மனுநீதி சோழன்; ராமனின் வாரிசு, பிரகலாதனின் நண்பன்

rama_9

மனு நீதிச் சோழனின் மகன், கன்றுக் குட்டியை கொன்றான் என்பதற்காக; தாய்ப் பசு ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்டது ஏன் தெரியுமா?

அது, இராம. நாராயணன் படத்தில் வந்த பசு வின் ‘முப்’பாட்டி பசு.

1 February at 11:21 ·

பஸ் டிரைவர் கவனக்குறைவால் கன்றுக்குட்டியின் மேல் வண்டியை ஏற்றிக் கொன்று விடுகிறார். அதற்காக அவருக்கு நீதி மன்றம் மரணதண்டனை வழங்கினால், ‘என்ன ஒரு சிறப்பான தீர்ப்பு? இவரல்லவா நீதிமான்‘ என்று பாராட்டுவோமா?

“ச்சீ. இது ஒரு நீதியா? அநீதி.” என்று தண்டனையைத் திரும்பப் பெறும்வரை போராடுவோமா?
‘ஆம்’ என்றால்;
அப்புறம் எதுக்குக் கவனக்குறைவால் தன் தேரை கன்றுக்குட்டிமேல் மோதிக் கொன்ற ஒரு சிறுவனுக்கு, மரணதண்டனைக் கொடுத்த, மனுநீதி சோழன் என்ற ஒரு கொடூரனை நீதி தவறாதவன் என்று சொல்கிறோம்?

1 February at 20:43 ·

மனுநீதிச் சோழனின் கதையில் கிடைக்கும் ‘நீதி’ மனிதர்களை விடப் பசு உயர்ந்தது. பசுவிற்குத் தீங்கு செய்தால் தன் மகனே ஆனாலும் அவனை மன்னன் தண்டிக்க வேண்டும் என்கிற பார்ப்பனிய நீதி.

‘காட்டில் சூத்திரன் சம்பூகன் தவம் செய்ததால்தான் என் மகன் இறந்தான்’ என்ற பார்ப்பனரின் பொய்யை வேதவாக்காகக் கொண்டு, சம்பூகனை கொன்ற ராமனின் வாரிசு மனுநீதி சோழன்.

தன் தந்தை இரணியனியின் பார்ப்பனிய எதிர்ப்புக் கருத்துக்கு எதிராக,பார்ப்பனியத்திற்கு ஆதரவாகக் களவானித்தனம் செய்து தந்தையையே காட்டிக்கொடுத்து, கொலை செய்யக் காரணமான பிரகலாதனின் கொள்கை நண்பன் மனுநீதி சோழன்.

ஆக, பார்ப்னியத்திற்கு அடியாள் வேலைப் பார்த்ததால்தான், ராமன் கடவுளாகப்போற்றப்படுகிறான்.
‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதற்கு எதிராகச் செயல்பட்டபோதும், பார்ப்பனியத்திற்குப் பல்லக்கு தூக்கியதால் பிரகலாதன் ‘கருவிலே திரு’ என்று போற்றப்படுகிறான்..
தன் மகன் என்றும் பாராமல், பார்ப்பனியத்திற்கு ஆதரவாக அநீதியான தீர்ப்பு வழங்கியதாலேயே மனு‘நீதி’ சோழன் என்று புகழப்படுகிறான்.

பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மிகத் தீவிரமாக அமல்படுத்திய பார்ப்பன அடிமை தான், மனுநீதிசோழன்.

2 February at 21:34 ·

தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

ஆர்.எஸ்.எஸ் சின் தமிழ் உணர்வும் மணியரசனின் தலித் உணர்வும்

10 thoughts on “மனுநீதி சோழன்; ராமனின் வாரிசு, பிரகலாதனின் நண்பன்

  1. Selvamuthu Kumar மனு நீதிச்சோழன், விஜயாலயன் வழிவந்த ராஜராஜன், ராஜேந்திரன் இவர்களெல்லோருமே பார்ப்பனர்களிடம் நாட்டின் நிர்வாகம், கோவில், நிலம், நிதி அனைத்தயும் ஒப்படைத்து, தமிழர்களின் சாதி வேறுபாட்டுக்குக் காரணமாக அமைந்தவர்கள். இவர்கள் உண்மையான தமிழ் மன்னர்கள் அல்ல, வடக்கேயிருந்து வந்தவர்கள் என்பதை இக்பால் செல்வனின் கோடங்கி தளத்தில் அருமையாக, ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளார்!
    1 February at 11:54 · Edited · Unlike · 15

    Durai Manigandan Sreedharan Sathiamoorthy. I request you watch prof.ambazhagan speech at madras university in 2010. It’s available on YouTube. He answered all your questions
    1 February at 15:25 · Edited · Like

    அட்ரா சக்க · Friends with பிரபா அழகர் and 15 others
    Selvamuthu Kumar …link please
    1 February at 17:46 · Like

    BK BK · Friends with பிரபா அழகர் and 36 others
    1 February at 21:42 · Unlike · 1

    இரண்ய வர்மன் · 5 mutual friends
    அன்னே அப்டியே இந்த வடுக நாயக்க மன்னர்களின் பார்பனிய அடிமைத்தனத்தை பத்தி கொஞ்சம் போட்டீங்கன்னா ..புண்ணியமா போகும் …
    1 February at 22:29 · Like

    Selvamuthu Kumar இக்பால் செல்வனின் இணையதளம் மாயமாக மறைந்துவிட்டது. அதுபற்றி தமிழ்மணத்தில் வந்த செய்தி http://timeforsomelove.blogspot.in/…/blog-post_2182.html

    ரிலாக்ஸ் ப்ளீஸ்: கோடங்கி தளம் இக்பால் செல்வன்…
    TIMEFORSOMELOVE.BLOGSPOT.COM
    2 February at 02:51 · Like · Remove Preview

    Sreedharan Sathiamoorthy · 13 mutual friends
    ஈழத்தில் லட்ச்சக்கணக்கானவர்கள் இனப்படுகொலை செய்யப்படால் தமிழன் என்பவன் திராவிடனுக்கு தமிழன்…………கச்சதீவில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டால் தமிழன் என்பவன் திராவிடனுக்கு தமிழன்……… பர்மா, மலேசியா, கேரளா, கர்நாடக, உடைந்த ஆந்திரா, …See More
    Yesterday at 02:32 · Like

    Selvamuthu Kumar பார்ப்பனர்கள், சீமான்களின் கொள்கைப்படி தமிழராகும்போது, தமிழறிஞர் மு.வரதராசனார் நாயுடு, திருப்பதி பல்கலையில் தமிழ் துறைத் தலைவராக இருந்த ந்.சுப்பு ரெட்டியார், ஈழத் தமிழர் வாழ்வுக்காக பூந்தமல்லி சிறையில் ஓன்றரை ஆண்டு சிறைவாசம் அனுபவித்த வைகோ இவர்களைத் தம…See More
    Yesterday at 05:37 · Like

    Nivetha Raju · Friends with Arulmozhi Adv and 3 others
    இரண்ய வர்மன்: இந்த வீடியோவ பாத்தீங்கன்னா நீங்க கேட்ட புண்ணியம் உடனே கிடைக்கும்.
    http://youtu.be/LZM_7iwltP8

    நாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்
    நாயக்கர்கள் காலம்-பேராசிரியர் சுப….

  2. DrRamesh Palanisamy · 2 mutual friends
    அரசுரிமை போட்டியாக இருக்கலாம்
    1 February at 20:49 · Unlike · 1

    Anthony Fernando மனுநீதி சோழன் என்பதே ஒரு புரட்டுக் கதை … வரலாற்றில் மனு நீதி சோழன் என்று எந்த தமிழ் அரசனும் கிடையாது
    1 February at 20:59 · Unlike · 25

    Selvaraj Ksraj · Friends with Feroz Babu and 9 others
    மனு ங்கரபேரே வில்லங்கம் பிடித்தபேரா இருக்கும் போலிருக்கு மனு நீதிக்கும்சரி இன்று மக்கள்பிரச்சனைக்காக அதிகாரிகளிடம் கொடுக்கும் மனுவுக்கும் சரி மரியாதையே இல்லை
    1 February at 21:20 · Unlike · 5

    Venmani Mani இந்த ஆதங்கம் எனக்கும் இருந்ததுதான்..ஆனால் தோழர் மதிமாறன் பதிவிட்டு விட்டார்..நான் வழக்கு போட போகிறேன்… என்னுடைய கருத்தை திருடி விட்டார் என…
    1 February at 21:32 · Unlike · 3

    போஸ்ராசா சீசுப்பையா · 7 mutual friends
    அவன் பேருலயே இருக்கு மனு..
    1 February at 21:35 · Unlike · 2

    Karthik Palani · Friends with Baaski Baaskar
    Arumai thozhar
    1 February at 22:22 · Like

    Janaki Raman மாடு வந்து மணியடித்ததாமே??
    1 February at 22:27 · Like

    போஸ்ராசா சீசுப்பையா · 7 mutual friends
    எந்த மணி ?
    1 February at 22:48 · Like

    Ko Maghan Hegelian · 111 mutual friends
    கதைபடி சோழனுக்கு ஒரு பையன் தான் . அவனை கொண்ணுட்டா ராஜாவுக்கு பிண் நாட்டை சுலபமாக தன் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்ற ராஜகுருவின் தந்திரமாகவே இதை நான் பார்க்கின்றேன்…..
    2 February at 03:54 · Edited · Like · 5

    அ.மதி திராவிடன் தாய்மொழி தமிழ் நம் மன்னர்கள் பெரும்பாலும் முரடர்களாகவும், அடிமுட்டாள்களாகவும், புகழ்ச்சிக்கு மயங்கி விழும் புண்ணாக்குகளாகவுமே இருந்துள்ளனர்.
    அதனால்தான், எங்கிருந்தோ ஆடுமாடு மேய்க்க வந்த ஆரியப் பார்ப்பனர்களின் நயவஞ்சக மொழிகளைப் புரிந்துகொள்ளும் திறனின்றி, ‘அவாளின்’ சூ…See More
    2 February at 07:02 · Like · 3

    Kathir Vel · Friends with பாவெல் இவானவிச் and 6 others
    அது பிராமணர் சூழ்ச்சி.வாரிசு இல்லாமல் அரசு சீர்குலைந்து போக வேண்டும் என்ற எண்ணம் .
    2 February at 08:20 · Like · 2

    இலங்கைநேசன் இலங்கை · 2 mutual friends
    .தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் உங்களுக்கு பேரூந்து ஓட்டுனர் என்று ஒரு சொல் இருப்பது தெரியாமல் இருப்பது நியாயம்தான்..
    2 February at 08:56 · Like

    வே மதிமாறன் லாரி என்ன சிற்றுந்தா?
    2 February at 09:01 · Like · 4

    Jawahar Kennedy A · 10 mutual friends
    கதை.உண்மை அல்ல.
    2 February at 09:25 · Like

    Syed Mohamed · Friends with தமிழ் Kathalan and 49 others
    சரக்குந்து
    2 February at 09:28 · Like

    Prabagaran See குடும்பத்திற்காக இனத்தை காட்டிக்கொடுத்தவனுக்க அங்கே சிலை வைக்கமுடியும்.
    2 February at 13:07 · Like

    Kannaiyan Ramamoorthy · 5 mutual friends
    மனு நீதி சோழன் என ஒருவர் உண்மையில் தமிழ் வரலாற்றில் இடம்பெற்றவரா????
    2 February at 23:55 · Like · 1

    திரு நாவு க்கரசு Arumai
    Yesterday at 06:53 · Like

  3. Kulitalai Mano · 8 mutual friends
    சகோ மதி இந்த கதைகளை இன்று பார்ப்பனன் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் நாம் ஏன இந்த கதைகளை விவரிக்கனும்
    பார்ப்பனீய சூது அரசியலை விளக்கமாக எழுதுங்கள்
    2 February at 09:48 · Like · 1

    வே மதிமாறன் இது அதாங்க..
    2 February at 09:49 · Like · 4

    Kulitalai Mano · 8 mutual friends
    மதி நீங்க சொல்வதை ஏற்கிறேன்
    இன்றைய பாம்புகளின் விஷத்தை நீங்கள் எழுதினால் வீரியமாக இருக்கும் சகோ
    2 February at 09:51 · Like

    வே மதிமாறன் திரு. Kulitalai Mano மனுநீதி சோழனை விமர்சிப்பதை நீங்கள் திமுக வையும் கலைஞரையும் விமர்சிப்பதாக உணர்கிறீர்களா?
    2 February at 09:57 · Like · 6

    Sivakumar Shanmugam · 41 mutual friends
    அப்படி உணர வாய்ப்பே இல்லை .. கலைஞர்தான் நம்மை போன்று சம்பூகனின் சூத்திர இனத்தை சேர்ந்தவர் ஆயிற்றே . பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு அய்யா பெரியாரை எதிரத்தார்களோ அதே அளவுக்கு கலைஞர் அவர்களையும் எதிர்க்கின்றார்களே
    2 February at 10:10 · Like · 1

    Kulitalai Mano · 8 mutual friends
    நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டது மனம் வருந்துகிறது
    என் உயிரனைய தலைவர் கலைஞரிடமும் மாறுபட்ட பார்வை உண்டு அதை அவரிடம் சொல்வேன் முகநூலில் அல்ல
    ஸ்டாலினை விமர்சிக்கிறேனே முதிர்ச்சி வேண்டும் என்று …See More
    2 February at 10:11 · Unlike · 6

    Kulitalai Mano · 8 mutual friends
    பெரியார் அண்ணா கலைஞர் வரிசை முடிந்து போனதே என வருத்தத்தில் வாழ்கிறேன் மதி
    2 February at 10:13 · Unlike · 4

    Kulitalai Mano · 8 mutual friends
    மதி ஒரு சிந்தனையாளர் அவர் ஒருபோதும் கலைஞரை எதிரிகளுக்கு விட்டுத்தரமாட்டார் என்பதறிவேன்
    2 February at 10:17 · Like · 3

    Sivakumar Shanmugam · 41 mutual friends
    மனுநீதி சோழன் , முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போன்றவர் தமிழகத்தை ஆண்டது பைத்தியக்கார்ரகள் கையில் தமிழகம் இருந்துள்ளது என்பதைக்காட்டுகிறது
    2 February at 10:26 · Unlike · 8

    Jawahar Kennedy A · 10 mutual friends
    பகுத்தறிவு சாதிமறுப்பு தமிழ்பற்று – இவை நவீனப்பட்டுள்ளது … நீர்த்துவிடவில்லை …. நீடித்தே இருக்கும்
    2 February at 10:45 · Unlike · 7

    Karan Karki · Friends with மகிழ்நன் பா.ம and 71 others
    மனுநீதியென்பது பார்பனர்களுக்கான நீதி மற்ற எவருக்குமே அது நேற்றும் இன்றும் நாளையும் அநீதியானதே அதை நடைமுறை படுத்திய மனு நீதி சோழன் பார்பன தத்துவத்துக்கு மயங்கியவனல்ல பார்பனிய தோளுக்கு மயங்கியவன்
    2 February at 10:54 · Like · 5

    Karthikeya Sankar Muthurajan ராமன் வடநாட்டை சேர்ந்த கதா பாத்திரம்….மனு நீதி சோழன் தென் னாடு கதா பாத்திரம் …இதில் எது பொது ?
    2 February at 11:10 · Unlike · 2

    Sivakumar Shanmugam · 41 mutual friends
    இரண்டுக்குமே பொது மனுதர்மம் என்கிற மனுஸ்ருமிதி
    2 February at 13:43 · Edited · Unlike · 4

    Mani Maran *தூக்கு தண்டனை*
    நான் எதிர்பாராமல் செய்த கொலைக்காக
    நீங்கள் நேரம், தேதி, இடம், கயிறு என…See More
    Mani Maran’s photo.
    2 February at 16:12 · Edited · Like · 1

    Mohamed Arif · Friends with அபு ரய்யான் and 1 other
    நீதிக்கே மனு போடவேண்டும் …
    2 February at 22:05 · Like

    Sreedharan Sathiamoorthy · 13 mutual friends
    ஈழத்தில் லட்ச்சக்கணக்கானவர்கள் இனப்படுகொலை செய்யப்படால் தமிழன் என்பவன் திராவிடனுக்கு தமிழன்…………கச்சதீவில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டால் தமிழன் என்பவன் திராவிடனுக்கு தமிழன்……… பர்மா, மலேசியா, கேரளா, கர்நாடக, உடைந்த ஆந்திரா, …See More
    Yesterday at 02:32 · Like

    Sivakumar Shanmugam · 41 mutual friends
    சிரீதரன் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது சத்தியமாக எனக்குப்புரியவில்லை .. ஆனால் புற்றீசல் போன்று கிளம்பியுள்ள பார்பபன அடிவருடிகள் சாதீயத்தை நிலைநிறுத்தும் சன்மார்க்கவாதிகள் ஈழத்தமிழர்களுக்காக உயிரைக்கொடுத்து உழைப்பது போல் நடித்து வயிறு வளர்த்து …See More

    பெரியாரை எதிர்க்கும் தமிழ் தேசியங்கள் – வே.மதிமாறன்
    பெரியாரை எதிர்க்கும் தமிழ் தேசியங்கள்…
    YOUTUBE.COM
    Yesterday at 07:33 · Like · 1 · Remove Preview

  4. Jawahar Kennedy A · 10 mutual friends
    தமிழ் மன்னர்கள் பெரும்பாலானோர் பார்ப்பனிய அடிவருடிகளே. . .
    2 February at 21:59 · Unlike · 5

    Venmani Mani உண்மை…சிந்திக்க வைக்கும் பதிவு…
    2 February at 22:03 · Unlike · 1

    Selvaraj Ksraj · Friends with Feroz Babu and 9 others
    தோல் ஏற்றுமதி பல்லாயிரம் கோடிகள்
    2 February at 22:41 · Unlike · 2

    Rose NeelaMealavalavan · 13 mutual friends
    Avan manuvai(manusrumathiyai) kondra sozhan, manu nithi sozhan Alla.
    2 February at 23:48 · Like

    திருச்சி பெரியார் திராவிடர் கழகம் 30.1.2015 வெள்ளி அன்று காந்தியை கொன்ற கோட்சே பட எரிப்பு போராட்ட அறிவிப்பு சுவரொட்டி ஒட்டியதற்காக என் மீது மத விரோதம் என்கின்ற மொன்னையான காரணத்தை கூறி பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. புகார் கொடுத்தது திருவரங்கம் பிராமிணர் சங்க…See More
    Yesterday at 00:39 · Unlike · 15

    Jaleel Aleem சகோ. நீங்க என்ன தமிழ்தேசியத்திற்கு எதிராக பரப்புரை செய்தாலும்.. இனி எம் மண்ணை ஆளப்போவது தமிழ்தேசியமே!! திருட்டு திராவிடம் ஒழிந்தது!!!
    Yesterday at 17:30 · Like · 1

    வே மதிமாறன் வாழ்த்துகள்.
    Yesterday at 18:12 · Like · 1

    Sakthivelu Govindaraj · 42 mutual friends
    பார்ப்பன குலத்தை மட்டுமே உயர்த்திப்பிடித்த அந்த குலத்திற்கு மட்டுமே தனி நீதி வகுத்து, ஏனைய பிறவற்றை பிறப்பால் சாதியின் அடிப்படையில் பிரித்து அவர்தம் உழைப்பை சுரண்டி பார்ப்பானை கொழுக்க வைக்க எழுதப்பட்டதே மனு(அ)தர்மம். அதை முறையாக பின்பற்றி பார்ப்பானையும் பசுக்களையும் காக்க ஆட்சி நடத்திய பார்ப்பன அடிமையே மனுநீதிச்சோழன்.
    Yesterday at 18:37 · Like · 1

    Kaja Sherif தமிழ்தேசியத்திற்கு எதிரா சொல்லலேயே உண்மைய தானே சொல்றாரு அதுக்கு ஆதரவா..
    Yesterday at 18:48 · Like · 2

    Jaleel Aleem // வே மதிமாறன் வாழ்த்துகள். // நன்றிசகோ.
    Yesterday at 18:56 · Like

    Kaja Sherif சோழனுக்கு எதுக்கு மனநீதின்னு பெயர் வந்துச்சு அதுவும் பெரியார் திராவிட வடுக சதின்னு கதையெழுதுங்க தமிழ் பூசாரி ..
    Yesterday at 19:16 · Like · 2

    கனகராசு தாமோதரன் · 8 mutual friends
    பெரும்பாலான தமிழ் மன்னர்கள் பார்ப்பன அடிமைகளே !
    Yesterday at 19:19 · Like · 2

  5. தினமும் உங்கள் பதிவு பார்த்துவிடுகிறேன். பொதுவாக எதிர்மறை அணுகுதல்; ஏதோ ஒரு திரைப்பாடலில் ஒரு வரி வசனம்; பழைய காவியங்களில் ஏதோ ஒரு fringe கருத்து; சில ஆயிரம் பல நூற்றாண்டு முந்தைய கதைகளில் ஒரு காட்சி, ஜெ கிருஷ்ணமூர்த்தி போன்றோர் பேச்சிலிருந்து ஒரு துகள் — இவற்றை எடுத்துக்கொண்டு பார்ப்பனீய எண்ணம், அணுகுமுறை, முதலியன என்று ஒரு பதிவு.

    உங்களுக்கு அலுக்கவில்லையா?

    உங்களிடம் வேண்டுவது ஒன்று: நேர்மறை விளைவுகள், நேர்மையைப் பாராட்டி, செயலில் சாதித்த ஒரு மனிதர் – தமிழர், திராவிடர், இந்தியர், வேறு நாட்டுக் குடிமகன், எவரேனும்; நல்ல கருத்து; நல்ல சேவை; உயர்ந்த விருது; விஞ்ஞானக் கண்டுபிடிப்பு; இல்லை கவிதை நயம், பொருட் செறிவு உள்ள ஒரு செய்யுள், இவை பற்றி எண்ண வேண்டும்; எண்ணத் தூண்டவேண்டும் பதிவுகள் வாரம் ஒன்றுக்கு ஒன்றாவது இட முயல்வோமா?

    Trust, wishing for positive approach and well-meaning posts is not condemned as Paarppaneeyam!

  6. உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் அருமையாக உள்ளது…பகிர்வுக்கு மிக்க நன்றி….

    மலர்

Leave a Reply

%d bloggers like this: