெருக்கடி தீவிரமடையும்போது தடையைத் தகர்க்கும் அவதாரம் எடுக்கும் பா.ஜ.க.
    Like · Reply · 24 · 13 hrs
    Ashok Kumar
    Ashok Kumar · Friends with Neelson Jenn and 6 others
    கலாம் மறைவில் எடுத்த அவதாரம் போல்!!!
    Unlike · Reply · 2 · 13 hrs
    சாந்த குமார் க
    சாந்த குமார் க துல்லியம்.
    Unlike · Reply · 1 · 3 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Boopathi A
    Boopathi A தமிழக அரசே தடையை நிறுத்தி, நடத்தலாம்னு அறிவிப்பு வரலாம்ணா
    Unlike · Reply · 1 · 13 hrs · Edited
    சுரேந்திரன் சுப்ரமணியன்
    சுரேந்திரன் சுப்ரமணியன் · 5 mutual friends
    தமிழர்களை எல்லாம் சாதிய வட்டத்திற்குள் அடைக்கும் நீங்கள் ராமசாமியை நாயக்கன் என்றோ கருணாநிதியை சின்னமேளம் என்றோ வைகோவை நாயுடு என்றோ குறிப்பிட்டு சொல்ல இயலுமா?
    Like · Reply · 9 · 13 hrs
    Raj Maha
    Raj Maha · Friends with Samaran Nagan and 58 others
    Mr.mani please go to your duty
    Like · Reply · 12 hrs
    சுரேந்திரன் சுப்ரமணியன்
    சுரேந்திரன் சுப்ரமணியன் · 5 mutual friends
    @mathimaran கமண்ட்ஸ அழிப்பதுலயே உங்க பகுத்தறிவு தெரியுது.
    Like · Reply · 12 hrs · Edited
    Thamilar Simon
    Thamilar Simon · 24 mutual friends
    சாதி ஒழிப்பு பேசுறதுனா இது தானா?…கி…கி…கி்
    Like · Reply · 1 · 3 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Thirumoorthy
    Thirumoorthy · Friends with Ramesh Periyar and 5 others
    நான் நம்பவில்லை .தமிழ்நாடு அரசு?
    Like · Reply · 13 hrs
    Vishnu Sakkaravarthy
    Vishnu Sakkaravarthy பண்பாடு என்பதே ஒரு சாதி ரீதியிலான குறியீடு அதனால் அதன் மீது எனக்கு பெரிய மரியாதை கிடையாது. ஆனால் மிருக வதை என்ற பெயரில் பார்ப்பனர் லாபி செய்வதையும் நாம் விடக்கூடாது. தோழர் கவனத்திற்கு
    Unlike · Reply · 4 · 12 hrs
    Mohamed Yusuf
    Mohamed Yusuf · 2 mutual friends
    பாஜக வெளிப்படுத்தும் நம்பிக்கையை கண்ணுரும் போது நானும் அவ்வாறே ஊகிக்கிறேன்…மதி அண்ணா
    Unlike · Reply · 1 · 12 hrs
    உண்மையை உரக்கச் சொல்
    உண்மையை உரக்கச் சொல் · 11 mutual friends
    நிச்சயம் இன்னும் எட்டு நாள்களுக்கு பிறகு அறிவிப்பு வரும் போராடி பெற்ற சுதந்திரம் போல விளம்பரம் வரும்
    நமககெல்லாம் உரிமை கொடுத்த உத்தம வீரர் மோடி என்று
    Unlike · Reply · 3 · 11 hrs
    பாண்டிய நாட்டு மன்னன்
    பாண்டிய நாட்டு மன்னன் · 3 mutual friends
    ஜல்லிகட்டு ஒட்டு மொத்த தமிழர்களின் வழிபாட்டு கலாச்சாரம் மதம் மாறிய தமிழன் கூட அதை இழக்க தயாரில்லை ஆனால் ஏனோ நகர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அது வேண்டாத விசயமாக தெரிகிறது படித்த முட்டாள்கள்
    Like · Reply · 6 · 11 hrs
    Saminathan Ramakrishnan
    Saminathan Ramakrishnan · 3 mutual friends
    மாட்டுக்கறி பிரியாணி , மாட்டுக்கறி திங்கிற திருவிழா வச்சப்பல்லாம் ஒரு பேச்சு…. ஜல்லிக்கட்டுக்கு இன்னொரு பேச்சு…. திராவிடர் கழகமா, இல்ல திருட்டுப் பயமக்க கழகமாய்யா இது…
    Like · Reply · 9 · 11 hrs
    Karthik Palani
    Karthik Palani · Friends with Baaski Baaskar
    bro super
    Like · Reply · 8 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Ragu Nath
    Ragu Nath · Friends with BM Ibrahim and 2 others
    Ragu Nath’s photo.
    Like · Reply · 10 hrs
    Siva Prasad
    Siva Prasad · Friends with Anwar Arasai
    ஜல்லிகட்டுவை தடைசெய்த மேனகா காந்தி எந்த கட்சின்னு தமிழக BJP க்கு தெரிய வில்லை போல்…
    Like · Reply · 2 · 9 hrs
    Karthik Palani
    Karthik Palani · Friends with Baaski Baaskar
