காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

valentiesdayகாதலர்களை அவமானப்படுத்தி தாக்குதல் நடத்தும் இந்துமதவெறி கும்பல்

போன ஆண்டு காதலர் தினத்தின் போது வெளியிட்டதை மீண்டும் வெளியிட்டிருக்கிறேன்

‘நமது கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல காதலர் தினம்’ என்று காதலர் தினத்தன்று காதலர்களிடம் மிக மோசமான முறையில், நடந்து கொண்டது, இந்து மதவெறி கும்பல். ‘காதலர் தினம் இந்து மதத்தின் புனிதத்திற்கு உகந்ததல்ல ‘என்று சொல்கிறது இந்த சமூக விரோத கும்பல்.

அப்படி என்ன இவர்களுடைய இந்து மத புனிதம்?

பத்துப் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்தவன், ஒழுக்கம் மனிதாபிமானம் பற்றி பேசுவதுபோல், ஒழுக்கம் குறித்து பேசுகிறது, குஜராத்தில் பல இஸ்லாமியப் பெண்களை பலாத்காரம் செய்த இந்தக் கொலைகார கும்பல்.

உண்மையில் இவர்களுடைய இந்து மத புனிதம், ஜெயேந்திரனின் கோவணத்தில் இருக்கிறது. ‘பிறர் மனைவிகளோடு கள்ளக் காதல், வரைமுறையற்ற பால் உறவு, என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்’ என்று எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திரன் மீது சரமாரியாக குற்றம் சுமத்தினார். அப்போது எங்கிருந்தது இந்தக் கலாச்சார காவல் கும்பல். காதலர் தினத்தன்று, இப்போது ஒரு அப்பாவி இளைஞனின் மயிரை புடுங்கிய இந்தக் கும்பல், அப்போது போய் ஜெயேந்திரன் மயிரை புடுங்கி இருக்க வேண்டியதுதானே?

பிரேமானந்தா என்கிற இன்னொரு இந்துமத துறவி, பல பெண்களிடம் பாலியல் வல்லுறுவு, கொலை, கொள்ளை என்று இருந்தான். இப்போது ஆயுள் கைதியாக சிறையில் இருக்கிறான். இவர்களுடைய இந்து மத பண்பாடு சிறையில் ஆயுள் கைதியாய் இருக்கிறது.

இந்து மத்தின் கோயில்களில் உள்ள சிற்பங்கள் பூராவும், அந்தக் காலத்து நீலப்படங்களாக இருக்கிறது. பலனா லாட்ஜிகளில் கூட அந்த மாதிரி படங்கள் இருக்க வாய்ப்பில்லை. கோயில்கள் முழுவதும் அந்தக் காலத்து பலான லாட்ஜ் மாதிரிதான் இருந்திருக்கு. இவனுங்க, உண்மையிலேயே யோக்கியனா இருந்தா, கோயிலில் இருக்கிற ஆபாச சிற்பங்களை இடிக்கட்டும்.

வர்த்தகம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, பல பன்னாட்டுக் கம்பெனிகள், தங்கள் பொருட்களை விற்பதற்கு, வருடத்தில் பலநாட்களுக்கு, ‘அம்மா தினம், அப்பா தினம், நண்பர்கள் தினம்’ என்று பெயர் வைத்து, அந்த நாட்களில் பரிசுகள் வாங்கித் தருகிற பழக்கங்களை ஏற்படுத்தி, அமோகமாக வியாபாரம் செய்கிறர்கள். இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு மட்டும் 1.47 பில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய 8 ஆயிரம் கோடி) வர்த்தகமாகியிருக்கிறது என்கிறது NRF Report. அந்த முதலாளிகளை எதிர்ப்பதற்கு வக்கற்ற, இந்தக் கூலிபடைகும்பல் அப்பாவிகளிடம் போய் ரவுடித்தனம் செய்கிறது.

இந்த இந்துமத்தின் கடவுள்களே ஒழுக்கக் கேடர்களாகவும், ஊதாரிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் ஒழுக்கம் குறித்து, பேசுவதற்கு எந்த யோக்கியதையும் ‘இந்து’ என்று சொல்லிக் கொள்கிறவனுக்குக் கிடையாது.

இந்து மதத்தின், கடவுள்களின், வேதத்தின் ஒழுக்கக் கேடுகளையும் ஊதாரித்தனத்தையும் டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இன்றைய சூழல் கருதி, எனது ‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ என்ற புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை எடுத்து பிரசுரித்திருக்கிறேன்.

***

ளவாணித்தனம் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாலும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’ என்று கடவுள் கண்ணனின் பொறுக்கித் தனத்தை பாடல் எழுதி பெருமைப்பட்டுக் கொண்ட பாரதி போன்ற பக்தர்களுக்கு பச்சைக் குழந்தையாகவே காட்சியளிக்கிற,  பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர்களின் கவர்ச்சிகக் கடவுளான கிருஷ்ணனை பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்:

“கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.”

“இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு  வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.”

………………………………………..

பிறகு கம்சனுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசும் குப்ஜா என்ற பெண்ணைச் சந்திக்கின்றனர். குப்ஜா ஒரு கூனி. அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவள் மணங்கமழும் சந்தனக் குழம்பைப் பூசி விட்டாள். பதிலுக்கு கிருஷ்ணன் கூன் விழுந்த குப்ஜாவின் முதுகை குணப்படுத்தினானாம்.

வேறோர் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் குப்ஜாவைச் சந்திக்க நேர்ந்தபோது வழக்கம் போல தகாத முறையில் குப்ஜாவுடன் உடலுறவு கொண்டதாகப் பாகவதம் சொல்கிறது. (பன்னிரெண்டு வயசு பையன் பண்ணற வேலையப் பாத்திங்களா?- மதிமாறன்) இருப்பினும் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் குப்ஜா வாசனைத் திரவியங்களைப் பூசினாள்.”

“ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நூற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர்கள்.”

நிர்வாணமாக்கி ஊர்ப் பெண்கள் மானத்தை எல்லாம் வாங்கிய கிருஷ்ணன், மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மானம் காக்க உடைகொடுத்ததானம்! பாஞ்சாலியின் மானம் காத்தது இருக்கட்டும், இங்கே டாக்டர் அம்பேத்கரின்  வாதத்திறமையின் முன்னால் அவன் மானம் போகிறேதே,  என்ன அவதாரம் எடுத்து ‘தன்மானத்தை’ காப்பாற்ற முயற்சிப்பான், கிருஷ்ணன். என்ன பதில் சொல்லி கிருஷ்ணனின் ‘மானம்’ காப்பார்கள் பக்தர்கள்.

விசித்திரமானது இந்து மதம். வேடிக்கையாக இருக்கிறது இந்துக்களின் இறை நம்பிக்கை. ‘ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக வாழ்ந்தான் ராமன். அதற்காகத்தான் அவனை வணங்குகிறோம்’ என்கிறார்கள் இந்துக்கள். அவர்களேதான்,  பாலியல் நோய் வந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு சகமேட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலைபோன்ற கிரிமினல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ந்து படித்திருக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாகத் தொழுகிறார்கள்.

ஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள். இந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாடை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் புரியவைத்தால் அதை புரிந்து கொண்ட பின் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதம் இந்துக்களை சுயமரியாதையும், சுயஅறிவற்றவர்களாகவே உருவாக்கிற வைத்திருக்கிறது.

***

ராவணன் பெண் பித்தன், ராமன்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று உயிராக வாழ்ந்தவன்’ என்று மூணு பொண்டாட்டிக்காரன் கதாகாலட்சேபம் செய்வதுபோல், பல பெண்பித்தர்களும், பக்தர்களும் ராமனுடைய சிறப்பு ‘ஏக பத்தினி விரதன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் டாக்டர் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளோடு, ‘ராமன் ஒரு ஸ்திரீலோலன்’ என்று நிரூபித்திருக்கிறார்:

“ராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாகக் கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது. வால்மீகியே கூட தன் ராமாயணத்தில் ராமன் அனேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் ராமன் வைத்திருந்தான்.”

“ராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. …………………….

காலை முதல் நண்பகல் வரை ராமன் மத ஆசாரங்கள் மற்றும் சடங்குகளை நிறை வேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தை கழித்தான்.

அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் களிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான். ராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். ………………………………

ராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாடடத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான், என வால்மீகி குறிப்பிடுகிறார். ………………………..

அழகிகளின் மத்தியில் ராமன் குடித்துக் கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் ராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர்.”

‘ராமன் ஏக பத்தினி விரதன் அல்ல, ஏகப்பட்ட பத்தினிகள் விரகன்’ என்று அம்பலப்படுத்துகிறார் டாக்டர் அம்பேத்கர். இந்த ராமனின் ராஜ்ஜியம் வரவேண்டும் என்பதுதான் காந்தியின் கனவாக இருந்தது. காந்தியின் கனவு நினைவாகி இருந்தால்.. நினைக்கவே கூசுகிறது. உண்மையில் ராம ராஜ்ஜியம் என்பது, காம ராஜ்ஜியம்தான்.

***

வேத காலத்தில் ஆரியர்களிடம் அல்லது இந்து சமூகத்திடம் குடி, சூது, வரைமுறையற்ற பால் உறவு, விபச்சாரம், விவசாய வேலைகளுக்குக்கூட மிச்சம் வைக்காமல் மாமிசத்திற்காக விலங்குகளை யாகத்தில் பலியிட்டு தின்பது என்கிற பழக்கங்கள் ஓங்கி இருந்தது. அதை எதிர்த்துதான் புத்தர் – மது குடிப்பது, விபச்சாரம் செய்வது, பிறன்மனை நோக்குவது, விலங்குகளை பலியிடுவது போன்றவற்றை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரம் இந்தியா முழுக்க அலையாக அடித்தது. அதன் தாக்கத்தில்தான் தமிழகத்து திருவள்ளுவரும், பிறன்மனை நோக்காமை, கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை போன்றவற்றை எழுதினார். புத்தரின் தாக்கத்தினால்தான், வேதக் கடவுள்களான தேவர்களை திருடர்களோடு ஒப்பிட்டும் எழுதினர் வள்ளுவர்.

“தேவர் அணையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.”

‘கயவரும் தேவரைப்போல் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம்போன போக்கில் நடந்தலால், கயவர் தேவரைப் போன்றவர்‘ என்று எழுதினார்.

டாக்டர் அம்பேத்கர் இதை தன் ஆய்வின் மூலமாக நிரூபிக்கிறார்;

“ஆரியர்கள் சூதாடும் இனத்தினர். ஆரிய நாகரிகத்தின் மிக ஆரம்ப காலத்திலேயே சூதாட்டம் ஒரு விஞ்ஞானமாகவே வளர்க்கப்பட்டு, அதற்கெனத் தனியாகத் தொழில்நுட்பச் சொற்கள் கூட உருவாக்கபட்டிருந்தன. இந்துக்களின் வரலாற்றுக் காலத்தை நான்கு யுகங்களாகப் பிரித்து அவற்றுக்குக் கிரேதா, திரேத, துவாபர, கலி என்று பெயர் வைத்திருந்தார்கள். உண்மையில் இந்தப் பெயர்கள் ஆரியர்கள் சூதாட்டத்தில் பயன்படுத்திய பகடைகளின் பெயர்களாகும். மிக அதிர்ஷ்டமான பகடை கிரேதா என்றும் மிகவும் துரதிர்ஷ்டமான பகடை கலி என்றும் குறிப்பிடப்பட்டது. திரேதா, துவாபர என்பவை இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவையாகும்.”

ராஜ்யங்களும், மனைவியரும் கூடச் சூதாட்டங்களில் பந்தயமாக வைக்கப்பட்டனர். ………………………………..

ஆரியர்களிடம் சூதாட்டம் பணக்காரர்களின் விளையாட்டாக இருக்கவில்லை. அது பலரிடமும் உள்ள கெட்ட பழக்கமாகவே இருந்தது. ஆரியர்களிடம் ஆண்-,பெண் உறவுகள் தளர்த்தியான முறையில் இருந்தன. ……………………………………………..

விபச்சாரம் தாராளமாகவும் மிக மோசமான முறையிலும் நடைபெற்று வந்தது. விலங்குகளிடம் உறவு கொள்ளும் வழக்கமும் அவர்களிடம் காணப்பட்டது. இதைச் செய்தவர்களில் மிகவும் மரியாதைக்குரிய ரிஷிகளும் இருந்தார்கள்.

புராதான ஆரியர்கள் குடிகார இனமாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மதத்தில் மது ஒரு இன்றியமையாத பகுதியாக இருந்தது.”

ஊதாரித்தனமும் ஒழுக்கக் கேடுமே புராதன இந்துக்களின் முறையாக இருந்திருக்கிறது. இது இப்போது இருப்பது போல் தனிநபரின் பழக்கமாக இல்லாமல், மதத்தின் பேரில் ஒட்டுமொத்த சமூகத்தின் பழக்கமாகவே இருந்திருக்கிறது, என்பது வெட்கக் கேடானது. இப்படி பின்நவீனத்துவ தத்துவவாதிகளைப்போல் வாழ்ந்திருக்கிறார்கள் வேதகாலத்து இந்துக்கள்.

ஆனால் இன்று “குடிப்பதும், கூத்தடிப்பதும் ஒருவர் பலரோடு உறவு வைத்துக் கொள்வதும் நமது பாரம்பரிய இந்துப் பண்பாட்டுக்கு உகந்ததல்ல.” என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், பொய் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துமதவெறி அமைப்புகள். காதலர் தினம் போன்ற வர்த்தக நோக்கம் கொண்ட சாதாரண மேற்கத்திய கலாச்சாரத்தைக்கூட இந்து மதத்தின் பேரால் எதிர்ப்பது எவ்வளவு கேலிக்குரியது.

நூல் வௌயீடு: அங்குசம்

தொடர்புக்கு:

ஞா. டார்வின் தாசன்

எண் 15, எழுத்துக்காரன் தெரு,

திருவெற்றியூர், சென்னை – 600 0 19

பேசி : 94443 37384

விலை: 60

79 thoughts on “காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

  1. தெனெய்க்கும் எவனயாச்சும் திட்டனும். இல்லடி ஒனக்கு தூக்கம் வராது, சோறு எறங்காது. ஒலகத்துல நல்ல விஷயம் எதுவும் ஒங் கண்ணுக்கு தெரியாதா? அந்தளவுக்கு குருட்டு பயலா நீ … ?

    பார்ப்பனன் – ஒழிக, ஹிந்துத்துவம் – நாசமாய் போக, கடவுள் – காட்டுமிராண்டித்தனம் … மேலும் பல… இத எல்லாம் சொன்ன பகுத்தறிவுன்னு ஒனக்கு சொன்னது யாரு? பெரியார் கூட அப்பிடி சொல்லலியே … அவர் எல்லருக்கும் மரியாத குடுத்தாறே.

    ஆமா … ஹிந்து மதம் தவிர வேற எந்த மதமும் தப்பு பண்ணலியா? இல்ல மத்தவங்க எல்லாரும் நல்லவங்களா?

    ஏன்னா ஹிந்து ஒரு ஈனா…வானா… மத்தவன் ஒன்னு பணத்த வச்சு அடப்பான் இல்ல அடியில அறுத்துருவான்.

    நீ இத்தன எழுதி எதாவது மாறியிருக்கா? சிம்பிளா சொன்ன ஒனக்கு வேற வேல வெட்டி இல்ல. இன்டர்நெட் ஒன்னைய மாதிரி ஆளுங்களாலத் தான் பாவநெட் ஆகுது. ஊருல தண்ணிப்பஞ்சம் வருது ஆனா ஒங் வீட்ல … நெட்டு பஞ்சம் வரமாட்டேங்கிதே…

    மூட பழக்க வழக்கங்கழுக்கும் கடவுள் / மதங்களூக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

    ஆனால் அதை கற்பித்தவன், அறிவாளி – வியாபாரி – அரசியல்வாதி – மொத்தத்தில் அவன் தான் திருடன். உலகை மாற்றூம் திறமை அவர்களிடம் உண்டு மாற்றூகிறார்கள், ஆனால் 90% பேருக்கு ஆது இல்லை. அதனால் தினமும் திட்டித் திட்டி இடுகை இடுவதால் பலன் இல்லை.

    பரிதாபப்படுவதை விட உதவி செய்யலாம், திட்டுவதை விட இறங்கி வேலை செய்யலாம்.

    புத்தர் வெறும் மரத்தடியில் அமர்ந்து போதிக்கவில்லை, தெருத் தெருவாய் அலைந்துள்ளார், ஞாபகம் இருக்கடும்.

    முன்நாளில் நடந்திருக்கலாம் ஆனால் இப்பொழுது வெறும் எழுத்துகளை வைத்து ஒரு மயி… புடுங்க முடியாது.

    இற்ங்கி வேலை செய், சும்மா சும்மா எழுதாதே.

    முக்கியமான விஷயம் … நான் தமிழ்ன் அல்ல, பிரமாணன் அல்ல.

    இது உனக்கு…

    சிலைகளில் அழகை காண்
    கோவிலில் கலையை காண்
    அன்பில் உண்மையை காண்
    உலக நடப்பில் அறிவை காண்
    கதைகளில் கருத்தை காண்
    உள்ளத்தில் இறைவனை காண்

    ராம்.

  2. இராமன் வாழ்க்கையை ஜாலியாக, பல பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்தவனாக இருந்திருந்தால், அவன் எதற்கு இராச்சியத்தை விட்டு காட்டுக்கு செல்ல சம்மதிக்க வேண்டும்.

    ஒருவ‌ன் வாழ‌க்கையில் கும்மாள‌ம், குடி, கூத்து, என‌ உல்லாச‌த்தில் திளைத்து இருந்திருந்தால், அப்ப‌டிப்பட்ட‌ உல்லாச‌ங்க‌ளை உதறித் த‌ள்ளி காட்டிலே க‌டின‌ வாழ‌க்கை வாழ‌ அவ‌ன் ம‌ன‌ம் ஒப்புமா?

    இராமன் மக்களின் மனம் விரும்பும், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவனாக இருந்திருக்கிறான்.

    தசரதனே , இராமனை ஆட்சியைக் கைப்பற்றி ஆளுமாறு தூண்டியிருக்கிறான்.

    அரசாங்க இயந்திரத்தை இயக்குபவர்களோ, இராமனின் மேல் அபிமானம் உடையவர்களாக இருந்திருக்கின்றனர்.

    பரதனோ அந்த நேரம் நாட்டில் இல்லை.

    இலக்குவனோ, தானே முன் நின்று போர் செய்து இராமனை அரசன் ஆக்குவதாக சூளுரைக்கிறான்.

    இப்படியான சூழ்நிலையில் இராமன் தசரதனையும், கைகேயியையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு அரசனாகி இருக்க வேண்டுமே – ஆட்சியை கையில் வைத்து இருந்தால் தானே, அதிகாரம், அரண்மனை, பணியாட்கள், அந்தப்புரம், அழகிகள் ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம் என்று இருந்திருக்க முடியும்?

    ஆனால் இராமனோ காட்டின் கடின வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதாக கூறி விட்டானே? உல்லாச வாழ்க்கையை வாழ்ந்திருந்தால், அந்த வாழ்க்கையை உதறி விட்டு காட்டு வாழ்க்கைக்கு யாரவது ஒத்துக் கொள்வார்களா?

    ம‌திமாற‌ன் ம‌ன‌ம் போன‌ போக்கிலே காழ்ப்புண‌ர்ச்சி பிர‌ச்சார‌த்தை அவிழ்த்து விட்டாலும், ம‌க்க‌ள் சிந்திப்பார்க‌ளே!

  3. ///ராம்///

    இந்துத்துவா சக்திகள் காதலர் தினத்தை எதிர்ப்பதிற்கு யோக்கியதை இல்லை என்று அம்பேத்கர் கட்டுரைகளில் இருந்து உதாரணம் காட்டி எழுதியிருக்கிறார். அதுகுறித்து பதில் சொல்லாமல் நீங்கள் இப்படி தரக்குறைவாக திட்டி எழுதுவது முறையா?
    பொறுமையாக யோசியுங்கள்.

  4. ///ம‌திமாற‌ன் ம‌ன‌ம் போன‌ போக்கிலே காழ்ப்புண‌ர்ச்சி பிர‌ச்சார‌த்தை அவிழ்த்து விட்டாலும், ம‌க்க‌ள் சிந்திப்பார்க‌ளே!///

    திருச்சிக்காரன் உங்களிடம் துளிகூட நேர்மையே இல்லையா? கட்டுரை எழுப்பியிருக்கிற பிரச்சினைக்குள் எப்போழுதுமே வரமாட்டிர்களா? இந்துமதத்தை பார்ப்பனர்களை திட்டுவது மட்டும்தான் உங்கள் கண்களுக்கு தெரியுமா?

    ஏன் இப்படி ஒரு பச்சை பொய்யை எழுதுகிறீர்கள்? மதிமாறன் ராமனை பற்றி அம்பேத்கர் சொன்னதைதான்தான் எடுத்துக் காட்டியிருக்கிறார். அம்பேத்கர் சும்மா சொல்லவில்லை. அவர் குறிப்பிடுகிற அனைத்தும் வால்மீகி ராமயணத்தில் இருக்கிறது. அதை குறிப்பிட்டுதான் அம்பேத்கர் எழுதியிருக்கிறார்.
    ஏன் நீங்கள் உண்மையின் பக்கம் வர மறுக்கிறீர்கள்? ஒரு சார்ப்பாக விவாதிக்காதீர்கள். அப்படி விவாதிப்பாக இருந்தால் அம்பேத்கர் எழுப்பியிருக்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு விவாதியுங்கள்.

  5. மகேஷ்,

    உங்களிடம் துளிகூட நேர்மையே இல்லையா?

    நான் எழுதிய‌தை ப‌டித்தீர்க‌ளா? நான் கூறிய‌ க‌ருத்துக்க‌ளை சிந்த‌னை செய்தீர்க‌ளா?

    ப‌ல‌ பெண்க‌ளுட‌ன் உல்லாச‌மாக‌ இருந்த‌வ‌னானால் காட்டுக்கு போன‌து ஏன்? சூர்ப்ப‌ன‌கையின் காத‌லை நிராக‌ரித்த‌து ஏன்?

    ம‌கெஷ், நீங்க‌ள் பச்சை பொய்க்கு ப‌ல்ல‌க்கு தூக்குவ‌து ஏன்?

    த‌ய‌வு செய்து ப‌குத்தறிவை உப‌யொகித்து நேர்மையுட‌ன் சிந்தியுங்க‌ள்!

  6. really getting sick of these half-baked postings. With loads of asymmetric information, people start to write anything…

    I am not a supporter of any specific religion. but, would kindly request people to know more on the subject before spitting on any specific group.

  7. Administartor, please do not allow this kind of postings. The author is out of his senses. He is setting a bad example – Can anyone post any junk thing out of his corrupted mind ?

  8. What is written is true or not, I am curios and doubt ……….and want to know from Mr. Thiruchikaran as he kept silence ….on this issue.

    Ist Hinduism having such gods………..its really shame. Can anyone give me the rout to go through all this stuff..About ram and kannan lelai…..

  9. //காதலர் தினத்தன்று, இப்போது ஒரு அப்பாவி இளைஞனின் மயிரை புடுங்கிய இந்தக் கும்பல், அப்போது போய் ஜெயேந்திரன் மயிரை புடுங்கி இருக்க வேண்டியதுதானே?//

    ஆஹா, இந்த வாக்கியத்தில் இருக்கும் பண்பும், நாகரிகமும் மெய் சிலிர்க்க வைக்கின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன.

    http://kgjawarlal.wordpress.com

  10. .திரு மகேஷ் அவர்களே,
    ///ஏன் நீங்கள் உண்மையின் பக்கம் வர மறுக்கிறீர்கள்? ஒரு சார்ப்பாக விவாதிக்காதீர்கள். அப்படி விவாதிப்பாக இருந்தால் அம்பேத்கர் எழுப்பியிருக்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு விவாதியுங்கள்.///
    “ரிக் வேதத்தைப் பொறுத்த வரையில்,ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து ,இந்தியா மீது படையெடுத்தார்கள் என்ற கருத்துக்குச் சிறிதளவு கூட ஆதாரம் இல்லை…வேத இலக்கியங்களின் சான்றைப் பொறுத்த வரையில்,ஆரியர்களின் தாயகம் இந்தியாவுக்கு வெளியே இருந்தது என்ற கோட்பாட்டுக்கு அவை (வேத இலக்கியங்கள்) எதிராக உள்ளன” -டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.

    அம்பேத்கரின் இந்த கருத்தை ஏற்கிறீர்களா? நீங்கள் உண்மையின் பக்கம் வரலாமே மகேஷ்.

  11. ////திருச்சிக் காரன் (17:30:44) :

    மகேஷ்,

    வால்மீகி இராம‌ய‌ண‌த்திலே இருந்து மேற்கோள் காட்டுங்க‌ள்.////

    அம்பேத்கர்தான் வால்மீகி ராமயணத்தில் இருந்து மேற்கோள் காட்டியிருக்கிறாரே… உங்க்ளுக்கு ராமாயணமும் தெரியவில்லை. அம்பேத்கரையும் தெரியவில்லை… பார்ப்பர்களை, இந்துமதத்தை திட்டுனா ஒடனே எதயாவது வந்து எழுதிடுறது….

  12. மகேஷ்,

    என‌க்கு எதுவும் தெரிய‌வில்லை என்கிறீர்க‌ள்.

    தெரிந்த‌வ‌ர்க‌ள் நீங்க‌ள் ஆதார‌ம் கொடுக்க‌லாமே.

    குற‌ள் இப்ப‌டி சொல்கிற‌து என்று சொன்னால் , அந்த‌க் குற‌ளையும் எழுதி ஆதார‌ம் கொடுப்பார்க‌ள்.

    இராம‌ன் ப‌ல பெண்க‌ளுட‌ன் உற‌வு வைத்த‌வ‌னாக‌வோ, குடி கார‌னாக‌வோ இருந்த‌தாக‌ த‌க‌வ‌லும் இல்லை.

    அப்ப‌டி வாழ்ந்திருப்ப‌த‌ற்கான‌ வாய்ப்பும் இல்லை!

  13. ////ram, திருச்சிக்காரன், தனபால், Karthik, Jawahar, Raj////

    இந்தக் கட்டுரையில் பிரேமானந்தாவைப்பற்றிகூட கடுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. அனால் யாரும் அதைபற்றி பேசமால், பார்ப்பனர்கள், ஜெயேந்திரர் பற்றியே பேசுகிறீர்களே, ஏன்?

  14. ////தனபால்
    அம்பேத்கரின் இந்த கருத்தை ஏற்கிறீர்களா? நீங்கள் உண்மையின் பக்கம் வரலாமே மகேஷ்.///

    ஆம் ஏற்றுக்கொள்கிறேன்.

    ///“ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான்.”

    அவர் முஸ்லீம் உடை அணிந்து, தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்.”///

    அம்பேத்கரின் இந்தக் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

  15. /// திருச்சிக் காரன்////

    வால்மீகி ராமயணத்தில் இருந்து பாடல் எண்ணிக்கையோடு எடுத்துக்காட்டிவிட்டால்…. ஒத்துக்கொண்டு ராமனை நீங்கள் கேவலமானவன் எனறு திட்டுவீர்களா?

    அப்படி நிருபித்தால்… என்ன செய்வீர்கள் சொல்லுங்கள்?

  16. ஈழப்படுகொலைகளின் படங்களுக்கு பிறகு என்னை அதிகம் பாதித்தது அந்த இரண்டாவது படம். ஏன் இப்படி?

    காதலர் தினம் வியாபார நோக்கத்துடன் விளம்பரப்படுத்தப்படுகிறது என்று ஓர் தளத்தில் கருத்து பதிந்தேன். அதற்கு எனக்கு கிடைத்த பதில், இப்போதெல்லாம் எதில் தான் வணிகமயம் இல்லை என்பதுதான். //காதலர் தினத்திற்கு மட்டும் 1.47 பில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய 8 ஆயிரம் கோடி) வர்த்தகமாகியிருக்கிறது என்கிறதுNRF Report.// என் கருத்து உண்மை என்று உங்கள் கட்டுரையும் இந்த புள்ளிவிவரமும் நிரூபிக்கிறது. நன்றி.

  17. ////ram, திருச்சிக்காரன், தனபால், Karthik, Jawahar, Raj////

    இந்தக் கட்டுரையில் பிரேமானந்தாவைப்பற்றிகூட கடுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. அனால் யாரும் அதைபற்றி பேசமால், பார்ப்பனர்கள், ஜெயேந்திரர் பற்றியே பேசுகிறீர்களே, ஏன்?

    பிரேமானந்தா பற்றி எழுதுகிற போது பண்பும் நாகரிகமும் நிறைந்த சொற்களை பயன்படுத்தி இருந்தால் அதையும் பாராட்டி இருப்பேன்.

    http://kgjawarlal.wordpress.com

  18. மகேஷ்,

    /// திருச்சிக் காரன்////

    வால்மீகி ராமயணத்தில் இருந்து பாடல் எண்ணிக்கையோடு எடுத்துக்காட்டிவிட்டால்…. ஒத்துக்கொண்டு ராமனை நீங்கள் கேவலமானவன் எனறு திட்டுவீர்களா?

    அப்படி நிருபித்தால்… என்ன செய்வீர்கள் சொல்லுங்கள்?///

    இராமனாக இருந்தாலும் , இராவணனாக இருந்தாலும் அவர்களுடைய கொள்கை, செயல் பாடு ஆகியவற்றின் அடிப்படையிலே தான் ஒருவருக்கு பாராட்டோ அல்லது கண்டனமோ தெரிவிக்கப் படுகிறது.

    இராமனின் கொள்கையானது,

    மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பத்தை அனுபவிக்க தயாராக இருப்பது,

    எவ்வளவு துன்பம் வரும் சூழ்நிலையிலும் தான் பொறுமையைக் கைவிடாமல் கொள்கையில் உறுதியாக நின்று நன்மைப் பாதையில் செல்லல், …

    இப்படியான கொள்கைகளோடு, தன் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணுடனும் அந்தரங்க உறவு வைப்பதில்லை என்ற கொள்கையையும் முக்கியக் கொள்கையாக வைத்தவனாக இருந்திருக்கிறான்.

    எனவே இராமன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்ணோடு உறவு வைத்துக் கொண்டதாக இருந்தால் இராமனின் சிறப்பு குறைகிறது. எப்படி இருந்தாலும் உண்மையை ஒத்துக் கொள்வதில் நமக்கு தயக்கம் இல்லை.

    இராமனை நாம் ஆதரிப்பது கொள்கை, செயல் பாட்டின் அடிப்படையில் தான். எனவே நீங்கள் தாராளமாக மேற்கோள் காட்டுங்கள். தெரிந்து கொள்கிறோம். ஆராய்வோம்.

    இராமனை தாங்கிப் படிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை.

    இராமனின் கொள்கைகள் மக்களுக்கு, சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் என்பதாலேயே , அவனுடைய நல்ல கொள்கைகள் மக்களுக்கு போய் சேராமல் இருந்து விடாக் கூடாதே என்பதாலேயே, காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் இராமன் பழிக்கப் பபட்டால் நாம் இராமனுக்கு அதரவு தெரிவிக்கிறோம் .

    மற்ற படி இதில் செண்டிமெண்ட் எதுவும் இல்லை. எனவே நீங்கள் மட்டும் அல்லாமல் வேறு யாரிடமும் இது பற்றிய விவரங்கள் இருந்தால் அதை இங்கே பதிவிடலாம்

  19. SSK,

    ////ram, திருச்சிக்காரன், தனபால், Karthik, Jawahar, Raj////

    இந்தக் கட்டுரையில் பிரேமானந்தாவைப்பற்றிகூட கடுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. அனால் யாரும் அதைபற்றி பேசமால், பார்ப்பனர்கள், ஜெயேந்திரர் பற்றியே பேசுகிறீர்களே, ஏன்?

    சாதி பட்டங்களை சூட்டுவதையும், சாதிக் காழ்ப்புணர்ச்சி செய்வதையும் விடுங்கள்.

    எனக்கு சாதி வேண்டாம் என்று சொன்னால் கூட , நீ சாதியை வைத்துக் கொள் ஐயா, சாதிகள் இல்லாவிட்டால் நாங்கள் பேசவும், எழுதவும் ,திட்டவும் என்ன செய்வது , நீ சாதியை வைத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் செயல் பட வேண்டாம்.

    இரண்டாவது ஜெயேந்திரரை நான் ஆதரிக்கவில்லை. அவருடைய் கடுமையாக விமரிசித்து பல தளங்களிலும் எழுதியதுடன், இதே தளத்திலும் அவற்றை பதிவு செய்து இருக்கிறேன்.

  20. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன் சில மரங்களை நடுங்கள்,
    ஒரே மனைவி, பிறன் மனை நோக்காமை, போதை பொருட்கள் தவிர்ப்பு, குட்டி பிறந்த பிறகு சுரக்கும் பாலை அருந்துவது (பாலை கறக்கா விடில் மாட்டிற்கு மடி கட்டி விடும்). இப்படி ஏனைய விஷயங்கள் ஹிந்து மதம் கூறியுள்ளது அதை விடுத்து தனி மனித தவறுகளுக்கு ஒரு மதத்தை/கடவுளை குற்றம் கூறுவது சரியல்ல.

    யார் வேண்டுமானாலும் காவி கட்டிக் கொண்டு தவறு செய்யலாம். புற்களுக்கு நடுவே களை இருப்பது தங்களுக்கு தெரியாதோ? நாட்டில் புல்லுருவிகளே இல்லையா?

    ஆயிரம் போலிச் சாமியார்கள் வந்துபோயும் இன்னும் திருந்தாத மக்களின் முட்டாள்தனத்தை ஒரு பொழுதும் மாற்ற முடியது.

    மற்றபடி இத்துப் போன கட்சிகள், இழிந்த போன அரசியல் நாய்கள் இவைகள் சுய லாபத்துக்காக ஏதாவது செய்யும். இவைகளை கண்டிப்பது சேற்றில் கல்லெறிவது போல் தான். நம் மீது தான் தெறிக்கும்.

    ஒரு வேண்டுகோள் ராமன், கிருஷ்ணன் இவர்களை யாரும் பார்த்ததில்லை, அம்பேத்கார் பெரியார் உட்பட, எனவே தெரியாததை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்காதீர்.

    மீண்டும் வலியுறுத்துகிறேன் தனி மனித/அரசியல்வாதிகளின்/கட்சிகளின் தவறுகளுக்கு ஒரு மதத்தை/கடவுளை குற்றம் சொல்லாதீர்.

  21. இவர்கள் இவ்வளவு ஆத்திரப்படுவதன் காரணம், நீதியை விட்டு இவர்கள் வெகு தொலைவில் இருப்பதால் தானே தவிர, தோழர் மதிமாறன் மேலுள்ள தனிப்பட்ட வெறுப்பினாலல்ல, நண்பர் மதிமாறன் அவர்கள், தன்னலம் பாராத இந்த அரிய பணியை எம் மக்களுக்கு தொடர்ந்து செய்வார், என்ற நம்பிக்கையில்…., எம் மக்கள் மூடத்தனத்திலிருந்து விடுபட எண்ணுபவர்கள் இந்தத் தோழர் போல ஒருசிலரே உளர். இவர்களும் ஒதுங்கிக் கொண்டால் எம் மக்களின் விடிவு கேள்விக்குறிதான். எம் மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைகளான பார்ப்பனர்களின் தாகம் இன்னும் அடங்கவில்லை என்பதையே, இவர்கள் பாய்ந்து குதறி, வசைபாடுவது உணர்த்துகிறது.

    பச்சைப் பொய்க்கு பல்லக்கு தூக்குவது யார்? வால்மீகி இராமாயணம் பொய் என்கிறாரா? கம்ப இராமாயணத்தின் மூலமாச்சே வால்மீகி இராமாயணம் ? அப்படின்னா.. கம்ப இராமாயணம் பொய்தானே ? அந்த பொய்க் கதையின் நாயகன் இராமனும் பொய்தானே? அண்ணல் அம்பேத்கர்
    விரிவாக, வால்மீகி இராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டி எழுதிய பிறகும் ÔÔமேற்கோள் காட்டுங்கள்ÕÕ என்றால் இது ஒரு திசை திருப்பும் முயற்சியல்லவா ?
    மேலும், தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணனின் இலீலைகளைப் பற்றி எழுதியதைக் குறித்து சத்தமே இல்லை ? காஞ்சி சங்கரன், பூசாரி தேவநாதக் குருக்கள் போன்றோர் கண்ணனிடம் படித்த பாடத்தைத் தான் இப்போது செய்து பார்த்தார்களா ?
    தமிழர்களை இந்து மதம்தான் மடையர்களாக்கியது, பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் அறிவுக் குருடர்களாக திரிந்து உணர்வின்றி ஏமாறக் காரணமே இந்து மதம்தான். கடவுளை மட்டும் மாற்றிக் கொண்டு அடுத்த வீட்டுக்குக் தாவினாலும்கூட இந்து மதத்தின் மூடத்தனம் அவர்களை விடாமல், பன்றியோடு சேர்ந்த மாடும் பீ தின்ன கதையாக இசுலாமியனும், கிறித்தவனும் பாதி இந்துவாகத்தான் அங்கும் இருக்கிறான்.
    மூடப்பழக்க வழக்கங்களுக்கு அடிக்கல் நாட்டுவதே கடவுள் நம்ம்பிக்கைதான். அதனால்தான் தந்தை பெரியார் அவர்களின் கையினால் பிள்ளையாரும் இராமனும் செருப்படி வாங்கினார்கள்.
    கோவில் சிலைகளைப் பார்த்தால் அழகா தெரிகிறது ? எது அழகு ? ஆணும் பெண்ணும் அம்மணமாக உடல் உறவு கொள்வதா அழகு ?
    கோவிலில் எந்த கலையைக் காண ? பூசாரி தேவநாதக் குருக்கள் நடத்திய கலையா ?
    எந்த கதைகளில் எந்த கருத்தைக் காண ? தாருகாவனத்து இரிஷி பத்தினிகளிடம் முழுமுதற்கடவுளான பரம சிவன் காமக் க்ளியாட்டம் போட்டதனால், ஆண்குறி பிரிந்து விழட்டும் என்று சாபம் வாங்கி, அப்படி விழுந்த சிவனின் ஆண்குறியை தன் பெண்குறியான யோனியைக் காட்டி அதில் வாங்கிக் கொண்டாளாம் பார்வதி.. (இலிங்க புராணம்). இதில் எந்தக் கருத்தை எடுத்துக் கொள்வது ?
    அடுத்ததாக, பார்ப்பனர் என்றவுடன், சாதியைச் சொல்கிறான் என்று பெரிய மலையைப் பிடித்தது போல துள்ளுகிறார்களே பார்ப்பனர்கள்… பார்ப்பான் என்பது சாதிப் பெயரா ? எந்த புராணத்தில் பிடித்தார்கள் இந்த கருத்தை ? பார்ப்பான் னா ஆரிய இனத்தைக் குறிக்கும் பொதுவான ஒரு பெயர் அது. ஏன் சுப்ரமணிய பாரதி கூட இந்த பார்ப்பான் என்றசொல்லைப் பயன் படுத்தியிருக்கிறாரே..! அவர் சாதியைச் சொன்னாரா ? பதில் சொல்லுங்கள் ஆரியர்களே.. ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வகுடிகள் என்றுவெகு நாட்களுக்கு முன்பேயே புழுக ஆரம்பித்து விட்டார்கள், போகிற போக்கைப் பார்த்தால், அடுத்து இப்படிச் சொன்னாலும் ஆச்சரியப் படமுடியாது, ஆரியர்கள் என்ற இனமே கற்பனை, நாங்களூம் திராவிடர்கள்தான்,என்று !
    காசிமேடு மன்னாரு

  22. இந்தியர்க‌ள் இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ளா?

    இப்போது இந்தியாவில் வ‌சிக்கும் ம‌க்க‌ள் இந்தியாவின் பூர்வ‌ குடிக‌ள் அல்ல‌ என்றும், அவ‌ர்க‌ள் கைப‌ர் போல‌ன் க‌ன‌வாய் வ‌ழியாக‌ ம‌த்திய‌ ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள் என்றும் கூற‌ப் ப‌டுகிற‌து அல்ல‌வா?

    ஆரியர்கள் ருஷியாவிலே இருந்து வந்தார்கள், மத்திய ஆசியாவிலே இருந்து வந்தார்கள், சுவிட்சர்லாந்திலே இருந்து வந்தார்கள் என்கிறார்களே, நல்லா கவனிங்க,

    அலெக்சாந்தரைப் போல, பாபரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் மட்டும் வரவில்லை. முழு சமூகமாக குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிளாளிகள், மருத்துவர்கள், சமையல் காரர்கள், பாடகர்கள், புலவர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட மிகப் பெரிய சமூகம் இடம் பெயர்ந்து உள்ளது என்று கூறப் படுகிரதே,

    அப்படியானால் அந்த சமுதாயம் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமே, அப்படி அவர்கள் சமூகமாக உருவெடுத்த நிலப் பிரதெசம் எது? ருஷியாவா? மத்திய ஆசியாவா? ருஷியாவிலோ, மத்திய ஆசியாவிலோ ஆரியர்கள் பல்லாயிரம் வருட காலம் வாழ்ந்து ஒரு சமூகமாக உருவான வரலாறு, உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே!

    நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம், இதை எல்லாம் விட பழைமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றால், அவர்களை 5000 வருடங்களுக்கு முன்பு விரட்டி அடித்ததாகக் கூறப் படும் ஆரிய சமுதாயம், கைபர் போலன் கனவாய் வழியாக வருமுன் சுவிட்சர்லாந்திலே இருந்தார்கள் என்றால், கைபர் போலன் கனவாய் வழியே அந்த சமுதாயம் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலே, அந்த சமூகத்தின் சுவிட்சர்லாந்து வரலாறு அல்லது ருஷியா வரலாறு அல்லது மத்திய ஆசிய வரலாறு ( 5000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு), ஏன் பதிவு செய்யப் படவில்லை?

    ஆரியர்கள் சுவிட்சர்லாந்திலே அல்லது ருஷியாவிலே அல்லது மத்திய ஆசியாவிலே எப்படி வாழ்ந்தார்கள், ஒரு சமூகமாக உருவானார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே?

    நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம் போல, ரைன் நதி நாகரீகம் என்றோ, வோல்கா நதி நாகரீகம் என்றோ ஒரு சிறு குறிப்பு கூட இல்லையே?

    உலகின் மிகப் பழைமையான இலக்கியங்களில் பலவற்றை உள்ளடக்கிய மொழி அவர்களின் மொழி – அந்த இலக்கியங்களில் இந்தியாவைத் தவிர வேறு நாடுகள் பற்றிய குறிப்பு ஒன்று கூட இல்லையே?

    என‌வே ஆரியர்கள் இந்தியாவின் அச்சு அசலான, ஆதி குடிகள் என்பதை உறுதி செய்ய வேண்டிய அளவுக்கு சாத்தியங்கள் உள்ளன.

  23. பார்ப்பனர் என்பது சாதிப் பெயர் இல்லையாம். அது ஆரியர்களைக் குறிப்பதாம். எவ்வளவு அறிவு நேர்மை பாருங்கள். சாதிக் காழ்ப்புணர்ச்சி எல்லா மீறிப் போகும் பொது பலரையும் , சாதி பட்டம் அளித்து குறித்து விட்டு பிறகு அந்த பல்டி அடித்து வசவு மாறிப் பொழிவது வழக்காமாகி விட்டது.

  24. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக, சாதிப் பெயரிட்டு அழைத்து விட்டு நான் ஆரியரை சொன்னேன், அப்படி, இப்படி என்று சாதி காழ்ப்புணர்ச்சியை மறைக்க முயால்கிரார்கள்.

    சாதி காழ்ப்புணர்ச்சியை விட்டு விடுங்கள்.

    சாதிகளற்ற சமுதாயத்தி நோக்கித் தான் நம் சமூகம் செல்லுகிறது.

  25. சாதி வெறியைத் தூண்டி விட்டவன் பிரிட்டீஷ்காரன். அதற்கு முன் சாதி வெறி கிடையாது. அதை புரிந்து கொள்ளாமல் சண்டையிட்டு கொள்ள வேண்டாம். வளமான இந்தியாவை அமைக்க பாடுபடுவோம்.

    British policies of divide and rule as well as enumeration of the population into rigid categories during the 10 year census contributed towards the hardening of caste identities.

    During the period of British rule, India saw the rebellions of several lower castes, mainly tribals that revolted against British rule. These were:
    Halba rebellion (1774-79)
    Bhopalpatnam Struggle (1795)
    Bhil rebellion (1822–1857)[40]
    Paralkot rebellion (1825)
    Tarapur rebellion (1842-54)
    Maria rebellion (1842-63)
    First Freedom Struggle (1856-57)
    Bhil rebellion, begun by Tantya Tope in Banswara (1858)[41]
    Koi revolt (1859)
    Gond rebellion, begun by Ramji Gond in Adilabad (1860)[42]
    Muria rebellion (1876)
    Rani rebellion (1878-82)
    Bhumkal (1910)

  26. திரு மகேஷ் அவர்களே,
    ///“ரிக் வேதத்தைப் பொறுத்த வரையில்,ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து ,இந்தியா மீது படையெடுத்தார்கள் என்ற கருத்துக்குச் சிறிதளவு கூட ஆதாரம் இல்லை…வேத இலக்கியங்களின் சான்றைப் பொறுத்த வரையில்,ஆரியர்களின் தாயகம் இந்தியாவுக்கு வெளியே இருந்தது என்ற கோட்பாட்டுக்கு அவை (வேத இலக்கியங்கள்) எதிராக உள்ளன” -டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.

    அம்பேத்கரின் இந்த கருத்தை ஏற்கிறீர்களா? நீங்கள் உண்மையின் பக்கம் வரலாமே மகேஷ்///என்ற என் கேள்விக்கு

    நீங்கள் ///ஆம் ஏற்றுக்கொள்கிறேன்.///என்று பதில் கூறியிருக்குறீர்கள்.நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்.நீங்கள் ஒரு உண்மையான பகுத்தறிவுவாதி என்று நிருபித்துவிட்டீர்கள்.சபாஷ்.உங்களுக்கு நன்றி.உங்கள் பகுத்தறிவுக்கு நன்றி.

    ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்ற பொய்யை தன் ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலம் தகர்த்த அம்பேத்கரின் வார்த்தையை நீங்கள் ஏற்றுக்கொண்டது அம்பேத்கரின் கருத்துக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.ஆனால் பல போலி பகுத்தறிவு வாதிகள் அம்பேத்கரின் வார்த்தையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

    அம்பேத்கர்,விவேகானந்தர் போன்றோர் கூறிய இந்த ஆரிய படையெடுப்பு ஒரு பொய்க் கதை என்ற கருத்தை இப்பொழுது பல வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிறுபித்திருக்கிறார்கள் இன்னும் நிருபித்துவருகிரார்கள்.

    ( 1. )///“ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான்.///

    அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் பிராமண ஆதிக்கம் இருந்திருக்கலாம்.அதனால் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.

    ஆனால் அவருடைய இந்த கருத்து அவர்காலத்திர்க்குப் பொருத்தமானதாக இருக்க்கலாமே தவிர இந்தக்காலத்திற்கு பொருந்தாது என்பதே என்கருத்து.

    இப்பொழுது பிராமண ஆதிக்கம் இருக்கிறதா?இருந்தால் அது எந்த வகையில் என் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.என் பள்ளி பருவத்தில் என் வகுப்பில் இருந்த நாற்பதுக்கு மேல் உள்ள மாணவர்களுள் நான்கு,அல்லது ஐந்து எண்ணிக்கையில் உள்ள பிராமணர்கள் அதிகம் மதிப்பெண் வாங்குவதும்,எங்கள் ஊர் கோவில்களில் அவர்கள் கூட்டம் அதிகம் உள்ளதும்,எங்கள் கிரிக்கெட் டீமில் ஒரு பிராமணப் பையன் மட்டும் எப்போதும் நல்ல ரன்கள் எடுப்பதும்தான் நான் சந்தித்த பிராமண ஆதிக்கம்.நான் பணிபுரியும் இடத்தில் ஒரே ஒரு பார்ப்பனர் மட்டுமே அப்பிராணி அம்பியாக வளம் வருவார்.எனவே எந்த எந்த வகையில் தற்போது பிராமண ஆதிக்கம் உள்ளது என்று கூறுங்கள் எனக்கு பதிலளிக்க உதவியாக இருக்கும்.

    ( 2.)///அவர் முஸ்லீம் உடை அணிந்து, தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்.”///

    என் நண்பர்கள் வட்டாரத்தில் உள்ள ஒரே ஒரு பார்ப்பனன் மட்டும் சென்னையில் IT கம்பெனியில் அதிகம் சம்பளம் வாங்குபவன்.அவன் என் நண்பனின் -அவன் பிராமணன் அல்ல, மாதம் 3000 மட்டுமே சம்பளம் வாங்குபவன்-திருமணத்திற்கு இரண்டு லட்சம் -கடனாக அல்ல-கொடுத்து உதவியிருக்கிறான்.

    எனக்குத் தெரிந்த ஒரு பார்ப்பனர் இலவசமாகவே பிள்ளைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்கிறார்.

    எனக்கு நன்கு பழக்கப்பட்ட அலுவலகத்தில் லஞ்சம் வாங்காத ஐந்து பேரில் மூன்று பேர் பார்ப்பனர்.

    எங்கள் கோவில் திருப்பணிக்காக வசூல் செய்ததில் பார்ப்பனர்களே அதிகம் பணம் தந்தனர்.

    எனக்குத்தெரிந்த ஒரு பார்ப்பனர்-வங்கியில் வேலைப் பார்ப்பவர்-கோவில்களில் மக்கள் கூட்டம் உள்ள விசேச நாட்களில் மற்றும் விடுமுறை நாட்களில் கோவில் குருக்களுக்கு உதவியாக இருப்பார்.பணம் பெற்றுக் கொள்ள மாட்டார்.தட்சணையாக விழும் பணத்தையும் கோவில் உண்டியலில் போட்டுவிடுவார்.கடவுளுக்கு செய்யும் தொண்டாகவே செய்து வருகிறார்.

    எனக்குத்தெரிந்த சில பார்ப்பனர்க் குடும்பங்கள் கடவுளின் பூஜை,அன்னதானம்,மண்டபப்படி,போன்ற காரியங்களுக்காக ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் ரூபாய்களை கடவுளுக்காக செலவிடுகின்றனர்.

    இப்பொழுது சொல்லுங்கள் மகேஷ் சார், என்னைச் சற்றி நடக்கும் இத்தனை விசயத்தைப் பார்த்தப் பின்னும் என்னால் எப்படி பார்ப்பனர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள்,மதம் (கடவுள்)அல்ல என்று கூறமுடியும் ?எதோ சிலர் பணம் மட்டும் குறிக்கோளாக வைத்திருக்கலாம்.அதற்காக என்னைச் சற்றி நடக்கும் விசயங்களை வேண்டுமென்றே ஒதுக்கிவிட்டு நான் கண்ணை மூடிக்கொண்டு அம்பேத்கர் சொன்னார் என்பதற்காக எப்படி என்னால் ஏற்க முடியும்.?

    (1 ) வது கருத்து அம்பேத்கர் காலத்திற்கு மட்டுமே பொருத்தமானது.இப்பொழுது பிராமண ஆதிக்கம் என்பது பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம்.

    (2 ) வது கருத்து பிராமணர்களுக்கு மதம் முக்கியமல்ல,பணம் தான் முக்கியம் என்ற கருத்தை என் அனுபவத்தில் நான் கண்டவைகளை வைத்துப் பார்க்கும் போது அம்பேத்கர் கருத்தை ஏற்க இயலாது.

    (2 .)வதுக் கருத்து உண்மையிலேயே அம்பேத்கர் சொன்னது தானா?

  27. 2000 வருடங்களாக இந்தியாவில் வசிக்கும் பௌத்தர்களை ஏற்றுக் கொள்கிறோம், 750 வருடங்களாக இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களை ஏற்றுக் கொள்கிறோம், 200 வருடங்களாக இந்தியாவில் வசிக்கும் கிருத்துவர்களை ஏற்றுக் கொள்கிறோம்!

    ஆனால் 5000 வருடங்களாக இந்தியாவில் வசிக்கும் ஆரியர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

    ஆரிய திராவிட விஷயங்கள் குழப்பாமாகத் தான் உள்ளன.

    According to a view put forward by geneticist Luigi Luca Cavalli-Sforza in the book The History and Geography of Human Genes, the Dravidians were preceded in the subcontinent by an Austro-Asiatic people, and followed by Indo-European -speaking migrants sometime later.

    “original inhabitants” of India is likely to be due to assimilation of the natives by Southeast Asian immigrants speaking a proto-Munda language.

    The original inhabitants (of india) may be identified with the speakers of the Munda languages, which are unrelated to either Indo-Aryan or Dravidian languages.

  28. இந்த ராமன் சீதை ராமாயணம் போன்ற பயித்தியக்காரத்தனங்களை என்னைக்கு நாம விட்டுத்தொலைக்கப்போறமோ தெரியல. ராமன் ஒழுக்கமானவன்னு சொல்றுறாங்க இல்லைன்னு சொல்றாங்க இதயெல்லாம் நம்புறதுக்கு யாருகிட்ட என்ன ஆதாரம் இருக்கு? இவங்க எழுதிவைச்ச ராமாயணம் எல்லாம் கற்பனையும் பொய்யும் புரட்டுமுன்னு எத்தின பேரு எத்தின விதமா எழுதிறாங்க. எத நம்புறது? இல்ல ஏன் நம்பணும்? இதுக்கெல்லாம் அப்பால உண்மை எங்கிறது ராமன் கிருஸ்ணன் இப்படியான அவதாரங்கள் எல்லாம் ஒரு ஆரிய மன்னனை கடவுளாக்கிய ஒன்னுதான். இந்த மன்னன் உண்மையில ஒரு gay அதாவது உடற்பசிக்கு ஆண்களையே நாடுபவர். ராமனோட தோற்றத்தை பார்த்தே இத புரிஞ்சுக்க முடியும். இத மூடி மறைக்கத்தான் கிருஸ்ணன் ஆயிரம் பெண்களோட புணர்ந்தான் அப்படீன்னு ரீல் விடுறாங்கள். இவிங்க கூட்டாளி அனுமாருக்கு பெண்ணுங்களையே பிடிக்காது. ராமன் பொண்டாட்டி சீதா ராமன விட்டுப்புட்டு ஓடிட்டாள் அத எப்படி எல்லாம் மறைக்கிறாங்க. நாம ராமாயணத்த பத்தி ஆயிரத்தெட்டு விதமா ஆராய்ச்சி பண்றம் ஆனா இதப்பத்தின வெள்ளைக்காரனோட gay பத்தின ஆராய்ச்சீல ராமன் பத்தி ரொம்ப சுவார்சியமான தகவல் நெறய இருக்கு.

  29. ///ராம், பாலா,திருச்சிக்காரன், Jawahar///
    உண்மையிலேயெ நீங்கள் இந்துவாக இருந்தால், இந்துமததத்திற்கு இழிவை தேடித்தந்தார் என்று ஜெயெந்திரர் மீது கோபப்பட்டடிருக்க வேண்டும். ஆனால், உங்கள் கோபாம் அந்தத் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்மீதுதான் வருகிறது. இதுதான் சாதிஅபிமானம்.

    இந்துமதத்திற்குள் சாதி வேறுபாடுகள் இல்லாமல் இருந்திருந்தால்,இந்து மதத்திற்குள் இருந்தே இந்து மதத்திற்கு எதிராக பெரியார் அம்பேத்கர் போன்றவர்களே உருவாகி இருக்கமுடியாது.
    பொறுமையாக யோசியுங்கள்.
    பார்ப்பனர்களை திட்டிகிறார்கள் என்று மட்டும் கோபப்படாதீர்கள். ஏன் திட்டுகிறார்கள் என்று யோசியுங்கள். உண்மை புரிந்தால் நீங்களும் பார்ப்பனர்களை திட்டுவீர்கள்.

    காந்தியடிகளை பற்றிய மதிமாறினின் விமர்சனங்களில் உடன்பாடில்லை எனக்கு. ஆனால் அது மாற்று கருத்தாக யோசிக்க வைக்கிறது. முதலில் காந்தியை இப்படி திட்டிவிட்டாரே என்று நான்கூடகோபப்பட்டேன். கோபப்படுவதில் அர்த்தமில்லை.

  30. தனபால், நீங்கள் ஒரு மனிதன் எவ்வளவு மோசடியனவனாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறீர்கள்.

    அம்பேத்கர் ஆரியர்கள் இந்தியாவிற்குள் இருந்தவர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறிரு்கள். ஆனால், பார்ப்பனர்கள் சாதி வெறியர்கள் என்று அவர்களின் வேதங்களில் புராணங்களில் இருந்து அம்பேத்கர் ஆதாரோத்தோடு அம்பலப்படுத்தியதை உங்களுடைய மோசடியான, அயோக்கியத்தனமான உதாரணங்களோடு மறுக்கிறீர்கள்.
    நீங்கள், இவ்வளவு கீழ்தரமான ஆளாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை. குறைந்தபட்சம் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமாவது உண்மையாக நடந்துகொள்ளுங்கள்.
    உங்களைபோன்ற நாணயமற்றவரொடு விவாதிக்க நான் தயாராக இல்லை.
    கேட்டால் நான் பார்ப்பனர் இல்லை என்று மேலும் பொய் சொல்வீர்கள்.
    திருச்சிக்காரனையே தூக்கி சாப்பிட்டுவிட்டிர்கள்.

  31. பாலா
    பெரியார் பற்றி அவதூறு எழுதிய கழிசடை ஜெயமோகன் பற்றி விவாதிக்க கூப்பிட்டால், அதற்கு வருவதற்கு துப்பில்லாமல், இங்கு வந்து பாப்பான் நல்லவன் என்று எழுதிகொண்டிருக்கும், பாரப்பன சாதி வெறியன் பாலா உங்களுக்கு வெட்கமாக இல்லையா இப்படி உங்கள் சாதிக்காரகளுக்கு மட்டுமே ஆதராவா தொடர்ந்து பொய் எழுதிக்கொண்டிருப்பது.

    வாங்கள், பார்ப்பன பாரதிக்கு பல்லக்கு தூக்கும் நீங்கள், பெரியாரைப்பறற்றிய அவதூறை விரும்புகிறீர்கள் அல்லவா? அதைப் பற்றி விவாதிப்போம்.

  32. ///திருச்சிக்காரன்///
    காசிமேடு மன்னாரு எழுப்பிய கேள்விகளுககு ஒழுக்காமாக நேர்மையாக பதில் அளியுங்கள். அதை தனிப்பட்ட முறையில் திருப்பி, வழக்கம்போல் தவறான திசையில் திருப்பிவிடாதீர்கள்.

  33. தோழர் மதிமாறன் அம்பேத்கர் ஆதாரோத்தோடு, வால்மீகி ராமாயணத்தில் இருந்து எடுத்துக்காட்டி எழுதிய பிறகும்கூட இந்த பார்ப்பன கும்பல் கொஞ்சமும் கூச்சசமில்லாமல் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுங்கள் என்று எழுதுகிறார்கள். இவர்கள் பின்னூட்டங்களை அனுமதிக்காதீர்கள்.

  34. நண்பர்களே,
    சாதி முறையை விட்டு சமத்துவ சமுதாயம் அமைப்போம்.

    தொடர்ந்து சாதிப் பட்டங்களை சூட்டி சாதி முறையை தொடரும் செயல்களை கை விடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    எப்படி எல்லாம் சாதிக் காழ்ப்புணர்ச்சியை வெளிப் படுத்தலாம் என்று சிந்திப்பதை விட,

    எப்படி எல்லாம் மக்களை இணைக்கலாம் , எப்படி எல்லாம் சமத்துவத்தையும் , அன்பையும், நியாய எண்ணத்தையும் மக்களின் மனதிலே உருவாக்கலாம் என்று சிந்திப்பது ஆக்க பூர்வமான விளைவுகளைத் தரும்.

  35. சிவராஜ்,
    தனியே ஜெயேந்திரர் பற்றி ஒரு இடுகை போடுங்கள். இடுகையை ஆதரித்து நான் குரல் கொடுக்க ரெடி. இங்கே டாபிக் ஜெயேந்திரர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன். அதேபோல், ஜெயேந்திரருக்காக ஒட்டுமொத்த சாதியையும் குறை கூறுவது எப்படி சார் நியாயம்.
    அப்புறம் ஒன்று கூறுகிறேன். இது தமிழ்த்தாத்தா சுயசரிதையில் இருந்து எடுத்தது. அவர் பிராமணரில் ‘அஷ்டசாஸ்த்திரம்’ என்ற வகுப்பைச் சார்ந்தவர். அவ்வகுப்பைப் பற்றி அவர் கூறுகையில், “8000 பேர் வட இந்தியாவிலிருந்து தெனிந்தியாவுக்கு அந்த காலத்தில் இடம் பெயர்ந்ததாக கூறுகிறார். அஷ்ட என்றால் 8, சஹஸ்ரம் என்றால் 1000. இது தான் மருவி ‘அஷ்டசாஸ்த்திரம்’ (குழுவின் பெயர்) ஆனது. இந்த மாதிரி சிறு குடும்பம், குழுவாக அந்த காலத்தில் இருந்தவர்கள் இன்று இதை சாதிபிரிவு (பிரிட்டீஷார் உபயத்தில்) என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இதே மாதிரி தான் மற்ற சாதிகளில் குழுக்களாக இருந்தவர்கள் இன்று சாதி என்று சொல்லிக் கொள்கிறார்கள். வேதம், கீதையைப் படித்தால் நன்கு புரியும். ஒரு வர்ணத்தைச் சார்ந்தவர்கள் இன்னொரு வர்ணத்திற்கு மாற முடியும். உதா: க்ஷத்திரியர் பிராமணர் ஆக முடியும் & vice-versa. இது மற்ற வர்ணத்திற்கும் பொருந்தும். அறைகுறையாக படித்துவிட்டு மேலோட்டமாக எதையும் எழுத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    சாதி வெறியைத் தூண்டிவிட்டவன் பிரிட்டீஷ்காரன்!! சாதி வெறியைத் தூண்டிவிட்டவன் பிரிட்டீஷ்காரன்!! சாதி வெறியைத் தூண்டிவிட்டவன் பிரிட்டீஷ்காரன்!! சாதி வெறியைத் தூண்டிவிட்டவன் பிரிட்டீஷ்காரன்!! சாதி வெறியைத் தூண்டிவிட்டவன் பிரிட்டீஷ்காரன்!!

    பொறுமையாக உட்கார்ந்து யோசித்துப் பார்த்தீர்களானால் உங்களுக்கே நியாயம் புரியும். காசு என்றால் அதற்கு இரண்டு பக்கம் உண்டு சார். ஒரு பக்கத்தை மட்டும் பார்ப்பதால் லாபம் என்ன?

    கண்ணன்! உணர்ச்சிவசபடாதீர்கள். பாரதி பற்றி உங்கள் பதிலுக்கு என் பதிலை சரியான இடுகையில் அளித்துவிட்டேன். அங்கே போய் படியுங்கள் சார்!

    யேசுவை கடவுளின் குழந்தை என்று கூறுகிறார்கள். ஜோசப் அவருடைய வளர்ப்பு தந்தை என்றும் கூட கூறுவதுண்டு. அது பற்றி ஆராய்ச்சி செய்யுங்களேன். நான் கிருத்துவ பள்ளிகளில் படித்தவன். எனக்கு அவர் மீதும் நம்பிக்கை உண்டு. அவர் கடவுள். அதை நம்ப வேண்டும். கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். அம்புட்டுத்தான்.

    //காதலர் தினம் போன்ற வர்த்தக நோக்கம் கொண்ட சாதாரண மேற்கத்திய கலாச்சாரத்தைக்கூட இந்து மதத்தின் பேரால் எதிர்ப்பது எவ்வளவு கேலிக்குரியது.//
    மதிமாறன் சார்! நீங்கள் திராவிடர். சிந்து வெளி நாகரிகம் எல்லாம் உருவாக்கியவர். மேற்கத்திய கலாச்சாரம் உங்களுக்கு எதற்கு? 8000, 10000 வருட பாரம்பரியும் உங்களுடையது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

  36. திருச்சிக்காரன்! நியாயமான வாக்கியம் சொன்னீர்கள். நான் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறேன்.

  37. சிவராஜ்,

    ///ராம், பாலா,திருச்சிக்காரன், Jawahar///
    உண்மையிலேயெ நீங்கள் இந்துவாக இருந்தால், இந்துமததத்திற்கு இழிவை தேடித்தந்தார் என்று ஜெயெந்திரர் மீது கோபப்பட்டடிருக்க வேண்டும். ஆனால், உங்கள் கோபாம் அந்தத் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்மீதுதான் வருகிறது. இதுதான் சாதிஅபிமானம்.////

    ஜெயேந்திரரைப் பற்றி பல தளங்களிலும் பலமுறை எழுதி இருக்கிறேன்.

    அவர் ஆன்மீகத்தில் நேரம் செலவழிப்பதை விட உலக விடயங்களில் ஆர்வம் காட்டும் நேரம் தான் அதிகம் என்பதை சுட்டிக் காட்டி எழுதி இருக்கிறோம்.

    ஜெயேந்திரரரும் மானமிகு தளபதியைப் போல, புரட்சி தலைவியைப் போல, தமிழினத் தலைவரைப் போல சொத்துக் குவிப்பு, ஆதரவு தளத்தை விரிவு படுத்துதல், மற்றும் இது போன்ற செயலகளில் தான் ஈடு பட்டு இருந்திருக்கிறார், என்பதை சுட்டிக் காட்டி எழுதி இருக்கிறோம்.

  38. தமிழன் (03:06:29) :

    ///திருச்சிக்காரன்///
    காசிமேடு மன்னாரு எழுப்பிய கேள்விகளுககு ஒழுக்காமாக நேர்மையாக பதில் அளியுங்கள். அதை தனிப்பட்ட முறையில் திருப்பி, வழக்கம்போல் தவறான திசையில் திருப்பிவிடாதீர்கள்.///

    சாதி அடை மொழியை குறித்து எழுதியதை மாற்றி இனத்தை குறிப்பதாக சொன்னது நானா?

    தேவநாததைக் கண்டித்து என் தளத்திலேயே கட்டுரையும் எழுதி இருக்கிறேன்.

  39. வேதம் தான் சாதியை உருவாக்கியது என்று கூறுகிறீர்களே. வேதத்தில் எங்காவது “கவுண்டர்”, “உடையார்”, “வேலாளர்” என்று சாதி வார்த்தைகளை கண்டுபிடித்து சொல்லுங்களேன் பார்ப்போம். எங்கேயும் இருக்காது. ஏனென்றால் இது பிரிட்டீஷாரின் உபயத்தால் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் உருவானது.

    வேதத்தில் சொன்ன வர்ணம் வேறு இன்று இருக்கும் சாதி முறை வேறு. தமிழ்நாடு அரசு வெளியிட்ட கையேடு படி 2000 க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. அதையெல்லாம் வேதமும், பார்ப்பனனும் தான் உருவாக்கினாரா? எல்லாம் குடும்ப பெயர்கள், குழு பெயர்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் தோழர்களே! உங்களுக்கே காமெடியா இல்லையா?

    கீழே உள்ள செய்தி முற்றிலும் உண்மை. வரலாற்றை அலசி சரிபார்த்துக் கொள்ளவும்.
    the freedom fighter A. Vaidhyanatha Iyer successfully led Dalits into the Meenakshi temple in Madurai, overcoming all the impediments posed by the casteist forces that were hell-bent on thwarting the historic event.

  40. பார்ப்பன பாலா, நாலுவர்ணம் தலையில பொறந்தவன் கால்ல பொறந்தவன் எழுதி வைச்சது யாரு? உன்னய மாதரிரி பாப்பானனா? வெள்ளைக்காரனா?

    நந்தனை கோயில் உள்ள விடமுடியாதுன்னு சொன்னது யாரு? வெள்ளக்காரனா? உன்ன மாதிரி பார்ப்பனசாதி வெறியனா?

    மனுதர்மத்த்தில பெண்களை பார்ப்பனரல்லாத மக்களை கேவலப்படுத்தி எழுதியது யாரு? வெக்கமா இல்ல உனக்கு? இப்படி பொய் புளுகுறதுக்கு?

    தாழ்த்த்பபட்ட மக்களை தொட்டல் தீட்டுன்று நடத்தியது யாரு உன்னய மாதிரி சாதி வெறியனா? வெள்ளக்காரனா?

    வரலாற்றில் பலபொய்களை பார்ப்பனர்கள் புளுகுவானுங்கனு படிச்சிருக்கேன்,. ஆனால் உன்னய மாதரி பச்ச பார்ப்பன வெறியன இப்பதான் பாக்குறென்.

  41. இந்தியாவில் இருக்கும் சாதிகள் அனைத்தையும் உருவாக்கியவன் பிரிட்டிஷ்காரன்தான். அதற்கு முன்பு இந்தியர்களுக்கு ஜாதி என்றால் என்னவென்றே தெரியாது. பார்பனவர்கள் என்றைக்குமே நல்லவர்கள்தான். தீண்டாமை என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது. மனு சாஸ்திரத்தை எழுதிய கயவன் நீங்கள் எல்லாம் நினைப்பதுபோல ஆரியன் இல்லை, லார்ட் மனு என்ற ஆங்கிலேயன். புராண கதைகளை எழுதி இந்து கடவுள்களை அசிங்கப்படுத்தியது லார்ட் லபக்குதாஸ் என்ற ஆங்கிலேயன். இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் எல்லாரும் ஐநூறு வருடங்களுக்கு முன்பு அரேபியாவிலிருந்து கப்பலில் வந்தவர்கள். கிறிஸ்தவர்கள் வானத்திலிருந்து இருநூறு வருடங்களுக்கு முன்பு தொபுக்கடீரென்று குதித்தவர்கள். ஆதாரமா? ஆதாரம் கேட்டீர்கள் என்றால் திருச்சிகாரனை போல அவதாரம் எடுத்து நாலு பக்கத்திற்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதி தள்ளிவிடுவேன். அதை படிக்காமல் ஸ்க்ரோல் செய்வதற்கே உங்களுக்கு ஐந்து நிமிடம் ஆகி விடும். ஜாக்கிரதை.

    பின்குறிப்பு: நானும் கிறிஸ்தவ பள்ளிகூடத்தில் படித்தவன்தான். ஆனால் (மனசாட்சியில்லாமல்) கிறிஸ்தவர்களை குறைகூருவேன்.

  42. பாலா
    தனியே ஜெயேந்திரர் பற்றி ஒரு இடுகை போடுங்கள். இடுகையை ஆதரித்து நான் குரல் கொடுக்க ரெடி. இங்கே டாபிக் ஜெயேந்திரர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்.

    ஏன் அந்த ஆள திட்டி நீதான் எழுதேன். இதுவரைக்கும் அந்த ஆள நீ திட்டி எழுதாததுககு என்ன காரணம்? அவன் பாப்பான் என்பதினால்தானே? பாப்பான் இந்து மததிற்கு விரோதமா செயல்பட்ட தப்பு இல்ல. ஆனால் அத மத்தசுட்டிக் காட்டுன தப்பு.அதனால்தான் அம்பேத்கர் உஙகள் முகத்தில காறி உமிழ்ந்தார்.

  43. ///பாலா, திருச்சிக்காரன் இன்னும் பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்களே,

    நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன். அதுவும் பறையர் வகுப்பைச் சேர்ந்தவன். இந்து.
    எனககு இன்னும் திருணம் ஆகவில்லை. நீங்களும் இந்துதானே. உங்கள் வீட்டில் திருமண வய்தில் மகளோ, சகோதரிகளோ இருந்தால் எனக்கு திருமணம் செய்து கொடுப்பீர்களா?

  44. பாலா, திருச்சிக்காரன், ராம் இன்னும் பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்களே,

    நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன். அதுவும் பறையர் வகுப்பைச் சேர்ந்தவன். இந்து.
    எனககு இன்னும் திருணம் ஆகவில்லை. நீங்களும் இந்துதானே. உங்கள் வீட்டில் திருமண வய்தில் மகளோ, சகோதரிகளோ இருந்தால் எனக்கு திருமணம் செய்து கொடுப்பீர்களா?

  45. ஒட்டுமொத்த பார்ப்பனர்களும், அண்ணல் அம்பேத்கரின் கால் தூசுக்குகூட ஆகமாட்டார்கள்.

  46. என்னுடைய‌ உற்வின‌ர்க‌ள் சில‌ரே க‌ல‌ப்பு திரும‌ண‌ம் , காத‌ல் திரும‌ண‌ம் செய்து கொண்ட‌வ‌ர்க‌ள். இரண்டு பெண்க‌ள் தாழ்த்த‌ப் ப‌ட்ட் பிரிவின‌ரைத் திரும‌ண‌ம் செய்து கொண்டு உள்ள‌ன‌ர்.

    இந்த‌க் கால‌த்திலே எல்லாப் பெண்க‌ளும், தம‌து விருப்ப‌ம் போல‌வே திரும‌ண‌ம் செய்து கொள்கின்ர‌ன‌ர்.

    என‌து உற‌வுகார‌ப் பெண்க‌ள் யாரரும் யாரை திரும‌ண‌ம் செய்ய‌ நினைதாலும் அதை வூக்குவிக்கிரேன்.

    இதில் க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌ முடியாது. க‌ட்டாய‌த்துக்கு பெண்க‌ள் ப‌னிந்த‌ கால‌ம் முடிந்து விட்ட‌து.

  47. மகேஷ்,
    மகோன்னத தலைவர் அம்பேத்காரையும், ராம் விலாஸ் பாஸ்வானையும் மணந்தது பிராமண பெண்களே!

    எங்கள் வீட்டில் பெண் இல்லை. அப்படியே இருந்தாலும் உங்களைப் பற்றி தெரியாதபட்சத்தில் பெண் கொடுப்பதாக இல்லை.

  48. குரு,

    //நாலுவர்ணம் தலையில பொறந்தவன் கால்ல பொறந்தவன் எழுதி வைச்சது யாரு? உன்னய மாதரிரி பாப்பானனா? வெள்ளைக்காரனா?//
    தலை கல்வியையும், மார்பு வீரத்தையும், தொடை வியாபாரத்தையும், கால் சமுதாயத்திற்கு சேவையைக் குறிக்கவே அப்படி கூறப்பட்டிருக்கிறது. அதே போல் ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர் மற்ற வர்ணத்திற்கு மாற முடியும் என்றும் வேதத்தில் கூறி உள்ளது. அப்புறம் என்ன கவலை?சரியா புரிந்து கொள். வேதத்தில் நாலு வர்ணம் மட்டுமே இருக்கு. மற்ற ஜாதிகள் எங்கே இருந்து வந்தது? பிரிட்டீஷார் உபயம்.

  49. //நந்தனை கோயில் உள்ள விடமுடியாதுன்னு சொன்னது யாரு? வெள்ளக்காரனா? உன்ன மாதிரி பார்ப்பனசாதி வெறியனா///

    குரு இதை படி.
    the freedom fighter A. Vaidhyanatha Iyer successfully led Dalits into the Meenakshi temple in Madurai, overcoming all the impediments posed by the casteist forces that were hell-bent on thwarting the historic event.

  50. Guru,
    //மனுதர்மத்த்தில பெண்களை பார்ப்பனரல்லாத மக்களை கேவலப்படுத்தி எழுதியது யாரு? வெக்கமா இல்ல உனக்கு? இப்படி பொய் புளுகுறதுக்கு?///

    பெண் என்பவள் சக்தி. உலகை ஆட்டுவிப்பவள். ஆணை விட சிறந்தவள் என்று வேதம் சொல்கிறது.

    வேதம் தழுவலாக பாரதி எழுதிய வசன கவிதைகளைப் படி…..

  51. பாலா, அவ்வளவு ஏன், தமிழ்நாட்டில முதல் முதல்லே தலித்துகளை ஆலயப் பிரவேசம் பண்ணவரு ராஜாஜி.

    http://kgjawarlal.wordpress.com

  52. ஜவகர் அவர்களே ராஜாஜி என்கிற பார்ப்பணர், பார்பணர் அல்லாத மக்களை படிக்க கூடாது என்று தடுத்தவர்.குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தவர். அந்த மோசடிகாரரை ஆலையபிரவேசம் செய்தார்ன்னு பச்சையா பொய் சொல்கிறீர்களே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?

    பார்ப்பனர்கள் என்றாலே வரலாற்றை தவறாக பார்பனியத்திற்கு சாதகமாக மாற்றும் ஆளாகத்தான் இருப்பார்களா?

    ஒரு பார்ப்பான் கூட உண்மையா இருக்கமாட்டார்களா?

    சதிஸ்
    சுவிஸ்

  53. //அப்படியே இருந்தாலும் உங்களைப் பற்றி தெரியாதபட்சத்தில் பெண் கொடுப்பதாக இல்லை//

    பாலா உங்கள்வீட்டிற்கு என்றைக்கு பெண்பார்க்க வரட்டும். என்னை நேரில் பார்த்து தகுதியானவர் என்றால் பெண் தருவீர்களா??

    நானும் மகேசைப் போன்று ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேந்தவன் தான்.

  54. திரு மகேஷ் அவர்களே,

    ///தனபால், நீங்கள் ஒரு மனிதன் எவ்வளவு மோசடியனவனாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறீர்கள்.///
    ///பார்ப்பனர்கள் சாதி வெறியர்கள் என்று அவர்களின் வேதங்களில் புராணங்களில் இருந்து அம்பேத்கர் ஆதாரோத்தோடு அம்பலப்படுத்தியதை உங்களுடைய மோசடியான, அயோக்கியத்தனமான உதாரணங்களோடு மறுக்கிறீர்கள்.///

    மகேஷ் நீங்கள் அம்பேத்கர் பார்ப்பனர்களைப் பற்றி கூறியது,வேத புராண ஆதாரங்கள், இவை ஒரு புறம் இருக்கட்டும் உங்கள் அனுபவத்தில் இருந்து பாருங்கள் இப்பொழுது பார்ப்பன ஆதிக்கம் எங்கே இருக்கிறது.?நீங்கள் தற்போது பார்ப்பனர்களால் எப்படிப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?என்று சிந்தியுங்கள்.

    நான் ,நான் பார்த்த,பார்த்துக் கொண்டிருக்கிற பார்ப்பனர்களைப் பற்றி கூறினேன். உள்ளதை உள்ளபடி எழுதினேன்.எந்த built up பும் என் எழுத்தில் இல்லை. -இது எப்படி ///மோசடியான, அயோக்கியத்தனமான/// உதாரணம் என்று நீங்கள் கூறுவது எனக்குப் புரிய வில்லை.

    ///நீங்கள், இவ்வளவு கீழ்தரமான ஆளாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை.///
    ///உங்களைபோன்ற நாணயமற்றவரொடு விவாதிக்க நான் தயாராக இல்லை.///

    எனக்காக,இதுவரை உங்கள் நேரத்தையும்,உழைப்பையும் தந்ததற்கு நன்றி.

    //கேட்டால் நான் பார்ப்பனர் இல்லை என்று மேலும் பொய் சொல்வீர்கள்.///

    இது பொய் அல்ல.உண்மை.

  55. Sathish, அடக் கடவுளே…. இதற்கு நான் என்ன சொல்வது! சந்தோசம், நீங்கள் சொல்வது சரியாகவும், நான் சொல்வது பொய்யாகவுமே இருக்கட்டும். பொய் சொன்னதற்கு என்னை பெரிய மனசு பண்ணி மன்னித்துக் கொள்ளுங்கள்.

    http://kgjawarlal.wordpress.com

  56. சதிஸ்,
    பிராமண பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைபடுவதில் சந்தோஷம். எங்கள் வீட்டில் பெண் இல்லை என்றேனே. சரியாக கவனிக்கவில்லையா?

    hindu matrimony, tamil matrimony, bharat matrimony இவற்றில் முயற்சி செய்யவும். அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  57. அதே ராஜாஜி, பிராமணர் அல்லாத காந்தியின் மகனுக்கு தன் மகளைக் கொடுத்தார். என்னதான் அரசியல் நோக்கம் அதில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவருக்கு ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்ய மனம் வந்ததே! யோசியுங்கள்.

  58. பிராமணர் அல்லாத ராமனுக்கும் பிராமணத் தந்தைக்குப் பிறந்து பிராமணனாக வாழ்ந்த இராவணனுக்கும் இடையே நடந்த ஆரிய திராவிட போராட்டம் தான் இராமாயணம். மிக சரியாக சொன்னார் ஒருவர்.

    கிருஷ்ண பரமாத்மா பிராமணன் இல்லை. யாதவர் ஜாதி. அவரை பிராமணர்கள் வழிபடுகிறார்கள்.

  59. வெளிநாட்டுக்காரனுக்கு புரிகிறது. கீழே படியுங்கள் தோழர்களே!

    “Women enjoyed far greater freedom in the Vedic period than in later India. She had more to say in the choice of her mate than the forms of marriage might suggest. She appeared freely at feasts and dances, and joined with men in religious sacrifice. She could study, and like Gargi, engage in philosophical disputation. If she was left a widow there was no restrictions upon her remarriage.” Will Durant – Story of Civilization: Our Oriental Heritage

    “Among the many societies that can be found in the world, we have seen that some of the most venerating regard for women has been found in Vedic culture. The Vedic tradition has held a high regard for the qualities of women, and has retained the greatest respect within its tradition “-Stephen Knapp- Women in Vedic Culture.

  60. பாலா, திருச்சி, Jawahar போன்ற பார்ப்பன் கும்பல்களே, உங்களுக்கு வெளிநாட்டுக்காரன் சொன்னால் இனிக்கிறது. அண்ணல் அம்பேத்கர் சொன்னால் கசக்கிறதா?

    பாலா இப்ப மட்டும் வெளிநாட்டுக்காரன் சொன்னான்னு பெருமையா சொல்றீங்க?
    வெளிநாட்டுக்காரன் வெள்ளைக்காரன் சாதியை கொண்டுவந்தான்னுஅத மட்டும் இழிவா சொல்றீங்க?

    வெளிநாட்டுக்கார்ன் சொன்னது இருக்கட்டும். உங்கள் வேதத்தின் மீ அண்ணல் அம்பேத்கர் காறி உமிழ்தாரே அதற்கு என்ன பதில்?

    புரட்சியாளர் அம்பேத்கர் கேட்டாரே அதற்கு என்ன பதில்?

  61. தோழர் மதிமாறன், பார்ப்பனர்கள் எப்போதும் தங்களின் நலனையே முன்நிறுத்துவார்கள் என்பதற்கு இதில் தொடர்ந்து எழுதிவரும் பார்ப்பனர்களே நல்ல சாட்சி.

    இந்தக்கட்டுரை காதலர்களிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட இந்து மதவெறியர்களை கண்டிக்கிறது. ஒரு பாப்பனாவது அந்த காட்டுமிராண்டித்தனத்த கண்டிக்கிரான பாருங்க….

    தொடர்ந்து பொய் எழுதி தங்களை தாங்களே சிறப்பாக அம்பலப்படுத்திக்கொள்கிறார்கள் பார்ப்பனர்கள்.
    தொடர்ந்து நடக்கட்டும் அவர்கள் பணி. நமது வேலை சுலபமாக ஆகிவிடும்.

  62. ///திருச்சிக் காரன் (07:36:20) :

    என்னுடைய‌ உற்வின‌ர்க‌ள் சில‌ரே க‌ல‌ப்பு திரும‌ண‌ம் , காத‌ல் திரும‌ண‌ம் செய்து கொண்ட‌வ‌ர்க‌ள். இரண்டு பெண்க‌ள் தாழ்த்த‌ப் ப‌ட்ட் பிரிவின‌ரைத் திரும‌ண‌ம் செய்து கொண்டு உள்ள‌ன‌ர்.///

    பாலா, திருச்சி நீஙகள் உலகத்திற்கு நன்கு தெரிந்த உண்மையையே மாற்றி பொய் சொல்கிறவர்கள். உங்கள் சொந்த வாழ்க்கை குறித்து உண்மையாக சொல்லப்போகிறீர்கள்?

  63. சதிஸ்,
    ஏனென்றால், அவன் எதுவும் புதிதாக சொல்லவில்லை. மேலும் அவன் சொல்வது உண்மை. வேதத்தை பற்றி நன்றாக புரிந்து கொண்டு சொல்கிறான் சார். அவன் எதுவும் புதிதாக சொல்லவில்லை. வெள்ளைக்காரன் நமக்கு குழிதோண்டினான் அதைத் தான் கண்டிக்கிறேன்.

    குடும்ப பெயர்கள், குழு பெயர்களையெல்லாம் ஜாதி பெயர்களாக மாற்றியவன் அவன். 4008 ஜாதி இப்பொழுது சமுதாயத்தில் இருக்கிறது. அதன் பெயர்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்யவே முடியாது. கொஞ்சம் யோசியுங்கள் சார். அத்தனை ஜாதிகளையும் வேதம் தான் உருவாக்கியதா?

    சட்ட மேதை சொன்ன சட்டங்களைத் தானே நாடு பின்பற்றுகிறது. அவர் புத்திசாலித்தனம் நாடு அறிந்ததே. அவர் எழுதிய நூல்களை படிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இணைய முகவரி இருந்தால் கொடுங்கள். கண்டிப்பாக படிக்கிறேன்.

    குரு,
    நான் அது பற்றி எப்போதோ பின்னூட்டம் இட்டு விட்டேன். நன்றாக என் பின்னூட்டங்களைப் பார்.

  64. இந்துத்வா கும்பல் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் திராவிட கும்பல் அதுக்குப் பாதுகாப்பு கொடுக்கலாமே ?! அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்.

  65. திரு மகேஷ் அவர்களே,

    நீங்கள் நேர்மையானவர்.ஆரியர்கள் இந்தியர்களே என்று ஒத்துக் கொண்டதற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ///தனபால், நீங்கள் ஒரு மனிதன் எவ்வளவு மோசடியனவனாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறீர்கள்.///
    ///நீங்கள், இவ்வளவு கீழ்தரமான ஆளாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை.///

    நீங்கள் நாகரீகமானவர்.என்னை ஆபாச வார்த்தையால் திட்டாததர்க்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ///பார்ப்பனர்கள் சாதி வெறியர்கள் என்று அவர்களின் வேதங்களில் புராணங்களில் இருந்து அம்பேத்கர் ஆதாரோத்தோடு அம்பலப்படுத்தியதை உங்களுடைய மோசடியான, அயோக்கியத்தனமான உதாரணங்களோடு மறுக்கிறீர்கள்.///

    முன்பு பார்ப்பனர்களும்,மற்ற ஆதிக்க ஜாதியினரும் ஜாதி வெறியர்களாகவே இருந்தனர்.இதை நானும் படித்திருக்கிறேன்,பெரியவர்கள் மூலம் கேட்டு தெரிந்திருக்கிறேன்.இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால்,மற்ற ஜாதியினரை ஒப்பிடும் போது, தற்போது பார்ப்பனரின் ஜாதிவெறி கணிசமாகவே குறைந்திருக்கிறது.தற்போது பார்ப்பனர்களால் யாரும் ஜாதி ரீதியாகப் பாதிக்கப் படுவதில்லை.நான் என் வாழ்நாளில் சந்தித்த நிகழ்வுகளின் அடிப்படையிலேயே தான் என் கருத்தை வெளியிட்டேன்.

    நான் தென் மாவட்டத்தில் வாழ்பவன்.இங்கு தாழ்த்தப் பட்டவர்கள் பாதிக்கப்படுவது பார்ப்பனர் அல்லாத குறிப்பிட்ட சில ஜாதியினரால் தான்.தாழ்த்தப் பட்ட வகுப்பினரின் இரு பிரிவினர் தங்களுக்குள் மோதிக் கொண்டு படிப்பு,வேலை இழந்தவர்களை நான் கண்டிருக்கிறேன்.

    /// மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். ”///
    இங்கு அம்பேத்கர் குறிப்பிட்டது கோவிலில் பணிபுரியும் குருக்கள் பற்றியே.அவர்கள் தட்சணையை எதிர் பார்ப்பது உண்மை தான்.ஆனால் அவர்கள் பெரும்பாலும் கடவுளை நம்பும், கடவுளைக் வணங்குபவர்களே….நாத்திகர்கள் அல்ல.

    பிராமணர்களில் சிலரே கோவில்களில் குருக்களாக உள்ளனர்.பெரும்பான்மையான பிராமனர்கள் வேறு பணி புரிபவர்களே.அவர்கள் எப்படி தட்சணை வாங்கமுடியும்.?

    ///உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்.///

    இதுவும் ஓரளவு உண்மைதான்.உண்மையில் பார்ப்பனர்கள் கடவுள்,மதம்,கோவில் மூலம் சம்பாதிப்பதை விட மற்ற ஜாதியினர் தான் கடைகள்,ஆட்டோ,டாக்ஸி,பூ,பழம்,தேங்காய் துளசி போன்ற பூஜை பொருட்கள் விற்ப்பது மற்றும் பல வகைகளில் அதிக பயனடைகிறார்கள்.அவர்கள் குடும்பமே இந்த வருமானத்தால் தான் நடக்கிறது.
    ///குறைந்தபட்சம் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமாவது உண்மையாக நடந்துகொள்ளுங்கள்.///

    நான் கூறியது உங்களுக்கு உண்மையாகத் தெரியவில்லை என்றால் அது என் குற்றம் இல்லை.

    ///தனபால், நீங்கள் ஒரு மனிதன் எவ்வளவு மோசடியனவனாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறீர்கள்.///
    ///நீங்கள், இவ்வளவு கீழ்தரமான ஆளாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை.///

    நான் கூறியது அனைத்தும் உண்மை.அந்த உண்மைக்காக நான் எந்த இகழ்ச்சியையும் ஏற்கத் தயார்.

  66. தமிழ்நாட்டில் கிராமபுறங்களில் இரட்டைக் குவளை முறையை அறிமுகபடுத்தி, அமுல்படுத்தியது யார்? தலைவர் சிலையெல்லாம் இழிவு படுத்துவது யார்?

    பிராமணர்களா?

    பிரிட்டீஷ் பாதிரிமார்கள் கட்டாய மதமாற்றம் செய்ய முற்பட்ட பொழு எதிர்த்து கேள்வி கேட்டது தவறு. அதனால் வந்த வினை இன்றைய பிராமண எதிர்ப்பு.

    தவறு என்று ஆன பொழுது அனுராதா ரமணன், ஜெயலலிதா போன்ற பிராமணர்கள் தானே ஜெயேந்திரனை எதிர்த்து எழுதியது, கைது செய்ய அனுமதி அளித்தது.

  67. மதியின் கட்டுரைகளுக்கு தயவு செய்து யாரும் (பார்பனர்களோ அல்ல்து பாலா போன்றவர்களோ) மறுமொழி இட வேண்டாம். இவனுகளுக்குன்னு ஒரு மொக்க கூட்டம் இருக்கு. அவனுகளே சொல்லுவானுக அவனுகளே ஜால்ராவும் அடிப்பானுக. நமக்கு நிறைய வேலை இருக்கு. ………

    subaabc07@gmail.com
    59.96.138.209

  68. //பிரிட்டீஷ் பாதிரிமார்கள் கட்டாய மதமாற்றம் செய்ய முற்பட்ட பொழு எதிர்த்து கேள்வி கேட்டது தவறு. அதனால் வந்த வினை இன்றைய பிராமண எதிர்ப்பு.//
    பிரிட்டிஷ்கரர்களுக்கு முழு உதவி செய்தது பார்பனர்கள் என்பது உலகறிந்த விஷயம்.
    எனக்கு தெரிந்தவரை பிரிட்டிஷ் பாதிரிமார்கள் கட்டாய மதமாற்றம் செய்ததாக வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் ஐரோப்பிய மிஷனரிகளால் கல்வி கற்பிக்கப்பட்டு பார்பனர்களுக்கு இணையாக சில சமயங்களில் அதற்கும் மேலான நிலையை அடைந்துள்ளவர்கள் ஏராளம். ஒருவேளை அதனால் வந்த வயிற்றெரிச்சலோ என்னவோ.

  69. உங்களுக்காக எங்கள் உறவினரின் பட்டியலைத் தந்து நிரூபிக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொருவரின் சொந்த வாழ்க்கையும் அவருடையது.

    பேர் வீட்டு விலாசம் கொடுக்க முடியும். ஆனால் ஒரு மனிதரின், ஒகுடும்பத்தின் வாழ்க்கையை வெளிச்சம் போட எனக்கு உரிமை இல்லை.

    நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டால் நாங்கள் அழவில்லை.

  70. இந்த திருச்சிக்காரனை எனக்கு நன்றாக தெரியும். இவர் வீட்டல் ஒரு திருமணம்கூட சாதிமறுப்புத் திருமணம் அல்ல.

    ///இரண்டு பெண்க‌ள் தாழ்த்த‌ப் ப‌ட்ட் பிரிவின‌ரைத் திரும‌ண‌ம் செய்து கொண்டு உள்ள‌ன‌ர்.///

    இது பச்சைபொய். அவர்கள் வீட்டிற்குள் தாழ்த்தப்பட்டவரை அனுமதிக்கவே மாடடார்கள். இவரைவிட தீவிரமான பார்ப்பன உணர்வுகொண்டவர்கள் அவர் வீட்டு பெண்கள்.

    பார்ப்பனர்கள் தண்ணீர்கேட்டால் அதற்கு அவர்கள் வீட்டிற்குள் இருந்து கொண்டுவந்து தருவார்கள். மற்றசாதிக்காரர்களுககு வெளியில்தான் தண்ணீர். இதுஅவரை நன்று தெரிந்த எல்லோருக்கும் தெரியும். ஆனால் இங்கு வந்து பச்சையாக புளுகுகிறார்.
    இன்னோரு செய்தி தனபால் என்கிற பெயரில் எழுதுபவரும் இவர்தான்.

  71. திருச்சிக்காரனை நன்கு தெரியும் என்கிறார்.

    திருச்சிக் காரனின் பெயர் என்ன?
    அவரது வயது என்ன?
    அவர் செய்யும் வேலை என்ன?
    அவரது முகவரி என்ன? முகவரி மிக முக்கியம்.

    இதை இந்த தளத்திலே தெரிவிக்க இயலுமா? அ

    ப்படித் தெரிவித்தால் யார் வேண்டுமானாலும் அப்படி அந்த முகவரியிலே போய் தெரிந்து கொள்ளாலாம்.

    அதோடு பலரும் திருச்சிக் காரனை சந்திக்கவும், அவனை திருத்தவும் முடியும் அல்லவா?

    எனவே நீங்கள் திருச்சிக்காரனின் பெயர், வயது, தொழில் முகவரி, இதை வெளிப்படையாக இந்த தளத்திலே தெரிவிப்பதுதான் அறிவு நியாயம் ஆகும்.

    மேலும் திருச்சிக் காரன் வேறு, திரு. தனபால் வேறு என்பதையும் சொல்கிறோம். .

  72. திரு பெயரிலி அவர்களே,

    ///இன்னோரு செய்தி தனபால் என்கிற பெயரில் எழுதுபவரும் இவர்தான்.///

    என் எழுத்து நடை வேறு,திருச்சிக்காரர் எழுத்து நடை வேறு.உங்கள் பகுத்தறிவை சிறிது பயன் படுத்தியிருந்தாலே நான் வேறு,திருச்சிக்காரர் வேறு என்று புரிந்திருக்கும்.

    மீண்டும் இருவர் எழுத்துக்களையும் ஆராய்ந்து பாருங்கள்.உங்களுக்கே புரியும்.

    உங்கள் பெயரை நீங்கள் பதியாததால் பெயரிலி என்று வந்துள்ளது.உங்கள் பெயர் என்ன?

  73. மகேஸ் விவரமில்லாத ஆளாக இருக்கிறீர்களே, நீங்கள் பெரிய பணக்காரராக, பெரிய தலைவராக இருந்தால் அவர்களே உங்கள் வீடு தேடி வந்து பெண்தருவார்கள்.
    நாங்கள் சாதியில்லாம் பார்ப்பதில்லை என்று பெருமையாகவும் சொல்லிக் கொள்வார்கள். நன்றாக காரியம் சாதித்துக்கொள்வார்கள். தன்னை முற்போக்காளராகவும் காட்டிக் கொள்வார்கள்.

    நீங்கள் சாதரணநபராக இருந்தால், உங்களுக்கு பெண் தரமாட்டார்கள். விளக்கம்தான் தருவார்கள். அம்பேத்கர் சொன்னார் இல்லியா பார்ப்பனர்களுக்கு பணம்தான் முக்கியம் என்று அதுதான் உண்மை.

  74. // விவரமில்லாத ஆளாக இருக்கிறீர்களே, நீங்கள் பெரிய பணக்காரராக, பெரிய தலைவராக இருந்தால் அவர்களே உங்கள் வீடு தேடி வந்து பெண்தருவார்கள்.
    நாங்கள் சாதியில்லாம் பார்ப்பதில்லை என்று பெருமையாகவும் சொல்லிக் கொள்வார்கள். நன்றாக காரியம் சாதித்துக்கொள்வார்கள். தன்னை முற்போக்காளராகவும் காட்டிக் கொள்வார்கள்.//

    பணக்காரர் பணக்காரருக்கு பெண் தருவார்.

    சாமானியர் சாமானியருக்கு தான் பெண் தருவார்.

    தமிழ் நாட்டில் யார் யார் , யார் யாருக்கு பெண் தருவர் என்று பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். மவுன்ட் ரோடு மகா விஷ்ணு குடும்பத்தினர் வீட்டுப் பெண் யாரை திருமணம் செய்து கொண்டார். அவர் சாதியை சேர்ந்த உடுப்பி ஓட்டல் சர்வரை திருமணம் செய்து கொண்டாரா?

    திருமண உறவுகளை நிர்ணயிப்பது பொருளாதாரமே என காரல் மார்க்ஸ் சொல்லி இருக்கிறார் அல்லவா ?

    பணக்கரருக்குத் தான் குடுப்பார்கள் என சொல்லும் நீங்கள், உங்கள் வீட்டுப் பெண்ணை ஒரு கூலித் தொழிலாளி அன்றாடங்க் காய்ச்சி , பிளாட் பாரத்திலே குடியிருப்பவருக்கு மனம் முடித்து தருவீர்களா?

  75. ///“ஆரியர்கள் சூதாடும் இனத்தினர். ஆரிய நாகரிகத்தின் மிக ஆரம்ப காலத்திலேயே சூதாட்டம் ஒரு விஞ்ஞானமாகவே வளர்க்கப்பட்டு, அதற்கெனத் தனியாகத் தொழில்நுட்பச் சொற்கள் கூட உருவாக்கபட்டிருந்தன.///

    உலகின் மிகப் பழமையான,மிகச் சிறந்த கலாச்சாரத்தை உலகிற்கு கொடுத்த இனமான ஆரிய இனம் சூதாட்டம் விளையாடிய போது,உலகில் பெரும்பாலான இனங்கள் காட்டு மிராண்டிகளாக,விளையாட்டைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாகவே இருந்திருப்பார்கள்.

    ///ஆரியர்களிடம் ஆண்-,பெண் உறவுகள் தளர்த்தியான முறையில் இருந்தன. ……………………………………………..

    விபச்சாரம் தாராளமாகவும் மிக மோசமான முறையிலும் நடைபெற்று வந்தது. விலங்குகளிடம் உறவு கொள்ளும் வழக்கமும் அவர்களிடம் காணப்பட்டது. இதைச் செய்தவர்களில் மிகவும் மரியாதைக்குரிய ரிஷிகளும் இருந்தார்கள்///
    .
    உலகில் முதன் முதலில் மிகச்சிறந்த, நாகரீகத்தையும்,
    காலாச்சாரத்தையும், வெளிப்படுத்தியவர்கள் நம் இந்திய ரிஷிகளாவர்

    நீங்கள் கூறுவது உண்மையானால்,இது நடந்த காலத்தில் உலகில் உள்ள மற்ற இனங்களில் வாழ்ந்தவர்கள் கண்டிப்பாக பன்றியைப் போல்,தன் தாயுடனும், மகளுடனும், சகோதரியுடனும், பாட்டியுடனும், இப்படி வரைமுறை இல்லாமல் உறவு கொண்டிருப்பார்கள்.மிகவும் அருவருக்கத்தக்க காட்டுமிராண்டி வாழ்க்கையையே வாழ்ந்திருப்பர்.அந்தந்தக்காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு இனத்தையும், நாகரீகத்தையும் ஒப்பிடும்போது எப்பொழுதும் இந்திய இனம் மிகச்சிறப்பான,முதன்மையான நாகரீகத்தை வெளிப்படுத்தினர்.

    ஒவ்வொரு இனமும் இப்படிப்பட்ட காட்டுமிராண்டி வாழ்க்கையிலிருந்தே கொஞ்சம்,கொஞ்சம்,நாகரீகமடைந்து இப்போதைய நிலையை எட்டியுள்ளன.

    இதில் நம் இந்து வேத நாகரீகமே,முதன் முதலில் மிகச் ச்சிறந்த நாகரீகத்தை வெளிப்படுத்தியது.

    நீங்கள் குறிப்பிடுவது போல் ஆரியர்களின் வாழ்க்கை இருந்த பொது உலகில் மற்ற பகுதியில் வாழ்ந்த இனங்கள் எத்தகைய நாகரீகத்தில் வாழ்ந்தனர் என்பதைக் கூறமுடியுமா?

    ஒரு நாகரீகத்தை,அதே காலத்தில் வாழ்ந்த மற்ற நாகரீகத்துடன் ஒப்பிடுவது தான் அறிவுடைய,பகுத்தறிவுடைய செயலாகும்.

  76. பல பெண்களுடன் பாலியல உறவு வைத்துக்கொண்டு அதைபத்தி சக நண்பர்களிடம் பெருமை பேசிகிட்டு தன்னுடைய தங்கைகளிடம்,மனைவியிடம் வீட்லருந்து வெளியில போன நேரத்திலிருந்து லேட்டா வந்த நேரத்தையும் கணக்கு பார்த்து
    செல்போன்ல பேசன நெம்பரெல்லாம் பார்த்து கேள்விகேட்டு எந்த நேரமும் சந்தேகம் புடிக்கரவனெல்லாம் நெத்தியில ரவ சாம்பல பூசிகிட்டு இந்து மதம் னு சொல்லி ஒழுக்கம் கலாச்சாரம்னு சொல்லி காதலை எதிர்கிற அயோக்கியர்களை முதலில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யனும்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading