‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை

ambedkar_man1
லக்னோவில் உள்ள அம்பேத்கர் மண்டபம்

டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3
டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது  – 5

‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’-டாக்டர் அம்பேத்கர்- 6


என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன் -7

தொடர் -8

“ராமன் கடவுளா? மனிதனா?

கடவுளுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ராமன் கடவுளாக இருந்தால் பிறந்திருக்க முடியாது. பிறந்திருந்தால் அவன் கடவுள் கிடையாது. அயோத்தியில் அவன் பிறந்திருந்தால், அவன் மனிதன். மனிதனுக்கு எதற்கு கோயில்? இல்லை அவன் கடவுள் என்றால், அப்புறம் அவன் எப்படி அயோத்தியில் பிறந்திருக்க முடியும்? ஆக, ராமனுக்கு அயோத்தியில் கோயில் தேவையில்லை.”

என்று கவிஞர் வைரமுத்து பாபர் மசூதி இடிப்பதற்கு முன் சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் பார்ப்பனர்கள் நிறைந்த சபையில் இப்படி பேசினார். அதில் உள்ள தர்க்கம் ரசிக்கும்படி இருந்தது. உடனே வைரமுத்துவோட ஆபாச பாடல்களை நீங்கள் ஆதரிக்கிறீங்களா?’ என்று கேட்டு விடாதீகள். அதை எவனாவது ஆதரிப்பானா?

ராமன் கடவுளா? மனிதனா? என்கிற இந்த சந்தேகம் வைரமுத்துவிற்கு மட்டுமல்ல. ராமனுக்கே இருந்திருக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் எழுதுகிறார்:

“ராமன் கடவுளானது கிருஷ்ணனின் விஷயத்தைவிட அதிகச் செயற்கையானது. தான் கடவுள் என்பதை ராமனே அறிந்திருக்கவில்லை.”

இயேசுவை கடவுளாக பலர் வழிபட்டாலும், அவரே ஒரு கடவுளை வழிபட்டிருக்கிறார். அதுபோல் ராமனை பலர் கடவுளாக வழிபட்டாலும், அவன் பல கடவுள்களை வழிபட்டிருக்கிறான்.

ராமாயணத்தை எடுத்துக்காட்டி டாக்டர் அம்பேத்கர் குறிபிடுகிறார்:

“நான் என்னை ஒரு மனிதனாக, தசரதரின் மகன் ராமனாகக் கருதுகிறேன். தெய்வங்களாகிய நீங்கள் நான் யார் என்றும் எங்கிருந்து வந்தேன் என்றும் கூறுங்கள்”

ஒரு விபத்தில், தன்னைப் பற்றிய விஷயங்களையே மறந்துபோன பழைய தமிழ் சினிமா கதாநாயகன் டாக்டர்களை பார்த்து, ‘நான் யார்?’ என்று கேட்பதுபோல், கடவுள்களைப் பார்த்து கேட்கிற ராமன்தான் இந்துக்களின் தனிபெரும் கடவுள்.

“கிருஷ்ணனைப் போல ராமனும் ஒரு மனிதனாக இருந்து கடவுள் ஆக்கப்பட்டார். ………………………………………………..

அருடைய கடவுள் தன்மையை முழுமையாக்குவதற்காகத் தான் அவர் விஷ்ணுவின் அவதாரம் என்றும், அவரது மனைவி சீதை, விஷ்ணுவின் மனைவியான லட்சுமியின் அவதாரம் என்றும் கூறும் கொள்கை கண்டு பிடிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது” என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்.

சீதையை ராமன் நடத்திய விதமும், வாலியை கொன்ற முறையும், ராமன் கடவுளாக அல்ல ஒரு மனிதனாக இருக்கக் கூட லாயக்கற்றவன் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

‘எனக்கு இலங்கைக்கு செல்வதற்கு உதவி செய்தால், உன்னை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவி செய்கிறேன்’, என்று சுக்ரீவனோடு ஒப்பந்தம் செய்துகொண்டுதான் வாலியை கொன்று இருக்கிறான் ராமன்.

அதை நிகழ்கால சம்பவங்களோடு பொறுத்திச் சொல்லவேண்டும் என்றால், ‘எனக்காக நீ பாகிஸ்தானோடு போர் இடு. உனக்கு நான் என்ன உதவிகள் வேண்டுமானலும் செய்கிறேன்’ என்று அமெரிக்கா இந்தியாவை நிர்பந்திப்பதுபோல.

நற்பெயரோடே மோசடிகளை செய்வதில், அமெரிக்காவின் தந்திரங்கள், அந்தக் காலத்து ராமனை நினைவுப்டுத்துகிறது. தனது சுயலாபத்துக்காக தனக்கு எதிரியாக இல்லாதவர்களைக் கூட கொலைசெய்கிற ராமனின் ‘நடத்தை’, இந்தக் காலத்து அமெரிக்கவை நினைவுப்படுத்துகிறது.

தனது சுயலாபத்துக்காக வாலியை கொல்வதற்கு என்ன தந்திரத்தை சுக்ரீவன் மூலம் கையாண்டானோ, அதே போன்ற தந்திரத்தைதான் பேரரசன் ராவணனை கொல்வதற்கும் அவனுடைய சகோதரன் விபிஷணன் மூலமாக கையாண்டு இருக்கிறான் ராமன், என்று ராமனின் யோக்கியதையை இரண்டாக பிளக்கிறார் டாக்டர் அம்பேத்கர். வாலியின் படுகொலைக்காக நிரம்ப கோபமுற்று ராமனை கட்டி வைத்து சவுக்கால் அடிப்பதுபோல் கேள்வி கேட்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

“வாலியின் படுகொலை ராமனின் நடத்தையில் படிந்த மாபெரும் களங்கமாகும். ராமனின் கோபத்திற்கு ஆளாகக் கூடிய எந்தக் குற்றத்தையும் செய்யாத வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றது மிகக் கடுமையான குற்றமாகும். …………………….

நிராயுதபாணியாக இருந்த வாலியை அம்பு ஏவிக் கொன்ற ராமனின் செயல் கோழைத்தனமாதும் பேடித்தனமானதும்மாகும். வாலியின் கொலை திட்டமிட்டுச் சதி செய்து நிகழ்த்தப்பட்ட படுகொலையாகும்”

வாலியையும், ராவணனையும் ராமன் கொன்றதற்கு, தன் மனைவி சீதையின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, அதிலும் தனிப்பட்ட சுயநலமே ராமனிடம் இருந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்:

” மனித மனம் படைத்த பாமர மனிதன்கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம், ராமன் சீதையிடம் நடந்துகொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. …………

ராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான்: உன்னைச் சிறைப்பிடித்தானே அந்த எதிரியைக் கடும்போரில் தோற்கடித்துப் பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ராவணனைக் கொன்றிடவும் அவனால ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெரும் தொல்லையை மேற்கொள்ளவில்லை.”

ராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்து இருக்க முடியும்? ராமன் அதோடு நிற்கவில்லை; சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். ராவணன் உன்னை களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப்பார்க்க எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது.

ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீட்டுவந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை ராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை”

இப்படிப்பட்ட ராமனைச் சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே.”

சீதை கருவுற்றிருந்த காலத்தில் அவளை கொண்டுபோய் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடுகிறான் ராமன். பிறகு பல ஆண்டுகள் கழித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு அவளை சந்திக்கிற ராமன் அப்போதும், அவளை சந்தேகித்து, தீயில் இறங்கி அவள் நேர்மையை நிரூபிக்கச் சொல்கிறான். அப்படி நிரூபித்தப் பிறகு, பூமியை இரண்டாகப் பிளந்து அதனுள் இறங்கி விடுகிறாள் சீதை.

இதை டாக்டர் அம்பேத்கர் மிகுந்த கோபத்தோடு இப்படி குறிப்பிடுகிறார்:

“காட்டுமிராண்டித்தனமானவனைவிட கேவலமாய் நடந்துகொண்ட ராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும் சீதை மரணத்தையே விரும்பி ஏற்றுக்கொண்டாள். கடவுளான ராமனின் கயமையும் சீதையின் துயரமும் இவ்வாறு காணப்படுகிறது.”

ambedkar_title1‘ராவணன் பெண் பித்தன், ராமன்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று உயிராக வாழ்ந்தவன்’ என்று மூணு பொண்டாட்டிகாரன் கதாகாலட்சபம் செய்வதுபோல், பல பெண்பித்தர்களும், பக்தர்களும் ராமனுடைய சிறப்பு ‘ஏக பத்தினி விரதன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் டாக்டர் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளோடு, ‘ராமன் ஒரு ஸ்திரிலோலன்’ என்று நிரூபித்திருக்கிறார்:

“ராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாகக் கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது. வால்மீகியே கூட தன் ராமாயணத்தில் ராமன் அனேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் ராமன் வைத்திருந்தான்.”

“ராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி எனறும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி எனறும் வரையறுக்கப்பட்டது. …………………………………….

காலை முதல் நண்பகல் வரை ராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறை வேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தை கழித்தான்.

அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் களிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான். ராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். ……………………………….

ராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாடடத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான், என வால்மீகி குறிப்பிடுகிறார். …………………………………………………..

அழகிகளின் மத்தியில் ராமன் குடித்து, கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் ராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர்.”

‘ராமன் ஏக பத்தினி விரதன் அல்ல, ஏகப்பட்ட பத்தினிகள் விரகன்’ என்று அம்பலப்படுத்துகிறார் டாக்டர் அம்பேத்கர். இந்த ராமனின் ராஜ்ஜியம் வரவேண்டும் என்பதுதான் காந்தியின் கனவாக இருந்தது. காந்தியின் கனவு நினைவாகி இருந்தால்….. நினைக்கவே கூசுகிறது. உண்மையில் ராம ராஜ்ஜியம் என்பது, காம ராஜ்ஜியம்தான்.

***

‘ராமனை, இப்படி எல்லாம் கொச்சைப் படுத்தலாம். ஆனால் அவன் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினான். நீதி, நேர்மை தவறாமல் ஆண்டான். அவன் ஆட்சியில் எல்லா உயிர்களும் நிறைவாக மகிழ்ச்சியாக வாழந்தன. நீதி தவறாத ராமனின் ஆட்சியைத்தான் ராமராஜ்ஜியம் என்றார், மகாத்மா. அந்த ராமனின் ஆட்சியைத்தான் வலியுறுத்தினார் காந்தி மகான்.’ என்று காந்திய ஆதரவாளர்களான இந்து மிதவாதிகள் விவாதிக்கக் கூடும். இந்த வாதத்தை ஊதிதள்ளுகிறார் டாக்டர் அம்பேத்கர். காந்தியத்தின் அரைஆடையும் அம்பேத்கரின் அறிவுக்கு முன் பறந்துபோய் நிர்வாணமாகிறது.

“நாட்டு மக்ளின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக்கூட ராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒருதடவை ராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறார். அதுவும் துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் ராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் ராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.”

“பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது. …………………………………….

அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு ராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். மனம் போனபடி, பழித்தான், சபித்தான். குற்றவாளியைப் பிடித்துத் தணடித்துச் செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினப் போர் நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தினான். …………………

நாட்டு மக்களுள் அதாவது ராம ராஜ்ஜியத்தல் யரோ ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று ராமன் திடமாய் நம்பினான். …………………..

உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றிவந்தான். அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்திலாழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனைநோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா-? மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத்தவம் செய்பவனா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவிவிட்டான் ராமன். அதே நொடியில் எங்கே தொலை தூரத்து அயோத்தியில் அகாலமரணமைடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம்.”

ஒரு மனிதன் எந்த நேரமும் குடி, பல பெண்களுடனான உறவு என்று ஊதாரியாக வாழ்வது மோசமானது. அதுவும் ஒரு மன்னன் அப்படி இருந்தால், அது எவ்வளவுக் கேவலமானது.

ஆனால், சம்பூகனை கொலை செய்த ராமனின் செயலை அவனுடைய ஊதாரித்தனமான பாலியில் லீலைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ராமனின் காம லீலைகள் எவ்வளவோ முற்போக்கானவை. படுகொலை செய்து முறையற்ற தீர்ப்பு வழங்கி அநீதிக்கு வழிவகுத்த ராமனை மேலும் ஆட்சி அதிகாரத்தில் தலையிடவிடாமல் பார்த்துக் கொண்டு, அந்தப்புரத்திலேயே வளைத்து வைத்திருந்த அந்த ‘அழகி‘களுக்குத்தான் நாம் நன்றி சொல்வேண்டும்.

சம்பூகன் என்னும் ‘சூத்திரனை’ பார்ப்பானுக்காக, பார்ப்பனியத்தை பாதுகாப்பதற்காக கொலை செய்த ராமனின் தோலுரித்த, டாக்டர் அம்பேத்கர் சிலையின் கழுத்தை உடைக்கிறார்கள், நன்றிகெட்ட சூத்திரர்கள்.

-தொடரும்

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர்படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.

8 thoughts on “‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை

  1. //சம்பூகன் என்னும் ‘சூத்திரனை’ பார்ப்பானுக்காக, பார்ப்பனியத்தை பாதுகாப்பதற்காக கொலை செய்த ராமனின் தோலுரித்த, டாக்டர் அம்பேத்கர் சிலையின் கழுத்தை உடைக்கிறார்கள், நன்றிகெட்ட சூத்திரர்கள்.//

    தொடர் சிறப்பாக, சிறப்பான செய்திகளை உள்ளடக்கி வருவது மகிழ்ச்சி.
    பார்ப்பனியத்திற்கு பாதந்தாங்கும் , பார்ப்பனர் காலை நக்கிப் பிழைக்கும் ஒரு சில சூத்திரர்களின் செயல்கள் மோசமானதுதான். கண்டிக்க தக்கதுதான். அதற்காக ஒரு நல்ல பதிவில் அந்த கழிசடைகளை தொட்ர்ந்து நினைவு படுத்த வேண்டுமா?.

    அவர்களையும் திருத்துவதாக பதிவு அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    நன்றி தோழர்.

  2. வணக்கம் நன்பரே
    உங்களின் பதிவுகள் அருமையாக உள்ளது
    நான் புதிதாக படித்ததில் பிடித்தது என்ற வலைப்பூ தொடங்கியுள்ளேன்
    தங்களின் வலைபக்கத்தில் உள்ள எனக்கு பிடித்த பதிவுகளை காப்பி செய்து பதிய விரும்புகிறேன். வந்து பாருங்கள்.. உங்களுக்கு பிடிக்காவிட்டா நீக்கி விடுகிறேன்

    http://padiththathil.blogspot.com/

  3. மிகச்சிறப்பான பதிவு.

    இப்போது உள்ள கடவுள்களின் தொல்லை போதாதென்று ராமன் என்ற புது கடவுளின் தொல்லை வேறு.

    கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் ராமனை யாரும் கடவுளாக பார்க்கவில்லை.

    இந்த மூட நம்பிக்கைகள் நீடித்தால் நம் நாட்டில் மக்கள் தொகையை விட கடவுள் தொகை அதிகமாகி விடும்

    விழித்தெழ வேண்டியது நாம் தான்.

    நம் மக்களுக்காக குரல் கொடுத்த மிகச்சிலரில் அம்பேத்கர் முதன்மையானவர் என்பதை சூத்திரர் பட்டத்தை சுமந்து கொண்டிருக்கும் நாம் மறந்து விடக்கூடாது.

  4. சிறந்த பதிவு தோழர் படிக்கபடிக்க பரவசம் ஊட்டுகிறது

  5. http://terrorinfocus.blogspot.com/2007/10/rama-rama.html

    Is it possible to follow the customs of Ramayana in today’s life?

    Laxmanan cut Soorpanagai’s (an Aboriginal Girl) nose and breast because a Suthra girl proposed her love to a Kshatriya Man. If we have to follow Ramayana customs today then we have to give the same punishment to one Woman. Her name is Umabharathi, who is a Suthra girl proposed Brahman Man Govindacharya. (http://www.tribuneindia.com/2000/20001010/nation.htm#10)

    #9) if somebody believes that Ramayan is an historical event, we can compare other kings with king RAM.

    Karikalan’s achievement is kallanai.

    Alexander – Greek impact to all civilizations thro his
    invasion.

    RajaRajan’s achievement is Big Temple.

    King Ashoka’s achievement – Saranath stupi, preaching
    Buddhism across the world.

    Agbar’s achievement – modern revenue department

    Rama just lost his wife, fought for her chastity and did nothing to people, where as the great kings of our past did lots of good things to the people.

    Rama’s achievements (Crimes) include:

    · Suspected his Wife Seedha and insulted her in front of everybody with ugliest words we could find in dictionaries. He asked her to prove her chastity. (It is the first SATI case). He even suspected Lakshman, Bharadhan, and Hanuman etc.

    · Killed Sampookan only because he is a Suthra, who tried to worship god directly, which is against Brahmanism.

    · Killed many innocents (tribal people) only because they are against Varnasrama dharma and only because they are against their land being used for Brahmanic rituals.

    · Lakshman killed Dadagai’s son. Raman solace Lakshman that he killed a Suthra so no need to worry.

    · Before building the bridge he destroyed a Village at the request of Sea king, because untouchable (Panjamas) people of the village have used a common Well in that village.

    · Rama himself and by other characters been projected as a Diehard protector of Varnasrama Dharma. The whole text of Valmiki Ramayana is a proof for this. And Ramayana is the literary symbol of re-establishment of the caste society. All other personal characters of him are common to any praised historic beings.

    · Killed Vali and Dadagai in a most cowardly manner.

    · Lakshman cruelly cut Soorpanagai’s nose and breast when she
    expressed her love. It is definitely inhuman act.

    · He insulted and chafed old woman kooni. This is surely not a Noble character to embrace.

    We cannot consider one as a God only because he is good for his friends, brothers and he is loyal to his father. And when he is anti people, Anti women and pro caste, Pro Sati society, we should actually cast him away from our Society. Rama actually deserves this and that is one of the ways to redeem our old pride of casteless society. He is not a model to be followed.

    #10) Rama committed suicide. It is even disgraceful and sure it is not a noble character to embrace.

    Rama never felt guilty when he tortured Seeta. But he only bereaved for his brother’s demise and committed suicide. Did he really love his wife? Did he really put faith on his half-in-life, Seeta?

    When he was roaming around forest after Seeta was missing, He bereaved with lustful memories of Seeta. He worried about he is missing the pleasures of Seeta and he worried about Seeta changes his love towards Ravana. He even says “if he were in Ayodya he may not worry about Seeta is missing, because there are alternatives for pleasure available.” It is only the pleasure of flesh that defines Seeta to him. That is why didn’t bereave for her. Instead he bereaved for his brother, where true love bond them. Is this a right attitude to follow in today’s society?

    #11) as per a famous folklore version of Ramayana, Lakshman’s wife
    Urmila died during her long-sleep. Urmila went into a trance and fell unconscious when Laxman was serving his brother Rama in the forest. When Lakshman came back to Ayodya he searched for his wife and found only her Skeleton remains in her bed. Lakshman’s concern about his wife was mentioned nowhere in the Ramayana. Like his brother Rama, Lakshman also considered his wife just as an object.

  6. எந்த வேலையும் செய்யாமல் மக்களை வாட்டி வதைத்து கொன்று தான் அந்த எல்லா அரசர்களும் ஆட்சி செய்தார்கள்.அப்படி இருக்கும் போது ராமராஜியம் நீதியானது நேர்மையானது ,சமத்துவமானது என்று சொல்வதற்கே தகுதி அற்றது.

    நல்ல பதிவு வாழ்த்துகள் தோழர்

  7. ராம்னுடைய புனித பிம்பங்களை அம்பேத்கர் அடித்து நொறுக்குகிறார் சிறப்பான பதிவு தோழர்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading