தூக்கு ரத்து நிச்சயம் விடுதலையே லட்சியம்

FL26_PROFILE_SATHA_1512111m

தமிழர்கள் நெஞ்சில் நம்பிக்கை விதைத்ததற்கு நன்றி.
தமிழர்கள் கண்ணீர் மல்க, கரம் குவித்த ஆனந்த நன்றி அடுத்த சில மணிகளில்..

காலை 9.30 மணிக்கு face book ல் எழுதியது.

*

ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து. மகிழ்ச்சி. நன்றி.

3 வரின் விடுதலைக்காக உழைப்போம்.

நீதிபதிகளும் 3 பேர் விடுதலை குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளனர் என்பது இந்த தீர்ப்பைப்போலவே மிக மிக முக்கியமானது.

இன்று 12 மணியளவில்  face book ல் எழுதியது.

image_preview

Do Anything என்ற இளையராஜாவின் உலகப் புகழ் பெற்ற உன்னத இசை மூலமாக, மூவர் தூக்கு ரத்தான மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
http://www.tamilv2.com/Download%20SPL%20Collections/How%20To%20Name%20It/10%20-%20Do%20Anything%20-%20Www.TamilKey.Com.mp3

மதியம் 1 மணிக்கு face book ல் பதிவிட்டது.

Karunanidhi.Jayalalitha

தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி யாருக்கு ?

மந்திய காங்கிரஸ் அரசை நிர்பந்த்தித்து, வேண்டிக் கேட்டுக் கொண்டு அல்லது கூட்டணி நிபந்தனையாக ‘ராஜிவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும்’ என்று கலைஞரின் முயற்சியால் விடுதலையும் செய்யப்பட்ட பிறகு 39+1=40 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுமா?

இல்லை,
மத்திய அரசை முந்திக் கொண்டு தமிழக முதல்வர் ராஜிவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து 39+1=40 தொகுதிகளிலும் வெற்றியை அள்ளிச் செல்வாரா?
பார்ப்போம்.

மதியம் 2 மணிக்கு face book ல் எழுதியது.

PRW_dd_happy-faces-high-res

மரியாதைக்குரிய நீதிபதி சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள், மூவர் உயிர்களை மட்டும் காக்கவில்லை; இந்தத் தீர்ப்பு மாறாக இருந்திருந்தால் செங்கோடி, முத்துக்குமார் போல், பலர் தங்கள் உயிர்களை தியாகம் செய்திருப்பார்கள்.

அந்த உயிர்களையும் காத்த நம் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நீதிபதிகளுக்கு நம் நன்றியை மீண்டும் மீண்டும் தெரிவிப்பதின் மூலம் நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.

மாலை 6 மணிக்கு face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!

முல்லைப் பெரியாறு, மூவர் தூக்கு: மரியாதைக்குரிய நீதிபதி தாமஸ்

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

‘தினகரன்’ மாற்றம், நம்ப முடியாத அளவிற்கு உண்மையாக இருக்கிறது

5 thoughts on “தூக்கு ரத்து நிச்சயம் விடுதலையே லட்சியம்

  1. //TN cabinet decides to release the 3. JJ overtook MK//பார்ப்பன அரசு விடுதலை செய்து விட்டது.. உங்கள் பேராசிரியர் சுபவீ அரசு இருந்தால் என்ன செய்திருக்கும் என்று அதையும் உங்கள் ஃபேஸபுக்கில் எழுதிவிடுங்களேன்…

  2. இல்லை எழுதுவோம்…
    http://mathimaran.wordpress.com/2014/01/23/surprise-742/#comment-12570
    // தமிழர்கள் நெஞ்சில் நம்பிக்கை விதைத்ததற்கு நன்றி.
    தமிழர்கள் கண்ணீர் மல்க, கரம் குவித்த ஆனந்த நன்றி அடுத்த சில மணிகளில்..

    காலை 9.30 மணிக்கு face book ல் எழுதியது.//

    தமிழன் என்றால் செண்டிமெண்டல் இடியட்ஸ் என்று டெல்லி வாலாக்கள் சொல்வது உண்மை தான்.

    சாதசிவ கவுண்டர் படத்தை போட்டு . நன்றி யாருக்கு சொல்கிறீர்கள். எதற்கு நன்றி..

    நடந்திருப்பது என்ன ? தமிழர்கள் ஆகிய நமக்கு சூடு சுரணை மானம் ஈனம் வெட்கம் ரோசம் எதாவது உள்ளதா?

    சு சாமி , ச சாமி உள்ளிட்ட பலர் மேல் கொலை பழி குற்றச்சாட்டு விசாரிக்கபடாமல் இருக்கு. வேண்டுமென்றே சம்பந்தம் இல்லாத சிலரை தூக்கிலிட்டால் வேலை முடிந்தது சாமிகள் & கோ தப்பித்து விடலாம் என்று தானே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது..

    இப்போதும் விடுதலை பற்றிய செய்தியில் இருப்பது என்ன? ராஜிவ் காந்தி குற்றவாளிகள் விடுதலை..

    காமேடியாக இல்லையா.. குற்றவாளையை ஏன அய்யா விடுதலை செய்யவேண்டும் ? நிரபராதி என்று அல்லவா விடுதலை செய்யவேண்டும் ? அப்படி செய்தால் அப்போது குற்றம் செய்தது யார் என்ற கேள்வி வரும்.. சாமி & சோ மாட்டும்.

    சதி என்னவென்றால் .. விடுதலை என்று சொன்னலே தமிழனுக்கு போதும். அதின் பின்னனி குறித்தெல்லாம் பார்க்க தமிழனுக்கு மூளை இருக்க என்ன ?. நாளையே தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு..இது ஒரு தவறான முன் உதாரணம் என்றூ சொல்லி வழக்கை நடத்தினால்.. இந்த தீர்ப்பு ரத்தாகி கழுத்தில் தூக்கு கயிறு இருகும்.

    இப்போது செய்யவேண்டியது வழக்கை மறு விசாரணைக்கு எடுக்க வேண்டும். ரகோத்தமன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்கு மூலம் வாங்கி, இவர்கல் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்ய வேணுடும்…

    மேலும் இவர்கள் சிறையில் கழித்த ஆண்டுக்கும் இழந்த வாழ்க்கைகும் ஈடாக தலைக்கு 50 கோடியாவது நட்ட ஈடு தரவேண்டும். அந்த தொகையும் தவறாக வழக்கை நடத்தி, இவர்களை சிக்க வைத்த அதிகாரிகளின் சேமிப்பு சம்பளம் தனிப்பட்ட/ குடும்ப சொத்தில் பறிமுதல் செய்டு ஈடு கட்ட வேண்டும்.

    அப்போது தான் இனி தவறாக வழக்கு நடத்த எந்த அதிகாரியும் நினைக்க கூட மாட்டர்.

    இதை விடுத்து.. இப்படி கண்கள் பணீத்தால் சிரமம் தான்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading