நன்றி
வழக்கமாக முற்போக்காளர்களால் நடத்தப்படுகிற கருத்தரங்கங்களில் பிரமுகர், திரைப்படத் துறையைச் சேர்ந்த இயக்குர், நடிகர் கலந்து கொண்டால்; ஒரு சாதாரண சினிமா ரசிகனை போல் பேரார்வத்தோடு ‘ஆபிசுக்கு லிவ் போட்டு-பர்மிசன் போட்டு’ கண்டிப்பாக கலந்து கொள்கிற முற்போக்காளர்கள் பலர்;
டாக்டர் அம்பேத்கர்-பெரியார் கருத்துகளுக்காக தீவிரமாக இயங்குகிறவர்கள் பேசினால் வருவதில்லை. விசயத்தை விடவும் பிரபலத்திற்கு, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள் மத்தியில்..
நேற்று திரளாக வந்திருந்து சிறப்பாக நடத்திக் கொடுத்த அனைத்து தோழர்களுக்கும் என் நன்றிகள்.
அரங்கு முழுவதும் கூடிய தோழர்களோடு சிறப்பாக நடைபெற்றது ‘பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ்த்தேசியங்கள்’ கருத்தரங்கம்.
மிக்க மகிழ்ச்சி !