    tholar mathinaran yar parpanar? jalli kattu tamilarkalin veera vilaiyattu ithula kallar mallar enkira ungalin karuthu thevai illa ! tamilarkal engaluku therium!
    Like · Reply · 1 · 8 hrs
    Bharathi Vandaiyar
    Bharathi Vandaiyar · Friends with Tj Samy Vandayar
    தோழரே முக்குலத்தோர் தமிழகர்கள் கிடையாதா?
    Like · Reply · 1 · 7 hrs
    Karthikeya Sankar Muthurajan
    Karthikeya Sankar Muthurajan காமராஜரையே சொந்த தொகுதியில் தோற்கடித்த நாடார் சமுகத்தையும் , முத்துராமலிங்கத தவிர யாரையும் தலைவனாக எற்றுகொல்லாத முக்குலதையும் நம்பி பாஜக செல்வதற்கு மிஸ்ட் கால் உறுப்பினர் வாக்குகளை நம்பலாம்…
    Like · Reply · 1 · 6 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi பா.ஜ.க மட்டுமல்ல சில தமிழ் தேசிய அமைப்புகளும் இவற்றுக்குள் தான் சுற்றுகின்றன.
    Like · Reply · 1 · 2 hrs · Edited
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Nirmal Sakthi
    Nirmal Sakthi · Friends with Bilal Koya and 7 others
    Hit the nail right on its head
    Unlike · Reply · 1 · 5 hrs
    Siva Bsp
    Siva Bsp Well said , its true …
    Unlike · Reply · 1 · 4 hrs
    Rams Erode
    Rams Erode பல ஆயிரம் வருடங்களாக நடக்கும் ஜல்லிகட்டு விளையாட்டை இதுவரை தமிழ்நாட்டில் யாரும் ஜாதியின் அடிப்படையில் பார்க்கவில்லை அது தமிழர்களின் வீர் விளையாட்டு ஒருசிலர் அதை இப்போது நடத்தாமல் இருக்கலாம் ஒரு சிலபகுதியில் நடந்தாலும் அணைத்து தரப்பினரும் இதனை தமிழர்களின் பண்பாடாகவே போற்றி வருகின்றனர் . இந்த விளையாட்டு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள் .அதைவிட்டுவிட்டு இதில் ஜாதியை புகுத்தி உங்கள் குறுகிய புத்தியை காட்ட வேண்டாம் . உங்களாய் போன்ற ஜாதியை அரசியல் பண்ணும் குறுகிய நோக்கம் கொண்ட ஆட்களால்தான் இன்னும் முன்னேறாத கீழ்ஜாதி மக்கள் பாதிக்க படுகிறார்கள் என்பது உண்மை
    Like · Reply · 2 · 4 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi உங்களைப் போன்ற பறந்த எண்ணம் கொண்ட மேல் ஜாதி மக்கள் ஜாதி வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு நீங்களே உதாரணம். அதான் // கீழ்ஜாதி// என்று திமிராக எழுத முடிகிறது.
    Like · Reply · 16 · Just now · Edited
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Bhaseer Mohammad
    Bhaseer Mohammad · Friends with R Muthu Kumar
    நாடார் குலம் என்ற வணிகர்கள்!
    Like · Reply · 4 hrs
    Thamimul Ansari
    Thamimul Ansari · Friends with Mohamed Faizal
    Oru kaalamum pjb kaal unra mudiyadu tamilnattil
    Like · Reply · 4 hrs
    Karthikeya Sankar Muthurajan
    Karthikeya Sankar Muthurajan நாடார்ல முக்கவாசிபேர் கிறிஸ்டினா ஆகிடாங்க …தேவர்க்கு நாடார்மேல உள்ள காழ்புணர்ச்சி முத்துராமலிங்கதேவர் – காமராஜர் காலத்துல இருந்து முத்தி போச்சு ….ஆகவே தமிழிசை பொன்னர் வாழ்வு முக்குலதொர்கு உறுத்தலான விசயமே,,,,பாஜக எப்ப பெரியாற எத்துகுதோ அப்பா தான் இங்க வாழமுடியும் …இல்லானே அது தமிழ் ஈழத்த ஆதரிக்கணும்…ரெண்டுமே நடக்காது …ஆகவே அது மிஸ்ட் கால் லெவல் தான்
    Unlike · Reply · 6 · 3 hrs
    Mohideen Yessem
    Mohideen Yessem · 3 mutual friends
    ஐல்லிக் கட்டுக்கு கடைசிநேர அனுமதி கொடுப்பதன் மூலம் தமிழர்களுக்கு இப்பிறவிப் பயனை அடைய ஓரு வாய்ப்பு கொடுத்ததாக காட்டிக் கொள்ள பொன்ராவும்,தமிழியும் முயற்சி செய்கிறார்கள்.ஆனால் இப்பவே அனுமதி கொடுத்தால் நாம் கீரோ ஆகமுடியாது, அதனால் கடைசிநேரத்தில் அனுமதி கொடுத்தால் பார்த்தீர்களா அமெரிக்காவில் போய் அனுமதி வாங்கிவிட்டோம் என்று சொல்லத்தான் இவ்வளவு நாடகம் நடக்கு
    Like · Reply · 2 · 1 hr
    Abu Rayyan
    Abu Rayyan :::தலைமைப் பதவியை நாடார் சமூகத்தைச் சேர்ந்த தமிழசை சவுந்தர ராஜனுக்கும், மந்திரி பதவியைப் பொன்.ராதகிருஷ்ணனுக்கும் வழங்கியது பா.ஜ.க::::

    தென் தமிழகத்தை கவரவும் காங்கிரஸ் கட்சிமீது காமராஜர் காலத்தில் இருந்தே நாடார் சமூக மக்களுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு…. அதை தங்கள் பக்கம் ஈர்க்கவே அதே சமூகத்தை சேர்ந்தவர்களை முன்னிலைடுத்தியது பாஜக…

    ஆனால் அதேவளை வாக்குகளை மட்டும் ஈர்த்துவிட்டு பாஜக அந்த சமூகத்திற்கு செய்தது பச்சை துரோகம்….

    ஆமாம்…. பொன்னார் அண்ணன் இரண்டுமுறை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை…. சும்மா ஒப்புக்கு ஒரு இணை அமைச்சர் பதிவையைதான் கொடுத்தது பார்பன பாஜக தலைமை…

    எந்த தேர்தலிலும் வெற்றிபெறாத நிர்மலா சீதாராமனை முக்கியமான வர்த்தக துறைக்கு அமைச்சராக்கியுள்ளது பாஜக இதன்மூலம் இவர்களின் பார்ப்பன ஏகாதிபத்தியம் வெட்டவெளிச்சமாகிறது….

    இதையெல்லாம் புரிந்துகொள்ள நாடார் சமூக மக்கள் தயாராக இல்லை……
    Like · Reply · 1 · 1 hr · Edited
    Mohideen Yessem
    Mohideen Yessem · 3 mutual friends
    நம்ம ஊர் திருவிழா, நாம நடத்த வேண்டிதானே. இவனுக அனுமதி தந்தா என்ன, தராட்டி என்ன.போலீஸ் வந்தா என்ன, வழக்கு போட்டி என்ன.அவங்களும் தமிழன் தானே. நடக்கட்டும் பார்த்துக் கொள்வோம் என்று யாரும் சொல்வதில்லையே ஏன்
    Unlike · Reply · 2 · 1 hr
    இஸ்மாயில் மரிக்கா
    இஸ்மாயில் மரிக்கா · 87 mutual friends
    உண்மையான பதிவு
    Unlike · Reply · 1 · 24 mins

  2. Reblogged this on தேன்கூடு and commented:
    ////எந்த ஜாதி தலைமையாக இருந்தால் என்ன? இல. கணேசன் என்ன செய்வாரோ அதைதான் தமிழிசை செய்கிறார். பா.ஜ.க விற்கு ஆளா முக்கியம்? அய்டியாலஜி தானே. மோடி என்ன பார்ப்பனரா? பார்ப்பனர்கள் கொண்டாடி மகிழ்கிற இதிகாச, புராணா காலக் கிருஷ்ணபரமாத்மா அல்லது கண்ணன் என்ன பார்ப்பனரா? ///////// UNMAI

  3. “தலித் முஸ்லிம் பெரியாரிஸ்ட் ஒடுக்கப்பட்ட மக்கள்” கூட்டணிதான், எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழக்கூடிய ஜாதிகளற்ற சமத்துவ ஆட்சிக்கு வழிகோல்.

  4. இளவரசன் எனும் தலித் இளைஞர் வன்னியர் பெண்ணை காதலித்த குற்றத்துக்காக, வன்னியர் அய்யாக்காளால் தலை துண்டிக்கப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டார். கோகுல்ராஜ் எனும் தலித் இளைஞர் கவுண்டர் ஜாதியை சேர்ந்த பெண்ணை காதலித்த குற்றத்துக்காக, கவுண்டர் அய்யாக்காளால் தலை துண்டிக்கப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டார். அதை விசாரிக்க சென்ற தலித் டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவும், சில நாள் கழித்து மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.
    ———–

    தலித்துக்களிடம் நான் சொல்ல விரும்புவது:

    ஆதிக்கஜாதிக்கெதிராக போலீசும் சட்டமும் இயங்காது. கைகட்டி வேடிக்கை பார்க்கும். தலித்துக்கு எந்த ஜென்மத்திலும் நீதி கிடைக்காது.

    5000 வருடஙகளாக உதைவாங்கியும் இன்னமும் ஏன் அந்த ஹிந்துமத ஜாதிசாக்கடையை விட்டு வெளியேற மறுக்கிறாய்?. இட ஒதுக்கீட்டுக்காக தன்மானத்தை அடகு வைத்துவிட்டாயா?
    முஸ்லிம்கள் 30 சதவீதம். தலித் 40 சதவீதம். நீங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகி விடும். அவர்களும் இஸ்லாத்துக்கு வந்துவிடுவர். ஜாதிகள் மறைந்துவிடும். எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழும் இந்தியாவை நம்மால் உருவாக்கமுடியும். நன்றி.

  5. தன்னை நாத்திகர் என சொல்லிக்கொள்ளும் ஹிந்துக்களிடம் நான் கேட்பது:

    1. உங்கள் ஜாதியென்ன?.
    2. கீழ்ச்சாதி நாத்திகரும் மேல்ஜாதி நாத்திகரும் சரிசமமா?.
    3. நாத்திகராகிவிட்டால், ஜாதிகள் ஒழிந்து நாத்திகருக்குள் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் வந்துவிடுமா?.
    4. ஒரு தலித் நாத்திகர், வன்னிய நாத்திகர் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தால், அடுத்த நாள் தண்டவாளத்தில் ரெண்டு துண்டாய் கிடப்பார்.
    5. ஒரு தலித் நாத்திகன், தேவர் நாத்திகர் வீட்டில் போய் பெண்கேட்டால் பெண்கொடுப்பாரா அல்லது பீயை திணிப்பாரா?
    6. நீங்கள் உண்மையான பெரியாரிஸ்ட் என்றால், பெரியார் செய்தது போல் பிள்ளையார் சிலையை செருப்பால் அடிப்பீரா, காலால் எட்டி உதைப்பீரா, சுக்குநூறாக போட்டு உடைப்பீரா, கீதையை நடுத்தெருவில் போட்டு கொளுத்துவீரா?

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading