தமிழ் ப்ரதானம் ஆனால்… பாரதியின் மாறுவேடம்

thiru.jpg 

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 16

நான்காவது அத்தியாயம்

“அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முற்றே உலகு”

என்று தொடங்கிய திருவள்ளுவர், தன்னுடைய 1330 குறள்களிலும் கடைசிவரை ஆதிபகவான் யார் என்று சொல்லாமலேயே விட்டுவிட்டார். இது, சுப்பிரமணிய பாரதிக்கு பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது.
அந்தக் கடுப்பு தாங்காமல், எடுத்திருக்கிறார் எழுதுகேலை-வடித்திருக்கிறார் பாடலை.
ஆதிபகவன் யாரென்றும், தன்னுடைய சிறப்புகள் எதனால் என்றும் தமிழ்த்தாயே ஒப்புதல் வாக்குமூலம் தருவதுபோல் எழுதி அடைத்தார் தமிழர்களின் வாயை.

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக் கணஞ் செய்து கொடுத்தான்.

மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்.

ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்”

இதில் மொத்தம் மூன்று ஆப்புகளை தமிழர்களுக்கு அடித்திருக்கிறார் சுப்பிரமணியார்.

1. வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் சிவன் என்று அறிவிக்கிறார்.
(பார்ப்பனரில் பாரதி அய்யர் பிரிவைச் சேர்ந்தவர். அய்யருக்கு சிவனே எல்லாம்.)

2. தமிழக்கு இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்று சொல்லப்படுவதைப் பயன்படுத்தி, அகத்தியர் ஒரு பார்ப்பனர் என்று அவருக்குப் பூணூல் அணிவிக்கிறார்.

3. நன்றாக செய்யப்பட்டதாக தன் பெயரிலேயே சொல்லிக் கொள்கிற (`ஸம்` என்றால் நன்றாக, ‘கிருதம்’ என்றால் செய்யப்பட்டது) ஸ்ம்ஸ்கிருதத்திலிருந்தே, தமிழ் தயாரிக்கப்பட்டதாக, ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்து ஆணியடிக்கிறார்.

‘கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய
மூத்தமொழி தமிழ் மொழி’

என்று மாறுவேடப் போட்டியில் அரிதாரம் பூசி வசனம் பேசியவர்கள் முகத்தில் கரியைக் குழைத்துப் பூசி விட்டாலும், அவரும் ஒரு மாறு வேடம் போடுகிறார்:

“தமிழ் நாட்டில் தேசீயக் கல்வியெனப்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசியம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுவதும் விரோதமாக முடியுமென்பதில் அய்யமில்லை. தேசபாஷை ப்ரதானம என்பது தேசீயக் கல்வயின் ஆதாரக் கொள்கை; இதை மறந்துவிடக்கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானல், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும்”

டாக்டர் நாயரின் ஞாபகம் வந்தவுடன் தான் போட்டிருப்பது மாறுவேடம் என்பதையும் மறந்து கோபத்தில் மேக்கப்பை கலைத்து விட்டு,

“இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர். நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடம் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆரியபாஷை விரோதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் அய்க்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயறிசி மேன்மேலும் ஒங்குக. எனினும், தமிழ் நாட்டில் தமிழ் மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக”

பாரதியின் இந்த வார்த்தைகள் மொழி குறித்து தமிழக பாரதீய ஜனதா தலைவர்களின் இப்போதைய கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது அல்லவா?

ஆம், தமிழ் மொழி குறித்த இந்த திரைக்கதை, வசனம் ‘பார்ப்பனிய ஜனதாவின்’ பரம்பரையின் தொடர்ச்சி.

-தொடரும்

13 thoughts on “தமிழ் ப்ரதானம் ஆனால்… பாரதியின் மாறுவேடம்

  1. முண்டம் மதிமாறன்,

    உனக்கு பாரதியை திட்டுவதை தவிர வேறு வேலை இல்லையா?எவ்வளவு கீழ்த்தரமான தெ மவனடா நீ?
    gsri500@yahoo.com IP: 124.125.104.32

  2. சபாஷ். பாரதியையும் விட்டு வைக்கவில்லையா நீங்கள். அவர் சொன்ன கருத்தில் என்ன தவறைக் கண்டுபிடித்தீர்கள். பாரதி ஆதி பகவன் என்று சொல்லவில்லை, ஆதி சிவன் என்றே சொல்கிறார். உங்களுக்கு தகுந்தபடி எடுத்துக் கொண்டு பேச என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்காதீர்கள்.

    தமிழ் தமிழகத்தில் சிறந்து விளங்க வேண்டும், சமஸ்கிருதம் வட இந்தியாவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் எல்லோரின் கருதும். இவை இரண்டுமே இந்தியாவின் மொழிகள். ஆரியர்களை பற்றி பேசும் நீங்கள், இஸ்லாமிய படைஎடுப்பல் நம் மீது திணிக்கப்பட்ட உருது-இந்துஸ்தானிதான் இந்தியாக உருவெடுத்தது என்பதை மறக்க வேண்டாம். வட மொழியை வெறுப்பதால் நஷ்டம் நமக்குதான். வேதங்களில் கொட்டிக் கிடக்கும் அளவில்லாத பொக்கிஷங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். கணிதம், வானவியல், பூகோளம் என அனைத்தைப் பற்றியும் நம் முன்னோர்கள் அக்காலத்திலேயே வட மொழியில் எழுதி வைத்துள்ளனர்.

    பாரதி சொன்ன கருத்துக்களில் எவ்வித பிழையும் இல்லை. உங்கள் பார்வையில்தான் பிழை உள்ளது. ‘சாதிகள் இல்லையடி பாப்பா, குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று சொல்லிய பாரதியையே இழிவு படுத்தும் உங்களை யாராலும் திருத்த இயலாது.

  3. இந்தப் பார்பனக்கேடிகளுக்கும் பார்ப்பன அடிமைகளுக்கும் நீங்கள் எவ்வளவுதான் ஆதாரத்தோடு எழுதினாலும் விளங்காது.

    பார்ப்பானைக் கேள்விகேட்டால், இவன் முஸ்லீமைக்காட்டுவான். சமஸ்கிருதத்தைக் கேள்விகேட்டால் உருது, இந்தி என திசைதிருப்புவான். இது இவர்களின் மிக வழக்கமான வாதிடும் முறை.

    டேய் குடுமி அம்பி,
    இந்த நாட்டுக்கு முகலாயன் வந்த கதையெல்லாம் இருக்கட்டும், தீண்டாமையை எவன் கொண்டுவந்தான் தெரியுமா? உம் பாட்டன் தான்டா?
    உம் பூணூல் முதல் ஸமஸ்கிருதம் வரை எல்லாம் தீண்டாமையின் அடையாளம் தான். நீங்கள் என்னதான் இந்து மதம் என்று கூவிக்கொண்டு, இந்த நாட்டு பெரும்பான்மை மக்களோடு மக்களாக புகுந்து கொண்டாலும், உங்களை சிண்டைப்பிடித்து வெளியே இழுத்துவந்து அம்பலப்படுத்தியே தீருவோம்.

    பாரதியைப்பற்றி தோழர்.மதிமாறன் எழுதிய இன்னபிற நூல்களையும் படித்துவிட்டு விவாதத்திற்கு வாடா உன்னைச் சந்திக்க நான் காத்திருக்கிறேன்.

    ஏகலைவன்.

  4. மேற்கண்ட எனது பிண்ணூட்டம், மேலே பிண்ணூட்டமிட்டுச் சென்றுள்ள இரண்டு அம்பிகளுக்கும் தான்.

  5. ஏகலைவனுக்கு,

    மீண்டும் தாங்கள் தவறு செய்கிறீர்கள். எந்த வேதத்திலும் ஜாதி என்ற ஒரு முறையே கிடையாது. 4 வர்ணங்கள் மட்டுமே உண்டு. அதுவும் பிறப்பால் அல்ல. செய்யும் தொழில் மற்றும் வாழும் வாழ்க்கை முறையை வைத்தே அது சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் நேர்ந்த அனைத்து தீண்டாமைக் கொடுமைகளும் மக்களால் உருவாக்கப் பட்டவை. வேதங்களால் அல்ல. அனைத்து தரப்பினரும் இந்த தவறை இழத்துள்ள போது, பிராமணர்களை மட்டும் சாடுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போதும் தீனடமைக் கொடுமைகள் தமிழகத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை செய்வது பிராமணர்கள் அல்ல.

    ஏதாவது சொல்வதாக இருந்தால் ஆதாரத்தோடு சொல்லுங்கள், ஆத்திரத்தோடு பேசி பயன் ஏதும் இல்லை.

  6. நண்பர் லெட்சுமி நாராயணன்,

    பிரம்மன் என்பவன் தான் மனிதகுலத்தினைப் படைத்தான் என்பது உங்கள் வேதம் எடுத்தியம்புகிற ஒன்று. மனிதனைப்படைப்பதற்கு முன்பே ‘தீண்டாமை’யையும் அவனே படைத்தான் என்பதற்கு சான்றுதான் உங்கள் வேதம் சொல்லுகிற, பிரம்மனின் தலையில் பார்ப்பானும், தோளில் சத்திரியனும், தொடையில் வைசியனும், காலில் சூத்திரனும் பிறந்ததாக பிதற்றுவ‌து. அவன் தலையிலிருந்து கால் வரை எங்கேயும் இடம் இல்லாததால் தான் ‘பஞ்சமர்’ என்று சொல்லப்படுகிற தலித் சமூகம் அரிக்குப் (அதாவது பெருமாளுக்கு) பிறந்ததாகவும் சொல்கிறது உமது வேதம். உண்மையில் அது வேத‌ம‌ல்ல‌ தீண்டாமை க‌ழித்த‌ ம‌ல‌ம்.

    த‌லித்துக்க‌ளை எப்ப‌டி இழிவுப‌டுத்துவ‌து என்ப‌தை எல்லாம் இன்றைய‌ ஆதிக்க‌சாதிவெறிய‌னுக்கு சொல்லிக் கொடுத்த‌து பார்ப‌னிய‌மும் அதன் வேத‌மும் தான். நாங்க‌ள் சாடுவ‌து பார்ப்ப‌னிய‌த்தைத் தான், பிறப்பால் மட்டும் பார்ப்ப‌ன‌ர்களாக இருப்பவர்களை அல்ல. எவன் ஒருவன் தன்னை ஒரு சாதி சார்புடையவனாக காட்டிக் கொள்கிறானொ, அவன் பார்ப்பனியனாகத்தான் இருக்கிறான் என்று பொருள். அதனடிப்படையில் மற்ற சாதிக்காரனைக் காட்டிலும் தன்னுடைய சாதி அடையாளத்தை மிகவும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வது பார்பனர்கள் தான். மனிதகுலங்களில் மாச்சர்யம் காட்டுகின்ற வேதமானாலும், பூணூலானாலும் இன்னும் எதுவானாலும் இந்த அடையாளங்களைக் கொண்டிருக்கிற, அனைத்து பார்ப்பனசாதிக் காரனையும் கடுமையாக அம்பலப்படுத்த நேரிடுகிறது.

    இன்றைக்கு சாதிவெறி பார்ப‌ன‌ர்க‌ளிட‌மிருந்து இற‌ங்கி அடுத்த‌ ப‌டிநிலையிலுள்ள‌ ப‌ல‌ சாதிக்கார‌னால் தீவிர‌மாக‌ க‌டைபிடிக்க‌ப் ப‌டுகிற‌போதுகூட‌, சாதிவெறிய‌ர்க‌ளின் புக‌லிட‌மாக‌ கோயிலும் பார்ப்ப‌ன‌க் கூடார‌மும்தான் இருக்கிறது. பெரும்பாலான‌ சாதிவெறி இழிவுக‌ள் கோயிலின் பெய‌ராலேதான் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகின்ற‌ன. இன்னும் பல கோயில்களில் தலித்துகள் அடித்து விரட்டப்படுகிறார்கள். அதனால்தான் இராம.கோபாலன் என்ற பார்ப்பன பொறுக்கியும் தாழ்த்தப்பட்ட மக்களுடைய கோயிலுக்குள் நுழையவிடாமல் துரத்தியடிக்கப்பட்டுள்ளான். இது அவர்கள் அனுபவித்த‌ துன்பத்தின் வெளிப்பாடுதானே?

    பார்ப்பான் என்று சொல்லுவதையே உம்மால் பொறுக்கமுடியவில்லையே, உங்கள் பாரதி ‘ஈனபறையன்’ என்று எங்களை இழிவுபடுத்தி எழுதினானே நாங்கள் இன்னும் அதிகமாக அல்லவா கோபப்படவேண்டும்.

    ஏகலைவன்.

  7. அய்யா லச்சுமி நாராயணா?
    வேதத்திலே சாதி இருக்குதுன்னு ஏகலைவன் எப்போ சொன்னார்?
    தீண்டாமையை ஒன் பாட்டன் கொண்டுவந்தான்னுதானே சொன்னார்?
    வேதத்திலே சாதி இருந்ததுன்னு ஒருவர் சொன்னாதானே அதை நீ மறுக்கணும்…திரிபுவாதிகளின் வழக்கமான தந்திரம்தான் உன்னிடம் தெரிகிறது..அதாவது…எதிர்ப்பக்கம் சொல்லப்படாத ஒன்றைச் சொல்லி அதற்கு மறுப்புச் சொல்லிவைப்பது..

    அது கிடக்கட்டும்…காதிலே ஈயத்தை காய்ச்சி ஊத்த சொன்ன மனு எனும் ஆரியன் /ஆரிய நலவிரும்பி சொன்னதுதானே தீண்டாமை..

    உலகம் முழுக்க பாப்பானுக ஒரே மாதிரிதான் பித்தலாட்டம் பண்றானுவ…கோவிலில் தமிழில் பாடணும் என்று குரல் கொடுத்தால் மசூதியிலே கேக்கமுடியுமாங்கறது…சமஸ்கிருதம் பத்தி பாரதி புளகாங்கிதம் அடஞ்சிருக்கானேன்னா…உருதுவக் கைகாட்டுறது..

    மாமி நடத்தை சரியில்லன்னா…குச்சிக்காரி மட்டும் யோக்கியமான்னு பாருவோய்ம்பானுவ போல..

    சின்னமருது

  8. ஏகலைவன் மற்றும் சின்னமருதுஅவர்களே,
    வேதங்களில் நீங்கள் சொல்வது போல் நான்கு வர்ணங்களும் பிரம்மாவில் இருந்து படைக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையே. ஆனால் அதைத்தாண்டி தாழ்த்தப்பட்டவர் என்ற எந்த பிரிவினையும் வேதத்தில் இல்லை. மனுச்ம்ரிதி என்பது வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு நீதி நூல். அது வேதம் அன்று. அதை எழுதியவர்கள் பிராமணர்களும் அல்லர். உன் பாட்டன் உன் பாட்டன் என்று தாங்கள் பிராமணரை மட்டும் தீண்டாமைக் கொடுமைக்கு காரணமாக சொல்வது வியப்பளிக்கிறது. அனைத்து சாதியினரும் இந்த தவறை இழைத்து உள்ளனர். இதை பிராமணர்கள்தான் உருவாக்கினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யார் செய்திருந்தாலும், தவறு, தவறே. அதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. அதே நேரம் இன்றைய நிலை என்ன என்பதே என் கேள்வி? கண்ணுக்கு கண் என்றால் நீங்கள் அனைத்து தரப்பினரையும் அல்லவா சாட வேண்டும். அதுவல்லவா நியாயம். பிராமணரை மற்றும் தூற்றுவது எவ்விதத்தில் நியாயம்? மேலும் உருது மற்றும் இந்தி பற்றி நான் சொன்னது வடமொழி நம் இந்திய மொழி என்பதை எடுத்துரைக்கவே தவிர நீங்கள் சொல்லும் திசை மாற்றும் நோக்கில் அல்ல.

    நீங்கள் கேட்கும், கேட்க விழையும் அனைத்து கேள்விகளுக்கும் என் பதிவில் விடை அளிக்கிறேன், தவறாமல் படியுங்கள்.

  9. ////வேதங்களில் நீங்கள் சொல்வது போல் நான்கு வர்ணங்களும் பிரம்மாவில் இருந்து படைக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையே. ஆனால் அதைத்தாண்டி தாழ்த்தப்பட்டவர் என்ற எந்த பிரிவினையும் வேதத்தில் இல்லை. மனுச்ம்ரிதி என்பது வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு நீதி நூல். அது வேதம் அன்று. அதை எழுதியவர்கள் பிராமணர்களும் அல்லர்.////

    லெட்சுமி நாராயணஅய்யரே,

    நான்கு வர்ணங்களையும் படைத்ததாகச் சொல்லப்படும் பிரம்மனைத்தான் நாம் தீவிரமாக விமர்சிக்கவேண்டும். அதற்குள்தான் பார்பன சதி மறைந்திருக்கிறது. அவன்தான் தீண்டாமையை உருவாக்கியவன். இந்த வேதங்களை புனிதமென்று கொண்டாடுபவன் யாராக இருந்தாலும், அவன்தான் சாதிக் கொடுமையை காத்துநிற்பவனாக இருக்கிறான்.
    அதனடிப்படையிலே பார்த்தால் வேதத்தை கவசமாகக் கொண்டு, அதில் நியாயப்படுத்தப்படுகிற பார்ப்பன அடையாளங்களான பூணூல் போன்ற அனைத்தையும் தீவிரமாக அடையாளப்படுத்துகிற பார்ப்பனர்களை விமர்சித்தால், இதற்கெல்லாம் காரணம் ‘மநு’தான் என்று திசைதிருப்புவது மோசடி.

    வேததுக்கெல்லாம் வேதமாக பார்ப்பனர்கள் மதிக்கின்ற, சாதிவெறியன் மநு எழுதிய ‘நீதிநூல்’ என்று நீங்கள் வர்ணிக்கிற ‘மநுஸ்மிருதி’யை நான் எரித்தால் நீங்கள் ஆதரிப்பீர்களா? அந்த அநீதிக்குப்பையை வைத்துக் கொண்டு என் பாட்டன் பூட்டனின் நாக்குகளை அறுத்ததையும், காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதையும், கண்களைத் தோண்டியதையும் எங்களால் எப்படி மறந்துவிடமுடியும்.

    ////உன் பாட்டன் உன் பாட்டன் என்று தாங்கள் பிராமணரை மட்டும் தீண்டாமைக் கொடுமைக்கு காரணமாக சொல்வது வியப்பளிக்கிறது. அனைத்து சாதியினரும் இந்த தவறை இழைத்து உள்ளனர். இதை பிராமணர்கள்தான் உருவாக்கினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யார் செய்திருந்தாலும், தவறு, தவறே. அதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை.////

    உம் பாட்டனுடைய கேவலங்களுக்கு ஆதாரமாவேண்டும்? வேறெங்கும் போகவேண்டாம், வேதங்களைவிடக் கேவலமான‌, மநு(அ)தர்மத்தைவிட அய்யோக்கியத்தனமான, இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் மட்டுமே எடுத்துக் கொண்டாலே போதுமானது.

    இன்று ஒட்டுமொத்த இந்துக்களின் கடவுளாக புரமொசன் செய்யப்பட்ட, ‘தாம் பொண்டாட்டியை தன் தம்பிக்கே கூட்டிக் கொடுத்த பேடி’ (என்று தன் பொண்டாட்டியாலே காறிதுப்பப்பட்ட மாமா..)அந்த‌ ராமா இருந்தானோல்யோ அவன், கண்மூடி தவமிருந்த‌ எங்கள் சம்பூகனின் தலையை சத்தமில்லாமல் வெட்டிப் போட்டானோல்யோ அதுக்கு என்ன சொல்றேள்.

    ‘வில்லும் அம்பும் தன் கரங்களின் நீட்சியே, முடிந்தால் மோதிப்பார்’ என்று ‘மகாபாரதக் காமடியன்’ விசயனுக்கு சவால்விட்ட எங்கள் ஏகலைவன் ஒரு வேடன் என்பதால், தன்மீது கொண்டிருந்த‌ குருபக்தியை நன்றிகெட்டத் தனமாக நயவஞ்சகமாக பயன்படுத்திக்கொண்டு அவன் கட்டைவிரலை வெட்டினானே ‘துரோனாச்சார்யன்’ எனும் உம் முப்பாட்டன். அது புனிதமானதா? தீண்டாமையின் வெளிப்பாடுதானே?

    இதோ இப்போது சிதம்பரம் கோயிலில் நடந்துகொண்டிருக்கும் போராட்டம் எதனால்? யாரால்? சாதாரண, ஏதுமில்லாப் பரதேசி, அனாதை சிவனடியார்.ஆறுமுகசாமி எனும் தள்ளாத பெரியவர், உன் உடன்பிறப்பான தீட்சிதக்கேடிகள் (தினமும் விபச்சாரமும் கற்பழிப்பும் கொலையும் நடத்தும் சிற்றம்பலமேடையில் தமிழ் பாடி வழிபட்டதற்காக) சிலரால் தொடர்ந்து தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டாரே, அந்த அக்கிரமங்களைச் செய்தவன் என்ன ஆதிக்க சாதிவெறி தேவனா? பாப்பான் தானே?

    பார்ப்பனியம் என்ற அடையாளமே இந்த மண்ணின் புணிதத்தைக் கெடுக்கவந்தது. உழைப்பாளி மக்களை தொடர்ந்து இழிவுபடுத்திக் கொண்டேயிருப்பது. என் சொந்த சாதிகாரனாயிருந்து, உம்பாட்டன் கொடுமைத் தாங்கமுடியாமல் மதம்மாறி முஸ்லீமாகப் போனவனை, கொல்லவும் அவன் வீட்டு பெண்களைக் கற்பழிக்கவும் தூண்டுகிற இந்த பார்ப்பன இந்து மதவெறிக் கும்பலை இந்த மண்ணைவிட்டு அகற்றுவதைத் தவிர வேறு வேலையில்லை எமக்கு.

  10. ஏகலைவன் அவர்களே, உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் என்னிடம் பதில் உள்ளது. ஆனால் தற்சமயம் நேரம் இல்லை. ஏனெனில் உங்களைப் போல் அல்லாமல் எனக்கு வேறு அலுவல்களும் உள்ளன. ராமன் கடவுள் என்பதால் நீங்கள் பழிக்கிறீர்களா இல்லை பழிக்கச் சொன்னதால் பழிக்கிறீர்களா என்பது தெரியவில்லை. எதுவாயினும், ராமன் சத்ரியன் அன்றி பிராமணன் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். ஏகலைவனின் விரல் துண்டிக்கப் பட்டது அவன் வித்தையை மறைமுகமாக குருவுக்கு தெரியாமல் கற்றான் என்பதால். மற்றும் உள்ள கேள்விகளுக்கு என் தமிழ்ப் பதிவில் நிதானமாக விளக்கம் அளிக்கிறேன், படித்து தெளிவுருங்கள். இப்போது விடை கொடுங்கள்.

  11. பொறிக்கி மதிமாறன் மற்றும் திராவிட வெறி நாய் ஏகலைவன்,

    பாரதியை திட்டுவடஹி விட்டு விட்டு பாரதியை விட தமிழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்களேன் சொறி நாய்களே.வந்துட்டானுங்க்க கருப்பு சட்டை பன்னிங்க.

  12. லெட்சுமிஅய்யரே!

    விவாதிக்கலாம் வானு கூப்பிட்டுவிட்டு இப்படி பாதியிலேயே பதுங்கப் பாக்குறியே!

    ஏதோ பெரிசா வேலையிருக்குங்கிறியே, உண்டு கொழுக்குற ஒனக்கே வேலையிருக்குன்னா, உழைத்துக் கொடுக்குற எனக்கு எவ்வளவு வேலையிருக்கும்? அப்படி என்னதான் பொல்லாதவேலை உனக்கு.

    என்னா பெருசா ‘என்னோட பதிவு’ பதிவுன்னு பிலிம் காட்டுற. ‘சோ’ துக்ளக்கில் கழிந்து வைக்கிற மலத்தை அப்படியே தொடச்சி எடுத்துகிட்டுப் போயி ஆங்கிலத்தில் ‘பதிவு’ன்னு போட்டுவைக்கிற. அதுக்கு ஒம்பக்கத்துவூட்டு அம்பிகள் ‘ஆஹா!… ஓஹோ!… பேஷ் பேஷ்!’ன்னு கமண்ட் போட்டா பதிப்பிக்கிற, நான் வந்து ஏதாவது போட்டாக்கா ‘இது உனக்கு உரிய இடம் இல்ல’ங்குற. ஒம்பர்ப்பன பூணூல‌ இணையம்வரைக்கும் இழுத்துவுட்டுக்குற. இதுதான் அங்கேயும் நீ ‘வெளக்குற’ லட்சனம்.

    சும்மா கோவம் மட்டும் வெச்சிருந்தா போதாது அம்பி! எதுவாயிருந்தாலும் இங்கேயே சொல்லு.

    ஏகலைவன்.

  13. திரு. லட்சுமி நாரயணனுக்கு சில கேள்விகள்..

    1) உங்கள் வீட்டு பெண்களை பள்ள்ர்,பறையர் வீட்டில் சாதி பார்க்காமல் (எல்லா விதத்திலும் நல்ல பையனாக இருந்தால்) நல்ல கட்டிகொடுப்பீர்களா?? குறைந்த பட்சம் உங்கள் பெண் சம்மதமாவது கேட்பீர்களா???

    2) உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கோவிலில் பூசாரி வேலை காலியாக உள்ளது …ஒரு தாழ்த்தப்பட்டவர் மற்றும் ஒரு பார்பனன் ….( இருவரும் சம தகுதி உள்ள்வர்கள் ) .. உங்களுக்கு தேர்வு செய்யும் அதிகாரம்.. யாரை தேர்வு செய்வீர்கள்??

    3) ( பிறர்) மலம் அல்லுவதற்கு வாய்ப்பு வாந்தால் செய்வீர்களா? இல்லை என்றால் ஏன்? ….

    குறிப்பு: இங்கு யாரும் அதற்காக ஏங்கவில்லை .. கேள்விகள் உங்களின் பதிலை மட்டும் எதிர் பார்த்து கேட்கப்படுகிறது….

    சரவணன்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading