மழலையர் கல்வியை தடை செய்ய வேண்டும்!
சமச்சீர் கல்விக்கான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி?
-எம். முகமது, திருநெல்வேலி.
மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி என்கிற பொதுப்பாடத்திட்ட முறையால், மெட்ரீக் பள்ளிகளின் வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டு, சிபிஎஸ்இ வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கும்.
அதை விட அதிகமாக மழைலையர் கல்வி என்கிற பெயரில் வர்த்தக நிறுவனங்கள் நடத்துகிற சமூக விரோத கும்பலின் சூதாட்டம், ‘கமான்.. கமான்…’ என்று ரேசில் குதிரைகளை கூவி அழைப்பதுப்போல். பெற்றொர்களை கூவி அழைத்து. இன்னும் கூடுதலாக கொள்ளையடிக்கும்.
ஆக, சிபிஎஸ்இ பள்ளிகளையும் பொதுப்பாடத்திட்ட வரையறைக்குள் கொண்டுவரவேண்டும். மழலையர் கல்வியை தடை செய்ய வேண்டும் அல்லது அதற்கும் பொதுப் படத்திட்டத்தை கொண்டுவரவேண்டும்.
இல்லையேல் பணம் இருக்கும் பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளில் பல லட்சங்களை செலவு செய்து தங்கள் குழந்தைகளுக்கு ‘தரமான’ கல்வித் தருவார்கள்.
பிறகு ஒன்றாம் வகுப்பில் பொதுப்பாடத்திட்ட பிரிவுக்குள் வரும்போது, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் அப்போதுான் தங்களுடைய அ, ஆ, இ – A, B C யை துவங்குவா்கள்.
முதல் வகுப்பில் படிக்கும்போதே இப்படியான பெரிய வித்தியாசம் கிராமப்புற, மாநகராட்சி பள்ளிகளின் குழந்தைகள் மனதில் பெரிய தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். குழந்தைகளிடம் ஏற்றத் தாழ்வுகளையும் காழ்ப்புணர்ச்சியையும் உண்டு செய்யும்.
அதை சரி செய்தால்தான் பொதுப்பாடத்திட்டம் முழுமையடையும். அடுத்த நமது இலக்கு இதுதான்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடயைவை:
தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ
சமச்சீர் கல்வியா? சர்ச் பார்க் கல்வியா?
‘தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்
ஆனாலும், அப்பவே.. எனக்கொருடவுட்டு, ‘கமுக்கம’ இருக்காங்களேன்னு..
100% UNMAI ,NICHAYAM ETHU NADAKKUM,
ETHAI MUNKOOTTIYE NAAM THADUTTHAKA VENDUM
MUNNODIYAANA ARIVUPOORVAMAANA PATHIL
VAZHTTHUKKAL & MIKKA NENTRI THOZHAR.
நல்ல பதிவு.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com