கீரை விற்பவர் இலக்கியவாதியாக மாறினால், இலக்கியவாதிகள் என்ன ஆவார்கள்?
‘சீரியஸ் எழுத்தாளர்கள் கதைகளை சீரியஸாக படிக்கிறார் ஒரு ஆட்டோ டிரைவர்’ என்று சீரியஸ் எழுத்தாளர்கள் சில நாட்களுக்கு முன்பு ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி (தொழிலாளர்கள்) இவர்களுக்கு உள்ள மட்டமான அபிப்ராயமே கதை எழுதுகிற ஆட்டோக்காரரை குறித்து பெருமையாக பேச வைத்தது.
தன் கதைகளில் பொருளாதர ரீதியாக ஜாதி ரீதியாக உயர்ந்தவனை கிரிமினல் ஆக இருந்தாலும், ‘அவர் இவர் என்று எழுதுவதும் – ரிக்ஷாக்காரர், மீன் விற்கும் பெண், கீரை விற்பவர், கூலித் தொழிலாளர்கள் இவர்கள் வயது முதிர்ந்தவர்களாக நேர்மையானவர்களாக இருந்தாலும் அவர்களை `அவன் – அவள்’ என்று விளிப்பதுதான் இவர்களது அழகியல்.
ஆம், எழுத்தாளனாக இருப்பவன் வங்கியில், தொலைபேசி துறையில், ரயில்வேயில் வேலை செய்ய வேண்டும்; அல்லது துணிக்கடை வைத்திருக்க வேண்டும். இல்லையேல் எந்த வேலையும் செய்யாமல் ஊதாரியாக ஊர் திரிய வேண்டும். உழைப்பாளர்கள் கதை எழுதுகிறார்கள் என்பது, இவர்களுக்கு அதிசயம் மட்டுமல்ல; அவமானமும் கூட.
பெருவாரியான உழைப்பாளர்கள் இவர்களைப் போல் இலக்கியவாதிகளாக மாறிவிட்டால், இவர்கள் வேறு துறைக்கு மாறிக் கொள்வார்கள் என்பதே உண்மை. இது உயர் நடுத்தர வர்க்க புத்தி.
*
‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ புத்தகத்திலிருந்து..
*
புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:
‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384
கோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138
திருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம் – 98655 96940
தஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546
வெளியீடு:
‘அங்குசம்’
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
ஞா. டார்வின் தாசன் – 94443 37384
One thought on “கீரை விற்பவர் இலக்கியவாதியாக மாறினால், இலக்கியவாதிகள் என்ன ஆவார்கள்?”