கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கே.பி.சுந்தராம்பாளுக்கு விழா எடுப்பதைப் பற்றி திரு.கலைவேந்தன் என்பவர் எனக்கொரு கேள்வி அனுப்பியிருந்தார்.
அதற்கான பதிலை நான் எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தேன் (https://vemathimaran.com/2008/08/04/article104/)
அந்தப் பதிலை மார்க்சிஸட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. டி.கே. ரங்கராஜனுக்கு திரு.கலைவேந்தன் அனுப்பி வைத்திருக்கிறார். அதற்கு திரு. ரங்கராஜன் அளித்த பதிலும், பதிலுக்கு திரு.கலைவேந்தன் அளித்த பதிலும்.
திரு.கலைவேந்தன் இதை நமக்கு அனுப்பியிருந்தார். அதை உங்கள் பார்வைக்காக வெளியிட்டிருக்கிறேன்.
அன்பும், பாசமும் உள்ள கலைவேந்தன் அவர்களுக்கு,
எவரையும் விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் கடமையை நீங்கள் செய்திருக்கிறீர்கள். நடிகவேள் எம்.ஆர். இராதாவைப் பற்றிக்கூட இறுதிக் காலத்தில் அவருடைய நடைமுறை பழக்க வழக்கங்களில் பெரிய மாறுதல் வந்ததாகவும் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
அது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது.
எப்படியிருப்பினும் நடிகவேள் சுயமரியாதை
கருத்துக்கு செய்த பணி என்றும் அனைவராலும் பாராட்டப்படும்.
அதேபோல், கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றி விவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை.
ஆனால், சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் அவர் தன் பணியைச்செய்திருக்கிறார் என்பதை தங்களுடைய மடலில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
அன்றையத் தேவை அதுதான். அதை அவர் சரியாக செய்திருக்கிறார்.
மதனைப் பற்றிநான் எதுவும் கூறவிரும்பவில்லை.
வாழ்த்துக்கள்
நன்றி
வணக்கம்
டி.கே. ரெங்கராஜன்
நண்பர் டி. கே. ரங்கராஜன் அவர்களுக்கு,
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இதுபோன்ற எளியோரின் மின்னஞ்சல்களை கவனத்தில் கொண்டு பதிலளித்ததற்கு நன்றி! பாராட்டுக்கள்! நான் மிகத்தாமதமாக பதிலளிக்க நேர்ந்ததற்கு மன்னிக்கவும்.
உங்களுடைய பதில் தெளிவில்லாமலும் பொறுப்பற்றதாகவுமே இருக்கிறது.
************கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றி
விவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை. ஆனால், சுதந்திரப் போராட்டக்
காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் அவர் தன் பணியைச்
செய்திருக்கிறார் என்பதை தங்களுடைய மடலில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
அன்றையத் தேவை அதுதான். அதை அவர் சரியாக செய்திருக்கிறார். ****************
ஏகாதிபத்திய எதிர்ப்பில் சுந்தராம்பாள் ஈடுபட்டதாக நான் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். நான் அவ்வாறு எங்கேயும் குறிப்பிடவில்லை, அது உங்களது கற்பனையில் மட்டுமே உதித்தது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
உங்களுடைய பார்ப்பன சேவகத்தை நான் விமர்சிக்கவில்லை. அது உங்களது உரிமை. ஆனால், எம்.ஆர்.ராதாவை விட்டுவிடுங்கள் என்பதுதான் எமது கோரிக்கையும் தோழர் மதிமாறனுடைய கோரிக்கையுமாகும்.
பாரதி குறித்த விமர்சனங்களுக்கே இன்னும் மழுப்பல்களையும் கள்ள மவுனத்தையுமே பதிலாகத்தரும் உங்களது கட்சியினர் சுந்தராம்பாள் விடயத்தில் எத்தகைய கருத்தாக்கத்தில் இருப்பார்கள் என்பதில் எனக்கேதும் சந்தேகம் இல்லை. நான் தெளிவு படுத்த விரும்புவது மற்றவர்களுக்குத்தான்.
நல்லவேளையாக “விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கெல்லாம் விழா எடுப்போம்” என்று வீர சவர்க்கருக்கோ அல்லது நாற்பது பேரைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாயிக்கோ விழா எடுக்காமலிருந்தால் சரி.
என்னைப்பொருத்தவரை பாரதிக்கு, விழா எடுப்பதற்கும் சவர்க்கருக்கு விழா எடுப்பதற்கும் வேறுபாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
தங்களது மேலான பதிலை நாடி நிற்கும்,
– கலைவேந்தன்.
இந்தப் பதிலுக்கு எந்த பதிலும் திரு. ரங்கராஜன் அளிக்கவில்லை.
*
நாம எழுதியதால் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்லாமலும் இருக்க முடியாது; பிறகு இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடவில்லை தமுஎச.
ஓகஸ்ட்9, 2008
One thought on “கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்”