கடவுள் அல்ல; களவாணி
“நந்தா, நீ என்ன தில்லை வாழ் அந்தணனா? உன் பக்தி எவ்வளவு சக்தி உள்ளதாக இருந்தாலும் உன்ன நான் உள்ள விட மாட்டேன். அப்படியே வெளியில் நின்று ‘சல்யூட்’ அடிச்சிட்டு போயிகிட்டே இரு..” ( சிவனின் மைண்ட் வாய்ஸ்)
“தில்லை வாழ் அந்தணர்களே… இத நந்தனிடம் சொல்லிடுங்க.. அவன் தொல்லை தாங்க முடியல.. நான் அவனிடம் நேரில் சென்றல்ல, கனவில் செனறு சொல்லவதற்குகூட அவன் ஜாதி தடையாக இருக்கிறது. என்பதையும் புரிய வையுங்கள்.”
“டேய் தமிழா…? அர்ச்சனைக்கு உகந்தது தமிழா..? அது நடுத் தெருவுல.. ரோட்ல.. கும்பலா நீ்ங்க கூடியிருக்கிற இடத்துல.. தமிழ் மட்டுமே தெரிந்த பரதேசிகளிடம் என்னைப் பற்றி புகழ்ந்து பாட சொன்னா..
அத ஏண்டா என்னோட ‘ரூம்’ (கவருறை) உள்ளே வந்து பாட விரும்புறீங்க..? தமிழ் என்ன பெரிய சமஸ்கிருதமா?”
“நீ பட்டினியா கிட… பல்டி அடி.. தீட்சிதர்களிடம் அடி வாங்கு… சுப்ரீம் கோர்ட்டுக்கு கூட போ… என்ன ததிங்கிணத்தோம் போட்டாலும் உன்னயும் உன் மொழியையும் உள்ளே விட மாட்டேன்”
என்று ஒற்றைக்காலில் நின்று அடம் பிடிக்கிறான் தில்லை அம்பல நடராஜன்.
அவன் கடவுள் அல்ல; களவாணி. கூட்டுக் களவாணி.
அந்தக் காலத்தில் தில்லைவாழ் அந்தணர்களோடும், இந்தக் காலத்தில் தீட்சிதர்களோடும்.
*
08-01-2014 அன்று face bookல் எழுதியது.
தொடர்புடையவை:
தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’
சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும் (இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக் கூடாது…)
சிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்?
K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது!
yeppa mudiyala………