அதிகமில்லை ஜென்டில்மேன் வெறும் ‘ஆறே’ மாதம் தான்
4 ஆண்டுகள் 6 மாதம் வரை இவுருதான் நல்லவரு.. வல்லவரு..என்றும்
அவுரு அல்லது அவுங்க வேஸ்ட்.. அரசியல் வியாபாரி.. என்பதாகவும் தொடர்ந்து மாநாடு, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என்று மிகத் தீவிரமாக இயங்கி விட்டு,
இப்போது அப்படியே தலைகீழாக மாற்றி இயங்குவதால் அந்த நான்கரை ஆண்டுகள் இயங்கியதை முற்றிலுமாக அழித்துவிட வேண்டியிருக்கிறது.
இதில் எத்தனை தொண்டர்களின் உழைப்பு, பணம், வாழ்க்கை வீணாகப் போயிருக்கிறது.
எப்படி மாற்றிப் பேசினாலும் தொண்டர்கள் ஒத்துக் கொள்ளத்தான் போகிறார்கள் என்பதால் அவர்களை ஆட்டு மந்தையைப்போல் ஆட்டி வைப்பது என்ன நியாயம்?
அதனால் எல்லாக் கட்சிகளும் இனி தேர்தலுக்கு 6 மாததிற்கு முன்பு மட்டுமே கட்சி வேலைகளைத் தொடங்கி நடத்தினால் போதும்..
கண்டிப்பாக எளிய தொண்டர்களின் உழைப்பு, நேரம், பணம் அவர்களின் வாழ்க்கையே மிச்சமாகும்.
பெரியார் கருத்துகள் வேகமா பரவ..
அம்மா வியூகமும் காங்கிரஸ் – கம்யுனிஸ்ட்டுகளின் கையறுநிலையும்
தேர்தல்: மதவாதக் கட்சிக்கு எதிர்ப்பு ஜாதியக் கட்சிக்கு ஆதரவா?
ஹி ஹி உண்மை . கடைசி ஆறு மாதங்கள் போதும்